– கலாநிதி முத்துகிருஸ்ணா சர்வானந்தன் பிரதம ஆய்வாளர், அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகம், பருத்தித்துறை
ஒஸ்லோ சமாதான ஆய்வு நிறுவனத்தில் ஜூலை 27, 2009 ஆம் திகதி நிகழ்த்திய விரிவுரை. திருத்தங்களும், கருத்துக்களும் மற்றும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன: sarvi@pointpedro.org
1. அறிமுகம்
1948 ஆம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பின்னர் பல முரண்பாடுகள்: 1972 முதல ஆயுத முரண்பாடு என 25 வருடங்களுக்கும் (ஜூலை 1983 – மே 2009) மேலாக நீடித்த மோசமான சிவில் யுத்தத்தில் இருந்து இலங்கை, மெதுவாக ஆனால் நிச்சயமாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நீண்ட கால சிவில் யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட மனித, உடைமை, சுற்றாடல் மற்றும் உளவியல் ரீதியான இழப்புக்கள், விசேடமாக பாதிக்கப்பட்ட கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அளவிட முடியாததுடன், பல தலைமுறைகளுக்கு நீடிக்கக் கூடியது: இருப்பினும் சில எண்ணிக்கையிலான மற்றும் தரத்திலான மதிப்பீடுகள் உள்ளன.
இந்த கொள்கைச் சுருக்கத்திற்கான நோக்கம் பரந்த அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை கட்டமைப்புக்களாலான எல்லைக் கோடுகளை தயாரித்து முரண்பாட்டு பிராந்தியங்களை (கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள்) சாம்பலில் இருந்து மீளக்கட்டியெழுப்புதலாகும். இது விசேடமான துறைகள் அல்லது உப துறைகள், தந்திரோபாயங்கள், கொள்கைகள், நிகழ்ச்சிகள் அல்லது செயற்றிட்டங்களை இலக்காகக் கொண்டதல்ல. எதிரிடையாக, அது முரண்பாட்டு பிராந்தியத்தில் பின்தொடரவேண்டிய அரசியல் மற்றும் பொருளாதார பாதைகளை பட்டியலிடுகின்றது. அத்துடன் தேசிய அரசாங்கம் விரைவான மீளக்கட்டியெழுப்புதலை உருவாக்குவதற்கான சூழ்நிலையையும் உருவாக்கிக் கொடுக்கும். முரண்பாட்டு பிராந்தியத்தின் பொருளாதார உயிர்ப்பித்தல், சந்தேகமின்றி தேசிய பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
நாசகரமான யுத்தத்தின் பின்னர் தொடர்ச்சியான கவனம் மற்றும் பொருளாதாரம் ஊடாக வெற்றிகரமாக புனர்நிர்மாணத்தை அடைந்த நாடுகளுக்கு ஜப்பானும், ஜேர்மனியும் இரண்டு பிரதான உதாரணங்களாக இருக்கின்றன. ஏகாதிபத்திய ஜப்பானும், நாசிச ஜேர்மனியும் உலகில் அவர்களது மதிப்பிற்குரிய புவியியல் பிராந்தியத்திற்கு இராணுவ ரீதியான பாதையில் செல்வாக்கு செலுத்துகின்றன. அதேவழியில், தமிழீழ விடுதலைப் புலிகளும் (எல்.ரி.ரி.ஈ அல்லது வெளிநாட்டவருக்கு “தமிழ் புலிகள்”) கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களை இலங்கையிலிருந்து பிரிப்பதற்கு இரக்கமற்ற, கருணையில்லாத யுத்தத்தை நடத்தினர். இதன் விளைவுகள் தமிழ் சிறுபான்மை இனத்தாருக்கு விசேடமாகவும், மற்றும் இலங்கை முழுவதுக்கும் பாரிய அழிவுடையதாக இருந்தது. இருப்பினும், ஜப்பானிய மற்றும் ஜேர்மன் இராணுவ நடவடிக்கை, நாடுகளுக்கு இடையிலான யுத்தத்திலேயே ஆதிக்கத்தை செலுத்தியது. எல்.ரி.ரி.ஈ பிரிவினைவாதிகளின் யுத்தம் நாட்டுக்கு உள்ளே நடந்ததாகும். எவ்வாறாயினும், எல்.ரி.ரி.ஈயினரின் யுத்தமானது இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான நாட்டுக்கு உள்ளான யுத்தம் என விவாதிக்கப்பட்டாலும், அதன் பிரதான நோக்கம் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தனித்தமிழ் தேசிய நாட்டை இலங்கையில் உருவாக்குவதேயாகும்.
எல்.ரி.ரி.ஈயினர் செயற்பட்ட முறையானது கம்பூச்சியாவில் (தற்போதைய கம்போடியா) 1970களின் பிற்பகுதியில் நிலவிய பொல்பொட் ஆட்சிக்கு இணையானதாகும்.
மோசமான யுத்தத்தின் தேய்வு மற்றும் எல்.ரி.ரி.ஈயினரின் தொடர்ச்சியான பாரிய தோல்விகள் மற்றும் அதன் இராணுவ மற்றும் அரசியல் தலைமைத்துவத்தை இல்லாது செய்தல் என்பவற்றின் பின்னர் இலங்கை முரண்பாட்டுக்கு பின்னரான அத்தியாயத்திற்குள் நுழையும் நிலையில், இது சுயசோதனைக்கான தருணமாகும். சுயவிமர்சனம் மற்றும் தமிழ் சமூகத்தின் பச்சாதாபம் என்பன தற்போது சதுப்புநிலத்திற்கு வெளியே வந்துள்ளன. இரண்டு சாத்தியமான வழிகள்: விசேடமாக தமிழ் சமூகத்திற்கும் மற்றும் முழு இலங்கைக்கும் உள்ளன. ஒன்று இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஜப்பானும், ஜேர்மனியும் கையாண்ட வழிமுறை. மற்றையது கம்போடியாவின் கெமரூச் ஆட்சிக்கு பின்னர் பின்பற்றப்பட்ட வழிமுறை.
இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஜப்பானும், ஜேர்மனியும் அஹிம்சை சட்டவிதிகள் மற்றும் ஜனநாயகத்தின் மீது திடமான பற்று மற்றும் கடினமாக வேலை செய்தல் என்பவற்றை பின்பற்றி சாம்பலில் இருந்து உயிர்த்து வந்தன. இதன் பேறாக ஜப்பானும், ஜேர்மனியும் குறுகிய சுழற்சியில் உலகின் பொருளாதார மையங்களாக உருவெடுத்தன. மறுபக்கத்தில் 1979 கெமரூச் ஆட்சிக்கு பின்னரும் மற்றும் 1989 வியட்நாம் படையெடுப்புக்கு பின்னரும் கம்போடியா ஜனநாயகமின்மை, ஊழல், சுயநல சலுகைகள் மற்றும் குறைந்த அளவு அதிகாரத்தன்மை என்பவற்றுக்கு ஆளாகியிருந்தது. எனவே தொடர்ந்தும் உலகின் வறிய நாடுகளில் ஒன்றாக அது உள்ளது. இருப்பினும், யுத்தத்திற்கு பின்னர் ஜப்பான் மற்றும் ஜேர்மனியில் செழுமை பிரதிபலனாகவும், கம்போடியாவில் ஏழ்மை பிரதிபலனாகவும் காணப்படுகின்றது.
விசேடமாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாண மக்களும் மற்றும் முழு இலங்கையும் இவ்வாறான இரண்டு வகையான யுத்தத்துக்கு பின்னரான மாறுபட்ட பிரதிபலிப்பை காட்டியுள்ள நாடுகளின் வரலாற்று அனுபவங்களில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும். இயற்கையாகவே, இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஜப்பான் மற்றும் ஜேர்மனி ஆகிய இரண்டு நாடுகளினாலும் பின்பற்றப்பட்ட வழிமுறைக்கு ஆதரவாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் விசேடமாகவும், முழுஇலங்கையும் யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் (இன்னும் முரண்பாட்டுக்கு பின்னரான காலமாக மாறவில்லை) பின்பற்ற வேண்டும் என நான் வாதிடுவேன்.
2. தமிழ் அரசியல்
வரலாற்று ரீதியாக, தமிழ் சமூகத்திற்கு மத்தியில் அரசியலானது மிக குறுகிய நோக்கத்தில் மொழி சார்ந்தாகவும், மத தேசியவாதம் மற்றும் சுதந்திரம் என்பவற்றை நோக்கமாக கொண்டதாகவுமே காணப்பட்டது. அத்துடன், தேவைக்கும் குறைவாகவே பொருளாதார விடுதலை மற்றும் சுதந்திரத்தில் அக்கறை செலுத்தின. 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பித்தது முதல் இன்று வரை, தமிழ் சமூகத்திற்கு மத்தியிலான அரசியலானது மூன்று வகையான வகுப்புக்கள் மற்றும் ஜாதி அரசியலாக மாறுப்பட்ட காலங்களில் அமைந்திருந்தது. நான் வகுப்பு மற்றும் ஜாதியை ஒன்று சேர்த்து பார்க்கிறேன், காரணம், அது ஆதியிலும், பிரதானமானதாகவும் (நேரிடையாக இல்லாது இருந்தாலும்) தொழில் சார்ந்ததும், வகுப்பு சார்ந்ததுமாக காணப்படுகின்றது.
20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தெளிவான தமிழ் அரசியல் காணப்படவில்லை. அப்போதைய தமிழ் அரசியல்வாதிகள் பிரித்தானிய காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரத்தை கோருவதற்கு காரணமாக இருந்த இலங்கை தேசிய காங்கிரஸின் (அகில இந்திய தேசிய காங்கிரஸ்) பகுதிகளாகவும், தொகுதிகளாகவும் காணப்பட்டனர். அக்காலத்தின் மூன்று பிரதான அரசியல்வாதிகளாக (ஆங்கில அகர வரிசைகளின் பிரகாரம்) சேர். பொன்னம்பலம் அருணாச்சலம், சேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி மற்றும் சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோர் விளங்கினர். மூவரும் நன்கு கற்ற மற்றும் உயர்நிலை இந்து மறுமலர்ச்சி அல்லது தேசியவாத பிரபுக்களாவர். இவர்கள் பௌத்த மறுமலர்ச்சியாளர்களான சேர் பாரன் ஜயத்திலக்க போன்றோருடன் இணைந்து காலனியாதிக்கத்தில் பௌத்தமும், இந்து சமயமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவம் பிரச்சாரப்படுத்தப்படுவதாகவும் உணர்ந்தனர். இந்த தமிழ் தலைவர்கள் அதிகம் கொழும்பில் வாழ்ந்த போதிலும் இவர்கள் யாழ்ப்பாணத்தில் (வடக்கு மாகணம்) பிறந்தவர்களாகும்.
உயர்வகுப்பு பிரபுக்கள் மற்றும் இந்து தேசியவாதிகளான அருணாச்சலம், துரைசுவாமி மற்றும் இராமநாதன் ஆகிய மூவர் மற்றும் அவர்களது பௌத்த தேசியவாத கூட்டமைப்பு என்பனவற்றில் திருப்தியற்ற பொன்னம்பலம் இலங்கை தேசிய காங்கிரஸ_க்கு போட்டியாக 1940 இல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை ஸ்தாபித்தார். தொடர்ச்சியாக ஸ்டென்லி ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் 1940களின் பிற்பகுதியில், பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் இறுதியில் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சமஸ்டி ஆட்சி முறைமையை கொண்டு வரும் சமஸ்டி கட்சியொன்றை ஸ்தாபித்தார். இருப்பினும் தமிழ் அரசியல் தலைமை உயர்வகுப்பு பிரபுக்கள் இந்து தேசியவாதிகளான அருணாச்சம், துரைசுவாமி மற்றும் இராமநாதன் ஆகியோரின் கைகளிலிருந்து மத்திய வகுப்பான (பிற்காலத்தில் உயர்வகுப்பாக கருதப்பட்டது) செல்வநாயகம் கைகளுக்குச் சென்றது. சிலோன் குடியரசாக மாறி இலங்கையான 1972ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் சமஸ்டி கட்சி, தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ_டன் (மலையக தமிழ் தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சி) கூட்டுச் சேர்ந்து தமிழர்களின் (வடக்கு,கிழக்கு மற்றும் மலையகம்) அபிலாஷையை தீர்த்து வைப்பதற்கு, தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற கட்சியை 1974 இல் உருவாக்கியது (ரி.யு.எல்.எப்).
தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றமுடியாமை மற்றும் தவறான எண்ணத்தை நீக்க முடியாமை தொடர்ந்ததன் காரணமாக, சில தமிழ் இளைஞர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக 1972 ஆம் ஆண்டு ஆயுதங்களை கையில் எடுத்தனர், இதன் காரணமாக தமிழர்கள் மத்தியில் பல ஆயுதக் குழுக்கள் தோற்றம் பெற்றன. இந்த தமிழ் இளைஞர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மாத்திரம் போராடவில்லை, ரி.யு.எல்.எப் என்று உருவாகியிருந்த மத்தியவகுப்பு தமிழ் அரசியல் தலைமைத்துவத்துக்கும், தேசிய அரசியற்கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.சு.க) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (ஐ.தே.க) சவாலாக இருந்தனர். அதுமாத்திரமின்றி, தமிழ் போராளிகள் குழுவின் ஆரம்ப காலத்து ஆதி தலைவர்களாக இருந்த இளைஞர்கள் பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் (ஆனால் அனைவரும் பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல, உதாரணமாக எல்.ரி.ரி.ஈ தலைவர் மத்தியவகுப்பைச் சேர்ந்தவர்) சேர்ந்தவர்கள். வகுப்புச் சார்ந்த தமிழ் அரசியல் தலைமைத்துவம் உயர்வகுப்பு பிரபுக்களிடம் இருந்து மத்திய வகுப்புக்கும் இறுதியில் பிற்படுத்தப்பட்ட ஜாதி அல்லது வகுப்புக்கும் விஸ்தரிக்கப்பட்டது.
தமிழ் சிறுபான்மை சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை, இந்த மூன்று வகுப்பு அரசியல் தலைமைத்துவங்களில் எதுவுமே, முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. எவ்வாறாயினும், உயர்வகுப்பு மற்றும் மத்திய வகுப்பு தமிழ் ஜனநாயக கட்சிகள் தமிழர் அபிலாஷைகளை நிறைவேற்றாத போதிலும், அவர்களது முயற்சி சமூகத்திற்கு பாரிய அழிவை கொண்டு வரவில்லை. மறுபக்கத்தில், 1972ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழர்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக (உண்மையாக அல்லது உணர்ந்துகொண்ட) பிற்படுத்தப்பட்ட ஜாதி அல்லது வகுப்பு சார்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வன்முறையான ஆயுதப் போராட்டம் அளவிடமுடியாத சேததத்தை உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சமூகத்தில் ஏற்படுத்தியது. அது அரசியல் பயமற்ற முழுமையான இராணுவ நடவடிக்கையாகும்
தமிழ் ஜனாநாயக அரசியலுக்கு பரந்த சீர்திருத்தம் அவசியமாகும். அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் (முந்தைய ஆயுதக் குழுக்கள் உள்ளடங்கலாக) தமது கட்சியின் பெயரில் “ஈழம்”, “தமிழ் ஈழம்” அல்லது “புலிகள்” என்ற பதத்தை கொண்டுள்ளனர். அவர்களது கட்சியின் பெயர்கள் (ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – ஈ.பி.டி.பி, மக்கள் விடுதலை இயக்கம், தமிழ் ஈழம் – புளொட், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – ரெலோ, ஈழபுரட்சிகர மாணவர் அமைப்பு – ஈரோஸ், தமிழ் மக்கள் விடுதலைலப் புலிகள் – ரி.எம்.வி.பி, விடுதலைப் புலிகளின் பிரபல முன்னணி – பி.எப்.எல்.ரி) மாற்றப்பட வேண்டும். ‘ஈழம்’ அல்லது ‘தமிழீழம்’ என்பது தமிழ் சமூகத்திற்கு அழிவையே தேடித் தரும். ரி.யு.எல்.எப் உம் தனது பெயரிலிருந்து ‘தமிழ்’ மற்றும் ‘விடுதலை’ என்ற பதங்களை நீக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து தமிழ் தலைமைத்துவமும் பிரதானமாக மொழி, நிலம், மதம் மற்றும் அரசியல் உரிமைகளிலும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொருளாதார உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பன தொடர்பிலும் கவனஞ் செலுத்தி வந்தன. இருப்பினும் 20வது நூற்றாண்டு முழுவதும் தமிழ் அரசியல் இன மற்றும் மொழிசார்ந்த அரசியலிலேயே அதிக கவனஞ் செலுத்தியது. எது பிழையாகிப் போனது? என ஆழமான சுவாசத்துடன் சிந்திப்பதற்கு தமிழ் சமூகத்திற்கு இது சிறந்த தருணம். குறுகிய கண்ணோட்டத்துடன் இன மற்றும் மொழி சார்ந்த அரசியல், பல்சமூக, பன்மொழி, பலசமய, பலஜாதி மற்றும் பல பிரிவுகளை கொண்ட கிழக்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களி;ன அடையாளம் காப்பாற்றப்படக் கூடிய வகையில் பிராந்திய அரசியல் முறை உருவாக்கப்பட வேண்டும்.
கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களைச் சேர்ந்த வேறுபட்ட மக்களின் வானவில் கூட்டணி ஒன்றே 21ஆம் நூற்றாண்டில் தமிழ் அரசியலுக்குக்கு அவசியமானதாகும். தமிழ் அரசியலின் இந்த திருத்தத்தையும், உருமாற்றத்தையும் ஏற்றுக் கொள்வதற்கு ஜனநாயகத்துக்கான ஸ்திரமான வேகமான அர்ப்பணிப்பு, சட்டவிதிகள் மற்றும் புலிகளிலிருந்து சுதந்திரம் என்பவற்றின் காரணமாக ரி.யு.எல்.எப்பே சிறந்ததாக அமையும். இருந்த போதிலும் திருத்தப்பட்ட பெயரில் (உதாரணமாக, வடக்கு கிழக்கு மக்கள் கட்சி, என்.ஈ.பி.பி.) அவர்கள் செயற்பட வேண்டும். பரந்த அடிப்படையிலான ஜனநாயக கூட்டணியை அமைப்பதற்கும், தற்போதைய சங்கடங்களில் இருந்து தமிழ் மக்களை உயர்த்திவிடுவதற்குமான வரலாற்று கடமையும் வடக்கு, கிழக்கில் பழம்பெரும் தமிழ் அரசியற் கட்சிகளில் ஒன்றான ரி.யு.எல்.எப் க்கு உண்டு. அவ்வாறான பரந்த அடிப்படையிலான ஜனநாயக கூட்டணி பல் சமூக, பன்மொழி, பல சமய, பல ஜாதி, பல வகுப்பு மற்றும் பல பிரிவுகளையும் (இன அடையாளங்களுக்கு எதிரானதாக) அதன் அரசியல் குறிக்கோளில் உள்ளடக்குவதாக இருக்க வேண்டும்.
வரலாற்று ரீதியான வடக்கு, கிழக்கு தமிழ் அரசியற் கட்சிகள் யாழ்ப்பாணஞ் சாராதவர்களை தலைமைத்துவத்தில் வைத்திருக்கவில்லை. உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை. பொருளாதார புனர்நிர்மாணம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் சுதந்திரம் என்பவற்றுக்கு குறுகிய மொழிசார்ந்த தேசியவாதத்தை விடவும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். அதாவது, இதன் அர்த்தம் மொழி முக்கியத்துவம் அற்றது என்பதல்ல. ஆனால் பொருளாதார நலனை விட அதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படக் கூடாது. இருப்பினும், தமிழ் அரசியலின் மீள் அங்குரார்ப்பணத்திற்கான காலம் கடந்துள்ளது. தற்போதைய ரி.யு.எல்.எப் இந்த வரலாற்று சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இன,மொழி,மத,ஜாதி மற்றும் வகுப்பு குழுக்களுக்கான பிரசங்கத்திற்கு வெளியே தமிழ் அரசியல் களத்தில் உருமாற்றத்தைக் கொண்டு வரும் என நான் நம்புகின்றேன். முன்னாள் தமிழ் போராளி குழுக்கள் ஆயுதங்களை கலைந்து, பிரிந்து முன் இருந்த அரசியற் கட்சிகளான ரி.யு.எல்.எப் மற்றும் ஏ.சி.ரி.சியுடன் இணைய வேண்டும் என்பதே எனது தாழ்மையான ஆலோசனையாகும்.
3. பொருளாதார சுதந்திரம்
உள்ளுரிலும், தேசிய ரீதியிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் குறைந்த செலவில், உள்ளுர், தேசிய மற்றும் சர்வதேச அரசாங்கங்களின் குறைந்த தலையீட்டுடன் சுதந்திரமாக வர்த்தகத்தை மேற்கொள்வதே பொருளாதார சுதந்திரம் என்பது பாமரர்களின் வரைவிலக்கணமாக இருக்கின்றது. அரசியல் சுதந்திரத்தைப் போன்றே பொருளாதார சுதந்திரமும் ஜனநாயகத்தின் மிக முக்கியமான அம்சமாகும். எனினும், பொருளாதார சுதந்திரம் குறைந்த அளவிலேயே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அரசியல் சுதந்திரத்துடன் ஒப்பிடும் போது குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
“தனிப்பட்ட விருப்பம், பொது ஸ்தாபன பரிமாற்றம், போட்டிச் சுதந்திரம் மற்றும் ஆவணம் மற்றும் நபருக்கான பாதுகாப்பு என்பனவே பொருளாதார சுதந்திரத்தின் பிரதான அம்சங்கள்” என குவாட்னி மற்றும் லோவ்சன் (2008:3) ஆகியோர் தெரிவிக்கின்றனர். நாடொன்றின் பொருளாதார சுதந்திரத்திற்கான ஆதரவு கனடாவின், வென்கவரில் அமைந்துள்ள பிரேசர் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட உலக பொருளாதார சுதந்திர சுட்டெண்ணினாலேயே(நுகுறு) அளவிடப்படுகின்றது. இந்த சுட்டெண் 42 குறியீடுகளை (சர்வதேச நாடுகளின் சவால் வழிகாட்டியிலிருந்து பெறப்பட்ட 22அளவியல் சார்ந்த குறியீடுகள், பூகோள போட்டி அறிக்கை மற்றும் உலக வங்கியின் வர்த்தக அறிக்கை உள்ளடங்கலாக) அடிப்படையாகக் கொண்டது. இந்த சுட்டெண் 0 இலிருந்து 10 வரையான புள்ளிகளால் குறிக்கப்படுகின்றது. 0 என்பது பொருளாதார சுதந்திரம் முழுமையாக இல்லாததையும், 10 என்பது உயர்ந்த அளவிலான பொருளாதார சுதந்திரத்தையும் குறிக்கின்றது.
4. பொறுப்பு, நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை
பொறுப்பு, நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை என்பன மாகாண மற்றும் உள்ளுர் அரசாங்கங்களினதும், மோதல் பிராந்தியத்தில் உள்ள மாகாண மற்றும் உள்ளுர் பொது நிர்வாகங்களினதும், நாட்டின் ஏனைய பகுதிகளினதும் முக்கிய எல்லைகளாக இருக்க வேண்டும். சட்டவிதிகள் உயர்வானதாக இருந்தால் மாத்திரமே அசையும் சந்தை பொருளாதாரம் சிறப்பாக செயற்பட முடியும். தரம் மற்றும் உற்பத்திதிறன் என்பன இன்றியமையாதவை. பொறுப்பு, நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை என்பன பிரதானமானவை.
அந்த அடிப்படையில் ஆட்சிமுறைமையின் ஒழுக்க நடவடிக்கைகள் அமைப்பை பூர்த்தி செய்வதற்கு, ஊக்கமான, நம்பகமான கணக்காய்வாளர் நாயக திணைக்களம், ஊழல் ஆணைக்குழு, பொது சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஊடகங்கள் என்பன இன்றியமையாதன. ஏற்கனவே உள்ள இதனைப்போன்ற தேசிய அளவிலான நிறுவனங்கள் இயங்கக்கூடிய பரப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு அதிகளவில் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் 17ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தின் கீழ் அமைக்கப்பட்ட பொதுசேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றுக்கு கட்டாயமாக உறுப்பினர்களை நியமிப்பதனை தாமதப்படுத்துவதன் மூலம் அவற்றை பலவீனப்படுத்தியுள்ளது. இதேவேளை,அசையும் நவீன சந்தை பொருளாதாரத்திற்கு சுதந்திரமான மற்றும் செயற்பாட்டுதிறன் மிக்க ஊடகம் அவசியமாகும் (உலக வங்கி, 2002). இலங்கையில் உள்ள ஊடகங்கள் நடைமுறையில் உள்ள அதிகார ஆட்சியின் குறைவான தீவிரத்தன்மை காரணமாக சட்ட சம்பந்தமான கொலைகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் என்பன காரணமாக நசுக்கப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளன.
பகிர்ந்துகொடுக்கப்படும் போதாத நிதி மற்றும் மனித வளங்களால் கணக்காய்வாளர் நாயக திணைக்களம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் விசுவாசத்தை இழந்துள்ளன. சில சந்தர்ப்பத்தில் அரசியல் தலையீடுகளும் காணப்படுகின்றன. மேலும், ஊழல் ஆணைக்குழுவுக்கு மூன்று விதமாக சில கட்டுப்பாடுகள் உள்ளன. முதலாவது ஊழல் ஆணைக்குழுவுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட சட்டமூலங்கள் அடிப்படையாக குறையானது. ஏனெனில் அதன் நடவடிக்கைகள் பொதுத் துறையின் ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது வாய்மூலமாக அல்லது எழுத்து மூலமாக முறைப்பாடுகள் வரும்பட்சத்தில் மாத்திரமே ஊழல் ஆணைக்குழுவுக்கு விசாரணை செய்வதற்கான அதிகாரம் உள்ளது. சந்தேகத்திற்கிடமான ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பில் சுயமுயற்சியில் விசாரணை செய்வதற்கான அதிகாரம் இல்லை. மூன்றாவது ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அவர்கள் கடந்த வருடம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டமையானது அதன் செயற்பாடுகளில் அரசியல் தலையீடு இருப்பதற்கு பல உதாரணங்களில் ஒன்றாகும். ஆகையால், தனியார் மற்றும் அரச சார்பற்ற துறைகளும் உள்ளடங்கும் விதத்தில் சட்டமூலம் திருத்தப்பட வேண்டும். அத்துடன், சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்பில் விசாரணைகளை செய்வதற்கான அதிகாரமும் ஊழல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும்.
2009, மே மாதம் 19ஆம் திகதி நாட்டின் ஜனாதிபதி எங்கள் அரசியல் பிரச்சினைகளுக்கு “சொந்த நாட்டில் பிறந்த தீர்வுகள்” என கூறினார். அதாவது அவருக்கு வெளிநாட்டவர்களின் “விரிவுரைகள்” தேவையில்லை என்பதே அதன் அர்த்தம் என நான் கருதுகின்றேன். ஆனால் உத்தேச தேசிய நிறுவனங்கள் மற்றும் 17ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பன முழுமையாக சொந்த நாட்டில் பிறந்தவை மற்றும் தேசிய சட்டவமைப்பில் இணைக்கப்பட்டவை என்ற விடயத்தை அவர் மறுக்கின்றாரா? தனிப்பட்டதாகவும், சுயமானதாகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனைத்து கட்சிகள் பிரதிநிதிகள் குழுஉறுப்பினர்கள் சமர்ப்பித்த அரசியல் முரண்பாட்டுக்கான சொந்த நாட்டில் உருவான தீர்வு (பெரும்பான்மை அறிக்கை), அவராலேயே மூழ்கடிக்கப்பட்டது என்பதனையும் அவர் மறுக்கப் போகின்றாரா? உண்மையாகவே, அவரது கருத்துக்கள் அவரது செயற்பாட்டுடன் ஒன்றிப் போவதாக இல்லை.
மேலே குறிப்பிட்ட தேசிய நிறுவனங்களின் பலவீனங்களினால், ஒவ்வொரு மாகாணமும் குறித்த மாகாணத்திற்குள் சிறந்த ஆட்சிமுறையை பேணுவதற்கு பிராந்திய நிறுவனங்களை உருவாக்க வேண்டும். மாகாண நிறுவனங்களின் அஜாக்கிரதையினால் கவனிக்காது போன விடயங்களை சமமாயிருக்கும் தேசிய நிறுவனங்கள் மேற்கொள்ள முடியும். உண்மையாகவே சுயேட்சையான, பாரபட்சமற்ற மற்றும் கட்சி சார்பற்ற ஆட்சிமுறை நிறுவனங்கள் இருந்தால், நாட்டின் ஆட்சிமுறைமையில் வெளித் தலையீடுகள் அல்லது இடையீடுகள் தேவையற்றவையாகி விடும்.
அது மாத்திரமின்றி, இனம், மதம், பால், ஜாதி, பிராந்தியம், உடலியல் ரீதியாக இயலாத தன்மை, அரசியல் கட்சி இணைப்பு மற்றும் இன்னப்பிற விடயங்களை சீர்தூக்கிப் பார்த்தலை இல்லாது செய்வதற்கு சமமான சந்தர்ப்பங்களையுடைய சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஆட்சிமுறைமையின் தர அடிப்படையிலான அமைப்பை பிரபலப்படுத்த வேண்டும். இதன் மூலம் மோதலால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் தேசிய அரசாங்கத்திற்கும், ஏனைய மாகாணங்களுக்கும் உதாரணங்களாக மாற வேண்டும்.
5. கல்வி மற்றும் அறிவு பொருளாதாரம்
வரலாற்றுரீதியாக, வடக்கின் மிக முக்கியமாக யாழ்குடாநாட்டின் பிராந்திய மேன்மையின் அஸ்திவாரமாக கல்வி மற்றும் அறிவு காணப்படுகின்றது. அதனை கிழக்கிற்கும் பரவச் செய்வதற்கான சந்தர்ப்பம் இதுவாகும். அத்துடன், வேறு மாகாணங்களுடன் ஒப்பிடும் போது குறைந்த அளவிலான இயற்கை வளங்களே வடக்கில் காணப்படுகின்றன. எனவே தனியார் மற்றும் பொது துறையில் வேலைவாய்ப்புக்களை பெறும் கல்வியே அபிவிருத்திக்கான பாதையாகும். இருப்பினும், வடக்கு மக்களின் கல்வி மற்றும் அறிவே (மனித மூலதனம்) போட்டியான சாதகத் தன்மையாகும்.
எவ்வாறாயினும், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் பிரதானமாக விவசாயம் மற்றும் மீன்பிடி பொருளாதாரத்தில் தரகு வியாபாரம் செய்பவர்களாக உள்ளனர். சிவில் யுத்தத்தின் காரணமாக பாரிய அளவிலான இடப்பெயர்வு, விவசாய நிலங்கள் மற்றும் கடற்கரைகளில் கண்ணி வெடிகள், மற்றும் உறவினர்கள் அனைவருடனும் வெளிநாடுகளுக்கு பெரும் ஜனத்திரளின் வெளியேற்றமானது, உள்ளுர் ரீதியாக அல்லது வெளிநாடுகளில் குடியேறுவதற்கு “எதிர்ப்பு ஆர்ப்பாட்ட விளைவை” ஏற்படுத்தியுள்ளது (சர்வானந்தன், 2006 மற்றும் 2008). முரண்பாடுகளின் போது, சேவைகள் துறையே மாகாணத்தின் பொருளாதாரத்தில் பாரிய பங்காற்றியது (65மூக்கும் மேல்), தேசிய பொருளாதாரத்தில் சேவைகள் துறை ஆற்றும் பங்கினைவிட (50மூ) இது அதிகமாகும். எவ்வாறாயினும், தற்போது (முன்னரும்) மோதலால் பாதிக்கப்பட்ட இரண்டு மாகாணங்களினதும் சேவைகள் துறை என்பன குறைந்த உற்பத்தித் திறனுடைய பாதுகாப்பு மற்றும் பொதுநிர்வாக உபதுறைகளின் செல்வாக்குடையதாக காணப்படுகின்றது (சர்வானந்தன், 2008).
இந்த குறைந்தபட்ச உற்பத்திதிறன் சேவைகளின் உபசேவைகள் உலக சந்தையில் போட்டியிடுவதற்கான உயர் உற்பத்திதிறன் வாய்ந்த நவீன அறிவுடைய பொருளாதாரமாக உருமாற்றப்பட வேண்டும். மோதலில் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அறிவுசார்ந்த பொருளாதாரத்தை காப்பாற்றுவதுடன், விரிவாக்கல் செய்ய வேண்டும். அறிவு பொருளாதாரத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி என்பன தவிர்க்க முடியாத இரண்டு அம்சங்களாகும். அருகில், முழுமையாக சுதந்திரமான, தனியார் பாடசாலைகள் மற்றும் பிராந்திய கல்வி நிறுவுனங்கள் (உதாரணமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பஃதொழிற்பயிற்சி உயர் கல்வி கல்லூரிகள்) என்பனவும் அறிவு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாதனவாகும். அரசாங்கத்தின் கீழ் செயற்படும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் மேலதிகஃஉயர் கல்வி நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக போட்டியிடும் மாணவர்களை உருவாக்க வேண்டும். அரசாங்கம் தேவைப்படும் மாணவர்களுக்கு நேரடியாக நிதி வளங்களை வழங்க வேண்டும். எனவே, அவர்கள் தமது விருப்பத்திற்கு அமைய பொது அல்லது தனியார் நிறுவகங்களில் கல்வி சேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்கும்.
பல்கலைக்கழக உபவேந்தர்கள் அரசியல் அதிகாரிகள் அதாவது நாட்டின் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் உலகின் மிகச் சில நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இது வேடிக்கைக்குரிய விடயமாகும். சுதந்திரமான ஆட்சிமுறையின் அங்கங்களுக்கான நியமனங்கள், உதாரணமாக நீதி, கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய வங்கி என்பன சுதந்திரமான, பக்கச்சார்பற்ற மதிப்புக்குரிய துறைகளில் சிறந்த நபர்களால் ஆன குழுவினால் வழங்கப்பட வேண்டும்.
6. நிதியியல் சுயாட்சி
யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில், தேசிய அரசாங்கம் நிதி, பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரம் தவிர அதன் பெரும்பாலான நடவடிக்கைகளையும், பொறுப்புக்களையும் அனைத்து 9 மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். ஒருங்கிணைக்கப்பட்ட நாடொன்றின் கீழ் மாகாண அரசாங்கங்களின் ஒழுங்குபடுத்தும் கருவியாக செயற்படுவதே தேசிய அரசாங்கத்தின் பிரதான செயற்பாடாகும். உதாரணமாக மாகாண அரசாங்கங்களின் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையில் நிரப்பலை விதித்தல். அதன் செயற்பாடுகளையும், பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக, மாகாண அரசாங்கங்களுக்கு நிதி சம்பந்தமான சுயாட்சி வழங்கப்பட வேண்டும். அதாவது, தமது மாகாணத்திற்குள் வருமானத்தை அதிகரிப்பதற்கும், ஈட்டுவதற்கும் அதனை பொது சேவையில் பயன்படுத்துவதற்குமான அதிகாரம். ஒவ்வொரு மாகாணமும் ஏற்றுமதிக்கான ஏற்றுமதி வரி, சுங்கத் தீர்வை மற்றும் பெறுமதி சேர் வரிகளைத் தவிர வரிகளை விதிக்கவும் சேமிக்கவும் வேண்டும். ஆகையால், தேசிய அரசாங்கத்தின் வருமானம் பிரதானமாக சர்வதேச வர்த்தகத்தின் தீர்வையிலும், வரிகளிலுமே தங்கியிருக்கும். ஒவ்வொரு மாகாணத்திலும் செயற்படும் வர்த்தகங்கள் அம்மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டு அம்மாகாண அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும்(நேரடியாகவும், மறைமுகமாகவும்). தனியார் மற்றும் பொதுத் துறை ஆகிய இரண்டு துறைகளினதும் ஊழியர்கள் மாகாண அரசாங்கத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டும். அதேநேரத்தில், தேசிய அரசாங்க ஊழியர்களும் (மத்திய வங்கி ஊழியர்கள், முப்படைகளின் உறுப்பினர்கள், நிதி அமைச்சின் ஊழியர்கள் போன்றோர்) தேசிய அரசாங்கத்திற்கே வருமான வரி செலுத்த வேண்டும்.
மாகாணங்களுக்கு நிதி சம்பந்தமான தன்னாட்சியை வழங்குவதன் மூலம், மாகாணங்களுக்கு இடையில் போட்டித் தன்மையை உருவாக்கி வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் (உள்ளுர் மற்றும் வெளியூர் இரண்டிலுமே) தேசிய அரசாங்கத்தால் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். மேற்குறிப்பிட்ட வகையில் மாகாணங்களுக்கு நிதிசம்பந்தமான இடத்தினை வழங்கும் போது மாகாணங்களுக்கு இடையில் உற்பத்தியிலும் போட்டித் தன்மையான சூழலையும் உருவாக்க முடியும். தற்போது செயற்படும் முறைக்கு வெளியே அரசாங்கம் செயற்பட வேண்டும். எதிரெதிராக மாகாணங்களுக்கு குறிப்பிட்ட தகைமைகளின் அடிப்படையில் வருடாந்த மானியம் வழங்குதல் வேண்டும். தற்போது மத்தியில் இருந்து மாகாணத்திற்கு அனுப்பப்படும் நிதி பொதுவாக சம்பளம், ஒய்வூதியம் மற்றும் மாகாண செலவுகளுக்கானதாகவே காணப்படுகின்றது. எதிரிடையாக, பணம் ஈட்டுவதற்கும், தமது சொந்த பணத்தை செலவிடுவதற்கும் மாகாணங்களுக்கு ஊக்கம் வழங்கப்பட வேண்டும்.
தேசிய அரசாங்கத்தின் முழுமையான வருமானம் கடந்த 20 வருடங்களாக(1989 முதல்) அரசாங்கத்தின் மீள்செலவீனங்களை சமாளிப்பதற்கே போதுமானதாக இல்லை. எனவே, அரசாங்கத்தின் மீள்செலவீனத்தின் ஒரு பகுதியும், முதலீட்டு செலவீனமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வழங்கல்களின் மூலமே ஈடு செய்யப்படுகின்றது. அதற்கும் மேலாக, அரசாங்கத்தின் வருடாந்த வருமானத்தின் பெரும் பகுதியில் பொதுமக்கள் கடன்களின் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) மீள்வழங்கலுக்கு பயன்படுத்தப்படுகின்றது. தேசிய அரசாங்கம் கட்டத்திற்கு வெளியே சிந்தித்து இயற்கையையும், தேசிய அரசாங்கத்தின் நேருக்கு நேரான மாகாண அரசாங்கங்களின் நிதி சம்பந்தமான கட்டமைப்பின் உள்ளடக்கம் மற்றும் வெளியடக்கம் ஆகியவற்றையும் உருமாற்றி நிதி சம்பந்தமான குறைபாடுகளை நிரப்புவதற்கு இது சிறந்த தருணமாகும்.
மோதல் பிராந்தியத்திற்கான பொருளாதார மறுமலர்ச்சிக்கான அரசாங்கத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட தந்திரபோயம் பௌதீகம் (வீடுகள், வீதிகள், பாலங்கள், இன்னபிற), பொருளாதாரம் (மின்சாரம், நீர், தொலைத்தொடர்பு, ரயில்சேவை, இன்னபிற), மற்றும் சமூகம் (பாடசாலைகள், வைத்தியசாலைகள், இன்னபிற), உட்கட்டமைப்பு அபிவிருத்தி, ஆகிய இன்றியமையாத விடயங்களை இலக்காகக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், இவ்வாறான உட்கட்டமைப்பு செயற்றிட்டங்களுக்கு நிதிவழங்குதல் தொடர்பில் என்னிடம் வள ஒதுக்கீடொன்று உள்ளது. அரசாங்கத்தின் மிகநெருக்கமான நிதி சம்பந்தமான இடத்தை குறிப்பிட்டாக வேண்டும். இவ்வாறான உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான போதிய நிதிவசதி அரசாங்கத்திடம் இருப்பதாக நான் கருதவில்லை. ஏனெனில், அவற்றுக்கு அதிக செலவாகும். அதுமாத்திரமின்றி, உலக பொருளாதார நெருக்கடி வெளி அரசியல் உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வெளி நிதியுதவியாளர்களிடம் (இருபக்கங்களில் மற்றும் பல்பக்கங்களில்) இருந்து போதிய அளவான நிதியை பெறமுடியாத நிலை அரசாங்கத்திற்கு உள்ளது.
இந்த நிலையில், பி.ஓ.ஓ (டீழுழு கட்டு, செயற்படு மற்றும் சொந்தமாக) அல்லது பி.ஓ.ரி (கட்டு, செயற்படு மற்றும் மாற்று) நுட்பத்தின் கீழ் மோதல் பகுதிகளிலும் அப்பாலும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீட்டுக்கு தனியார் மூலதனத்தை (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) கவரச் செய்வதே அரசாங்கத்திற்கு எஞ்சியுள்ள வழியாகும். வவுனியாவில்; இருந்து காங்கேசன்துறை வரையான ரயில் பாதையை மீளக்கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சி பாராட்டத்தக்கது. ஏனெனில், வடக்கிற்கான ரயில் சேவையே (‘யாழ்தேவி’) 1980களின் மத்தியப் பகுதியில் சிவில் யுத்தம் காரணமாக இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தின் ரயில்சேவைகளுக்கு(ஊபுசு) அதிக வருமானம் ஈட்டித் தரும் ரயில்சேவையாக இருந்துள்ளது. அதற்கு அப்பால், ஒரு நபருக்கான குறைந்த எண்ணெய் செலவீனம் காரணமாகவும், போக்குவரத்து வீதிதடைகள் மற்றும் சோதனைச் சாவடிகள் இன்மையாலும் வீதி, கடல் மற்றும் ஆகாய போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து இலாபகரமானது.
எவ்வாறாயினும், இந்த உறுதியான, பயன்மிக்க செயற்றிட்டத்துக்கு செலவு செய்வதற்கான போதிய நிதிவளங்கள் அரசாங்கத்திடம் இல்லையென்றே நான் நினைக்கின்றேன். அரசாங்கம் வெளிப்படையாகவே பொதுமக்களின் ஆதரவை கோரியுள்ளதுடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கை இராஜதந்திர அலுவலகங்கள் இலங்கையிலிருந்து சென்று வெளிநாடுகளில் வசித்து வருபவர்களிடம் நிதிபெறுவதற்கான ‘நன்கொடை நிகழ்ச்சிகளை’ நடத்தி வருகின்றன. ஆனால் அவை போதிய அளவு பயனை தரவில்லை. மத்திய வங்கிக்கு அமைய (2008:69), ரயில்வே திணைக்களம் 2008ஆம் ஆண்டில் நாளாந்தம் 12.5 மில்லியன் ரூபாயை செயற்பாட்டு நட்டமாக காட்டியுள்ளது(வருடாந்த நட்டம் 4,553 மில்லியன் இலங்கை ரூபாய் அல்லது 43 மில்லியன் அமெரிக்க டொலர்கள்).அரசாங்கத்தால் சொந்த பணத்தை பயன்படுத்தியும், வெளிநாட்டு நிதிவழங்குநர்களிடம் இருந்து பெறும் பணத்தை பயன்படுத்தியும் ரயில் பாதைகளையும், ரயில் நிலையங்களையும் (உட்கட்டமைப்பு) மீளமைக்க முடியவில்லையாயின், பயணிகள் போக்குவரத்தை தனியார் துறைக்கு (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) ஒப்படைக்கலாம் என்பதே எமது ஆலோசனையாக இருக்கின்றது. அதாவது, ரயில் இயந்திரங்கள், ரயில் பெட்டிகள் என்பன தனியார் துறையினால் முதலீடு செய்யப்பட்டு, முகாமைத்துவம் செய்யப்பட்டு நிர்வகிக்கப்படலாம். இவ்வாறான பொது மற்றும் தனியார் இணைந்த நடவடிக்கையே அரசாங்கம் எதிர்நோக்கும் நிதி சம்பந்தமான பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறந்த தீர்வாகும். அத்துடன், தேசிய அரசாங்கம் ரயில் பாதைகளையும், ரயில் நிலையங்களையும் மீளமைக்க ஆரம்பிக்க வேண்டும். இதன் பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்த மாகாண அரசாங்கங்களிற்கு ஒப்படைக்கப்படல் வேண்டும்.
7. முடிவுரை
எல்.ரி.ரி.ஈயின் தொடர்ச்சியான மற்றும் இறுதியான தோல்வியானது சவால்களையும், சந்தர்ப்பங்களையும் வழங்கியுள்ளது. தமிழ் அரசியல் தலைமைத்துவமும், தேசிய அரசியல் தலைமைத்துவமும் அவர்களை நிலைமாற்றி யுத்தத்தின் பின்னர் இலங்கை எதிர்நோக்கும் சவால்களை சந்திப்பதற்கு இந்த வரலாற்று சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். யுத்தத்திற்கு பின்னரான இலங்கைக்கு பொதுவாக மற்றும் விசேடமாக மோதல் பிராந்தியத்திற்கு நாங்கள் முன்வைக்கும் பரந்த கொள்கை திட்டவரைபுகள் பின்வருமாறு:
1. பொருளாதார தந்திரோபாயம் – மோதல் பிராந்தியத்தில் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளின் வழிகாட்டிகளின் கொள்கைகளுக்கு அமைய பொருளாதார சுதந்திரம், மாகாண ரீதியாகவும், தேசிய ரீதியாகவும்.
2. தொகுதி தந்திரோபாயம் – பொருளாதார மறுமலர்ச்சிக்கு அறிவு பொருளாதாரமே பிரதான அம்சமாகும். அத்துடன் ஏனைய பகுதிகளைப் பிடிப்பதற்கு மோதல் பிராந்தியம் வேகமாக செயற்படுதல்.
3. அரச சீர்திருத்தம் – செவிலித்தாய் நிலையிலிருந்து அதிகாரமளிக்கும் நிலைக்கு மாற்றுதல்.
4. தமிழர்களுக்கான அரசியல் சீர்திருத்தம் – பிராந்திய அடையாளத்தின் ஊடாக குறகிய மொழிசார்ந்த மற்றும் இன அடையாளத்தை நிலைமாற்றுதல்.
5. ஆட்சிமுறைமை சீர்திருத்தம் – உண்மையாகவே சுதந்திரமான ஆட்சிமுறை அங்கங்கள் பாதுகாப்பளிப்பதுடன், ஜனநாயகத்தை பிரபலப்படுத்துவதுடன், நீதியையும் சட்டவிதிகளையும் உறுதி செய்கின்றன.
6. குறிக்கப்பட்ட சீர்திருத்தங்களுக்கான நிதி வழங்கல் – குறிக்கப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களுக்கு நிதி சம்பந்தமான தன்னாட்சியே பிரதான அம்சமாகும்.
நெல்சன் மண்டேலா மற்றும் எப். டுபிள்யு. டி கிளர்க் போன்றவர்கள் இரண்டு இனபிரிவுகளிலும் இந்த நேரத்தில் இலங்கைக்கு தேவையானவர்களாகும். இலங்கையில் இரு தரப்பிலும் தகுதியான அபேட்சகர்களை என்னால் இதுவரை இனங்கான முடியவில்லை. நான் தவறாக நினைத்திருப்பதாக கருதுகின்றேன். இலங்கை மக்களின் ஆர்வம், மிக முக்கியமாக மோதல் பிராந்தியத்தில் உள்ளவர்கள், இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஜேர்மனியர்களும், ஜப்பானியர்களும் இருந்ததைப் போல் இருக்க வேண்டும். ஒன்றாக நாங்கள் சாம்பலில் இருந்து எழுவோம் அல்லது எங்களை எரித்துக் கொள்வோம். இது செய் அல்லது செத்துமடி சூழ்நிலை. நம்பிக்கை கொள்பவர்கள் தயவுசெய்து எழுந்து நில்லுங்கள்?
– thenee –
Read Full Post »