காத்தான்குடி யாஹூ குழுமம் அகவை இரண்டில் கால் பதித்து இருக்கும் நேரத்தில்
எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கடல் கடந்து வாழும் அனைத்து உறவுகளையும்
ஊருடன் இணைத்து வைத்ததில் அதன் பங்களிப்பு மிகக் காத்திரமானது.
புதுப் பொலிவுடன் தொடங்கப்பட்டிருக்கும் kattankudi.info மேலும் வளரவும் எமது பிராத்தனைகள்.
இந்த இடத்தில் சில விடயங்களைக் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்.
காத்தான்குடி யாஹு குழுமம் தனக்கென சில மனப்பதிவுகளைக் கொண்டிருக்கின்றது.
அவற்றை பொது நிலைப்படுத்திப் பொருத்திப் பார்க்கிறது.
சில வேளை இணைய முயற்சிகள் குறைவாகவே நடை பெற்றுக் கொண்டிருப்பதால் அவை மேலெழும்பியவையாக இருக்கலாம்.
முதலில்,அகவை இரண்டு என்று தலைப்பிட்டு காத்தான்குடி யாஹு குழுமம் சார்பாக எழுதப்பட்டிருந்த
மடலில் தமது இணைய லோகோவைக் கூட வெட்கமில்லாமல் சிலர் பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு கேள்வியைத் தான் இங்கு முன் நிறுத்த விரும்புகின்றோம்.
காத்தான் குடி வரவேற்பு முகப்பு சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியுடன் அமைக்கப்பட்டது.
அதற்காக அவர் உரிமை கோரி அந்த நிலத்தைச் சொந்தம் கொண்டாட முடியுமா என்ன?
காத்தான் குடி யாஹு குழுமத்தை நாம் அறிந்த வரையில் தெரிந்த வரையில் பழகிய வகையில் பல்கலைக்கழகம் சென்று
paper qualification உள்ள சிலரும் இணைந்து தான் நடத்துகிறார்கள்.
பின் ஏன் இப்படி முட்டாள்தனமாக பதிவுகளை இடுகிறார்கள் என்று தெரியவில்லை.
காத்தான் குடி என்றாலே இப்போது அடையாள சின்னமாக நினைவுக்கு வருவது வரவேற்பு பதாதைதான்.
இதைத் தான் அவர்கள் லோகோ என்றால் உங்களிடம் இருக்கும் இன்ஜினியர்மாறிடமாவது கொஞ்சம் கேக்கக் கூடாதா…?
ஊரின் பொதுவாக் இருக்கும் லோகோவைத் தூக்கி தளத்தில் வைத்து விட்டு அதைப் பயன்படுத்தாதீர்கள் என்று ஒப்பாரி வைத்தால் ….?
வடிவமைத்த இன்ஜினியர் சொன்னால் கூட கொஞ்சம் யோசிக்கலாம்.
இன்றைய இணைய வளர்ச்சி என்பது எங்கொ இருக்கிறது.
அவற்றை இன்னும் சரியாக நாம் பயன்படுத்தவே தொடங்கவில்லை.
இணையத்தில் எமது இயக்கம் என்பது .000000000000000000001 என்ற கணக்கினை விடக் குறைவானது.
ஒரு தளத்தில் சமூகத் தேவை என்பது பன்முகத்தன்மையானது. ஒரு தனி நபரின் செயற்பாடுகளோ அல்லது குழுவின் இயக்கமோ மொத்த சமூகத்தின் தேவையையும் பூர்த்தி செய்வதாகாது.
அதே தளத்தில் பல நோக்கங்களுக்காக பலர் இயங்குவது என்பது யதார்த்தமானது.
தாம் இயங்குவது ஒன்று தான் சமூகத்தின் முழுத் தேவையையும் நிவர்த்திக்கும் என்பது அதிகாரக் கற்பனை.
நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.
எடுத்துக் காட்டாக சகோதரர் ஹிஸ்புல்லாஹ் நினைக்கிறார் தான் மாத்திரம் போதும்
காத்தான் குடி அரசியலை முன் எடுத்துச் செல்லவும் முன் நிறுத்தவும்.
தன் மகளுக்கு ஆண் என்ற நிலையில் தனதன்பு மாத்திரம் போதுமானது என்பது தந்தையின் நினைப்பு.
எட்டு வயதில் இது பொருந்தலாம், ஆனால் பதினெட்டு வயதில்?
இதில் உருவாகும் பிழையான வடிவங்களைத் திருத்தவே நாம் முற்படவேண்டும்.
அதிகாரம் கிடைக்கின்ற போதும் சரி அதனை எடுத்துக் கொள்கின்ற போதும் சரி
மனிதனின் நினைப்பு என்பது இதுவாகவே இருக்கிறது.
ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றுப் பார்வையும் கண்ணோட்டமும் உண்டு.
நீங்கள் நடத்தும் இணையத்தளமான info வைப் பற்றிய எமது பார்வை என்பது ஊரில் நடக்கும் வெள்ளிக் கிழமை ஜும்மாக்களை ஒலி ஏற்றம் செய்வது சரி.
ஏனைய இணையத்தளங்களில் வரும் கட்டுரைகளை நீங்கள் ஏன் மறு பதிவேற்றம் செய்கின்றீர்கள்…….???
-இதற்குள் நீங்கள் எங்களது கட்டுரைகளை பிறர் வெளியிடுகிறார்கள் என்று சொல்வதை ஒரு புறம் வைத்து விடுவோம்-.
தேனி இணையம் அதற்கென்று ஒரு தளம் வைத்திருக்கின்றது.
தினகரன் நாளாந்த பத்திரிகை அதற்கென்று ஒரு தளம் வைத்திருக்கின்றது.
ஏன் வார உரைகல் கூட அதற்கென்று ஒரு தளம் வைத்திருக்கின்றது.
புதிய நாளை கூட அதற்கென்று ஒரு தளம் வைத்திருக்கின்றது.
இதில் வருவதையெல்லாம் தொகுக்கவா நீங்கள் இணையம் நடாத்துகிறீர்கள் ?
எல்லாவற்றுக்கும் ஒரு நியாயம் இருக்கிறது.
ஒரு மாற்றுப் பார்வை இருக்கிறது.
நாம் மாத்திரம் தான் சரி என்பது தான் மிகப் பிழை என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.
பல் வகைமை, பன்மைத்துவம் என்பதன் அர்த்தம் அதன் நோக்கங்களையும் தேவைகளையும் அறிந்து கொள்வதில் அல்லது உணர்ந்து கொள்வதில் அல்ல, அவற்றைப் புரிந்து கொள்வதில் தான் இருக்கின்றது.