Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கட்டுரை’ Category

புகழ்பெற்ற பிரான்ஸிய தத்துவ ஞானியும் எழுத்தாளருமாகிய வோல்டர் நேரத்தைப்பற்றி பின்வருமாறு கூறுகின்றார்.

“நேரத்தை விட மிகவும் நீளமானது எதுவும் கிடையாது. ஏனெனில் அது நித்தியத்தின் ஓர் அளவுகோளாகும். அவ்வாறே நேரத்தை விட மிகவும் குறுகியது எதுவும் கிடையாது. ஏனெனில் அது முக்கியமான எல்லாப் பணிகளையும் சாதிப்பதற்கு போதாமல் இருக்கின்றது. நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி காரியங்களைச் சாதிப்பதற்கு நாம் வரும் போது அந்த நேரத்தை விட அதி விரைவாக நகரக்கூடியது எதுவும் கிடையாது. எதிர்பார்த்து காத்திருப்பதில் நாம் நேரத்தை கழிக்கும் போது அந்நேரத்தை விட மிக மெதுவாக நகரக்கூடியது எதுவும் கிடையாது. மனிதர்கள் எல்லோரும் நேரத்தின் அருமையை புரியவில்லை. அவர்கள் அனைவரும் நேரத்தை வீனாக கழித்த பிறகே அதற்காக வருந்துகிறார்கள். நேரமில்லமல் எந்தப் பணியையும் நிறைவேற்ற முடியாது.”

வோல்டர் சொல்வதும் நாம் சொல்வதும் இதுதான். பொருத்தமான ஒரு மனிதன் பொருத்தமான ஒரு இடத்தில் இருந்தால்தான் வெற்றிகரமான ஒரு திட்டம் பொருத்தமான நேரத்தில் உருவாகும். எனவே புதிதாக பிறந்திருக்கும் இந்த வருடத்தை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான திட்டத்தை நாம் வைத்திருக்கிறோமா? நாம் அறியாமலேயே நேரம் கழிந்துவிட்டது என்றால் நமது திட்டத்தில் எங்கோ கோளாறு இருக்கின்ற என்று அர்த்தம். நாம் எதிர்பார்த்து காத்திருக்கும் போது திட்டத்தில் ஒரு கட்டம் முடிந்து அடுத்த கட்ட வெற்றிக்காக காத்திருக்கிறோம் என்பது அர்த்தமாகும்.

இத்ரீஸ்.lk

Read Full Post »

– கலாநிதி முத்துகிருஸ்ணா சர்வானந்தன் பிரதம ஆய்வாளர், அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகம், பருத்தித்துறை

ஒஸ்லோ சமாதான ஆய்வு நிறுவனத்தில் ஜூலை 27, 2009 ஆம் திகதி நிகழ்த்திய விரிவுரை. திருத்தங்களும், கருத்துக்களும் மற்றும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன: sarvi@pointpedro.org

1. அறிமுகம்

1948 ஆம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பின்னர் பல முரண்பாடுகள்: 1972 முதல ஆயுத முரண்பாடு என 25 வருடங்களுக்கும் (ஜூலை 1983 – மே 2009) மேலாக நீடித்த மோசமான சிவில் யுத்தத்தில் இருந்து இலங்கை, மெதுவாக ஆனால் நிச்சயமாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நீண்ட கால சிவில் யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட மனித, உடைமை, சுற்றாடல் மற்றும் உளவியல் ரீதியான இழப்புக்கள், விசேடமாக பாதிக்கப்பட்ட கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அளவிட முடியாததுடன், பல தலைமுறைகளுக்கு நீடிக்கக் கூடியது: இருப்பினும் சில எண்ணிக்கையிலான மற்றும் தரத்திலான மதிப்பீடுகள் உள்ளன.

இந்த கொள்கைச் சுருக்கத்திற்கான நோக்கம் பரந்த அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை கட்டமைப்புக்களாலான எல்லைக் கோடுகளை தயாரித்து முரண்பாட்டு பிராந்தியங்களை (கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள்) சாம்பலில் இருந்து மீளக்கட்டியெழுப்புதலாகும். இது விசேடமான துறைகள் அல்லது உப துறைகள், தந்திரோபாயங்கள், கொள்கைகள், நிகழ்ச்சிகள் அல்லது செயற்றிட்டங்களை இலக்காகக் கொண்டதல்ல. எதிரிடையாக, அது முரண்பாட்டு பிராந்தியத்தில் பின்தொடரவேண்டிய அரசியல் மற்றும் பொருளாதார பாதைகளை பட்டியலிடுகின்றது. அத்துடன் தேசிய அரசாங்கம் விரைவான மீளக்கட்டியெழுப்புதலை உருவாக்குவதற்கான சூழ்நிலையையும் உருவாக்கிக் கொடுக்கும். முரண்பாட்டு பிராந்தியத்தின் பொருளாதார உயிர்ப்பித்தல், சந்தேகமின்றி தேசிய பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாசகரமான யுத்தத்தின் பின்னர் தொடர்ச்சியான கவனம் மற்றும் பொருளாதாரம் ஊடாக வெற்றிகரமாக புனர்நிர்மாணத்தை அடைந்த நாடுகளுக்கு ஜப்பானும், ஜேர்மனியும் இரண்டு பிரதான உதாரணங்களாக இருக்கின்றன. ஏகாதிபத்திய ஜப்பானும், நாசிச ஜேர்மனியும் உலகில் அவர்களது மதிப்பிற்குரிய புவியியல் பிராந்தியத்திற்கு இராணுவ ரீதியான பாதையில் செல்வாக்கு செலுத்துகின்றன. அதேவழியில், தமிழீழ விடுதலைப் புலிகளும் (எல்.ரி.ரி.ஈ அல்லது வெளிநாட்டவருக்கு “தமிழ் புலிகள்”) கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களை இலங்கையிலிருந்து பிரிப்பதற்கு இரக்கமற்ற, கருணையில்லாத யுத்தத்தை நடத்தினர். இதன் விளைவுகள் தமிழ் சிறுபான்மை இனத்தாருக்கு விசேடமாகவும், மற்றும் இலங்கை முழுவதுக்கும் பாரிய அழிவுடையதாக இருந்தது. இருப்பினும், ஜப்பானிய மற்றும் ஜேர்மன் இராணுவ நடவடிக்கை, நாடுகளுக்கு இடையிலான யுத்தத்திலேயே ஆதிக்கத்தை செலுத்தியது. எல்.ரி.ரி.ஈ பிரிவினைவாதிகளின் யுத்தம் நாட்டுக்கு உள்ளே நடந்ததாகும். எவ்வாறாயினும், எல்.ரி.ரி.ஈயினரின் யுத்தமானது இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான நாட்டுக்கு உள்ளான யுத்தம் என விவாதிக்கப்பட்டாலும், அதன் பிரதான நோக்கம் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தனித்தமிழ் தேசிய நாட்டை இலங்கையில் உருவாக்குவதேயாகும்.

எல்.ரி.ரி.ஈயினர் செயற்பட்ட முறையானது கம்பூச்சியாவில் (தற்போதைய கம்போடியா) 1970களின் பிற்பகுதியில் நிலவிய பொல்பொட் ஆட்சிக்கு இணையானதாகும்.

மோசமான யுத்தத்தின் தேய்வு மற்றும் எல்.ரி.ரி.ஈயினரின் தொடர்ச்சியான பாரிய தோல்விகள் மற்றும் அதன் இராணுவ மற்றும் அரசியல் தலைமைத்துவத்தை இல்லாது செய்தல் என்பவற்றின் பின்னர் இலங்கை முரண்பாட்டுக்கு பின்னரான அத்தியாயத்திற்குள் நுழையும் நிலையில், இது சுயசோதனைக்கான தருணமாகும். சுயவிமர்சனம் மற்றும் தமிழ் சமூகத்தின் பச்சாதாபம் என்பன தற்போது சதுப்புநிலத்திற்கு வெளியே வந்துள்ளன. இரண்டு சாத்தியமான வழிகள்: விசேடமாக தமிழ் சமூகத்திற்கும் மற்றும் முழு இலங்கைக்கும் உள்ளன. ஒன்று இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஜப்பானும், ஜேர்மனியும் கையாண்ட வழிமுறை. மற்றையது கம்போடியாவின் கெமரூச் ஆட்சிக்கு பின்னர் பின்பற்றப்பட்ட வழிமுறை.

இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஜப்பானும், ஜேர்மனியும் அஹிம்சை சட்டவிதிகள் மற்றும் ஜனநாயகத்தின் மீது திடமான பற்று மற்றும் கடினமாக வேலை செய்தல் என்பவற்றை பின்பற்றி சாம்பலில் இருந்து உயிர்த்து வந்தன. இதன் பேறாக ஜப்பானும், ஜேர்மனியும் குறுகிய சுழற்சியில் உலகின் பொருளாதார மையங்களாக உருவெடுத்தன. மறுபக்கத்தில் 1979 கெமரூச் ஆட்சிக்கு பின்னரும் மற்றும் 1989 வியட்நாம் படையெடுப்புக்கு பின்னரும் கம்போடியா ஜனநாயகமின்மை, ஊழல், சுயநல சலுகைகள் மற்றும் குறைந்த அளவு அதிகாரத்தன்மை என்பவற்றுக்கு ஆளாகியிருந்தது. எனவே தொடர்ந்தும் உலகின் வறிய நாடுகளில் ஒன்றாக அது உள்ளது. இருப்பினும், யுத்தத்திற்கு பின்னர் ஜப்பான் மற்றும் ஜேர்மனியில் செழுமை பிரதிபலனாகவும், கம்போடியாவில் ஏழ்மை பிரதிபலனாகவும் காணப்படுகின்றது.

விசேடமாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாண மக்களும் மற்றும் முழு இலங்கையும் இவ்வாறான இரண்டு வகையான யுத்தத்துக்கு பின்னரான மாறுபட்ட பிரதிபலிப்பை காட்டியுள்ள நாடுகளின் வரலாற்று அனுபவங்களில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும். இயற்கையாகவே, இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஜப்பான் மற்றும் ஜேர்மனி ஆகிய இரண்டு நாடுகளினாலும் பின்பற்றப்பட்ட வழிமுறைக்கு ஆதரவாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் விசேடமாகவும், முழுஇலங்கையும் யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் (இன்னும் முரண்பாட்டுக்கு பின்னரான காலமாக மாறவில்லை) பின்பற்ற வேண்டும் என நான் வாதிடுவேன்.

2. தமிழ் அரசியல்

வரலாற்று ரீதியாக, தமிழ் சமூகத்திற்கு மத்தியில் அரசியலானது மிக குறுகிய நோக்கத்தில் மொழி சார்ந்தாகவும், மத தேசியவாதம் மற்றும் சுதந்திரம் என்பவற்றை நோக்கமாக கொண்டதாகவுமே காணப்பட்டது. அத்துடன், தேவைக்கும் குறைவாகவே பொருளாதார விடுதலை மற்றும் சுதந்திரத்தில் அக்கறை செலுத்தின. 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பித்தது முதல் இன்று வரை, தமிழ் சமூகத்திற்கு மத்தியிலான அரசியலானது மூன்று வகையான வகுப்புக்கள் மற்றும் ஜாதி அரசியலாக மாறுப்பட்ட காலங்களில் அமைந்திருந்தது. நான் வகுப்பு மற்றும் ஜாதியை ஒன்று சேர்த்து பார்க்கிறேன், காரணம், அது ஆதியிலும், பிரதானமானதாகவும் (நேரிடையாக இல்லாது இருந்தாலும்) தொழில் சார்ந்ததும், வகுப்பு சார்ந்ததுமாக காணப்படுகின்றது.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தெளிவான தமிழ் அரசியல் காணப்படவில்லை. அப்போதைய தமிழ் அரசியல்வாதிகள் பிரித்தானிய காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரத்தை கோருவதற்கு காரணமாக இருந்த இலங்கை தேசிய காங்கிரஸின் (அகில இந்திய தேசிய காங்கிரஸ்) பகுதிகளாகவும், தொகுதிகளாகவும் காணப்பட்டனர். அக்காலத்தின் மூன்று பிரதான அரசியல்வாதிகளாக (ஆங்கில அகர வரிசைகளின் பிரகாரம்) சேர். பொன்னம்பலம் அருணாச்சலம், சேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி மற்றும் சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோர் விளங்கினர். மூவரும் நன்கு கற்ற மற்றும் உயர்நிலை இந்து மறுமலர்ச்சி அல்லது தேசியவாத பிரபுக்களாவர். இவர்கள் பௌத்த மறுமலர்ச்சியாளர்களான சேர் பாரன் ஜயத்திலக்க போன்றோருடன் இணைந்து காலனியாதிக்கத்தில் பௌத்தமும், இந்து சமயமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவம் பிரச்சாரப்படுத்தப்படுவதாகவும் உணர்ந்தனர். இந்த தமிழ் தலைவர்கள் அதிகம் கொழும்பில் வாழ்ந்த போதிலும் இவர்கள் யாழ்ப்பாணத்தில் (வடக்கு மாகணம்) பிறந்தவர்களாகும்.

உயர்வகுப்பு பிரபுக்கள் மற்றும் இந்து தேசியவாதிகளான அருணாச்சலம், துரைசுவாமி மற்றும் இராமநாதன் ஆகிய மூவர் மற்றும் அவர்களது பௌத்த தேசியவாத கூட்டமைப்பு என்பனவற்றில் திருப்தியற்ற பொன்னம்பலம் இலங்கை தேசிய காங்கிரஸ_க்கு போட்டியாக 1940 இல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை ஸ்தாபித்தார். தொடர்ச்சியாக ஸ்டென்லி ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் 1940களின் பிற்பகுதியில், பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் இறுதியில் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சமஸ்டி ஆட்சி முறைமையை கொண்டு வரும் சமஸ்டி கட்சியொன்றை ஸ்தாபித்தார். இருப்பினும் தமிழ் அரசியல் தலைமை உயர்வகுப்பு பிரபுக்கள் இந்து தேசியவாதிகளான அருணாச்சம், துரைசுவாமி மற்றும் இராமநாதன் ஆகியோரின் கைகளிலிருந்து மத்திய வகுப்பான (பிற்காலத்தில் உயர்வகுப்பாக கருதப்பட்டது) செல்வநாயகம் கைகளுக்குச் சென்றது. சிலோன் குடியரசாக மாறி இலங்கையான 1972ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் சமஸ்டி கட்சி, தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ_டன் (மலையக தமிழ் தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சி) கூட்டுச் சேர்ந்து தமிழர்களின் (வடக்கு,கிழக்கு மற்றும் மலையகம்) அபிலாஷையை தீர்த்து வைப்பதற்கு, தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற கட்சியை 1974 இல் உருவாக்கியது (ரி.யு.எல்.எப்).

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றமுடியாமை மற்றும் தவறான எண்ணத்தை நீக்க முடியாமை தொடர்ந்ததன் காரணமாக, சில தமிழ் இளைஞர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக 1972 ஆம் ஆண்டு ஆயுதங்களை கையில் எடுத்தனர், இதன் காரணமாக தமிழர்கள் மத்தியில் பல ஆயுதக் குழுக்கள் தோற்றம் பெற்றன. இந்த தமிழ் இளைஞர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மாத்திரம் போராடவில்லை, ரி.யு.எல்.எப் என்று உருவாகியிருந்த மத்தியவகுப்பு தமிழ் அரசியல் தலைமைத்துவத்துக்கும், தேசிய அரசியற்கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.சு.க) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (ஐ.தே.க) சவாலாக இருந்தனர். அதுமாத்திரமின்றி, தமிழ் போராளிகள் குழுவின் ஆரம்ப காலத்து ஆதி தலைவர்களாக இருந்த இளைஞர்கள் பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் (ஆனால் அனைவரும் பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல, உதாரணமாக எல்.ரி.ரி.ஈ தலைவர் மத்தியவகுப்பைச் சேர்ந்தவர்) சேர்ந்தவர்கள். வகுப்புச் சார்ந்த தமிழ் அரசியல் தலைமைத்துவம் உயர்வகுப்பு பிரபுக்களிடம் இருந்து மத்திய வகுப்புக்கும் இறுதியில் பிற்படுத்தப்பட்ட ஜாதி அல்லது வகுப்புக்கும் விஸ்தரிக்கப்பட்டது.

தமிழ் சிறுபான்மை சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை, இந்த மூன்று வகுப்பு அரசியல் தலைமைத்துவங்களில் எதுவுமே, முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. எவ்வாறாயினும், உயர்வகுப்பு மற்றும் மத்திய வகுப்பு தமிழ் ஜனநாயக கட்சிகள் தமிழர் அபிலாஷைகளை நிறைவேற்றாத போதிலும், அவர்களது முயற்சி சமூகத்திற்கு பாரிய அழிவை கொண்டு வரவில்லை. மறுபக்கத்தில், 1972ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழர்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக (உண்மையாக அல்லது உணர்ந்துகொண்ட) பிற்படுத்தப்பட்ட ஜாதி அல்லது வகுப்பு சார்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வன்முறையான ஆயுதப் போராட்டம் அளவிடமுடியாத சேததத்தை உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சமூகத்தில் ஏற்படுத்தியது. அது அரசியல் பயமற்ற முழுமையான இராணுவ நடவடிக்கையாகும்

தமிழ் ஜனாநாயக அரசியலுக்கு பரந்த சீர்திருத்தம் அவசியமாகும். அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் (முந்தைய ஆயுதக் குழுக்கள் உள்ளடங்கலாக) தமது கட்சியின் பெயரில் “ஈழம்”, “தமிழ் ஈழம்” அல்லது “புலிகள்” என்ற பதத்தை கொண்டுள்ளனர். அவர்களது கட்சியின் பெயர்கள் (ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – ஈ.பி.டி.பி, மக்கள் விடுதலை இயக்கம், தமிழ் ஈழம் – புளொட், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – ரெலோ, ஈழபுரட்சிகர மாணவர் அமைப்பு – ஈரோஸ், தமிழ் மக்கள் விடுதலைலப் புலிகள் – ரி.எம்.வி.பி, விடுதலைப் புலிகளின் பிரபல முன்னணி – பி.எப்.எல்.ரி) மாற்றப்பட வேண்டும். ‘ஈழம்’ அல்லது ‘தமிழீழம்’ என்பது தமிழ் சமூகத்திற்கு அழிவையே தேடித் தரும். ரி.யு.எல்.எப் உம் தனது பெயரிலிருந்து ‘தமிழ்’ மற்றும் ‘விடுதலை’ என்ற பதங்களை நீக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட அனைத்து தமிழ் தலைமைத்துவமும் பிரதானமாக மொழி, நிலம், மதம் மற்றும் அரசியல் உரிமைகளிலும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொருளாதார உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பன தொடர்பிலும் கவனஞ் செலுத்தி வந்தன. இருப்பினும் 20வது நூற்றாண்டு முழுவதும் தமிழ் அரசியல் இன மற்றும் மொழிசார்ந்த அரசியலிலேயே அதிக கவனஞ் செலுத்தியது. எது பிழையாகிப் போனது? என ஆழமான சுவாசத்துடன் சிந்திப்பதற்கு தமிழ் சமூகத்திற்கு இது சிறந்த தருணம். குறுகிய கண்ணோட்டத்துடன் இன மற்றும் மொழி சார்ந்த அரசியல், பல்சமூக, பன்மொழி, பலசமய, பலஜாதி மற்றும் பல பிரிவுகளை கொண்ட கிழக்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களி;ன அடையாளம் காப்பாற்றப்படக் கூடிய வகையில் பிராந்திய அரசியல் முறை உருவாக்கப்பட வேண்டும்.

கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களைச் சேர்ந்த வேறுபட்ட மக்களின் வானவில் கூட்டணி ஒன்றே 21ஆம் நூற்றாண்டில் தமிழ் அரசியலுக்குக்கு அவசியமானதாகும். தமிழ் அரசியலின் இந்த திருத்தத்தையும், உருமாற்றத்தையும் ஏற்றுக் கொள்வதற்கு ஜனநாயகத்துக்கான ஸ்திரமான வேகமான அர்ப்பணிப்பு, சட்டவிதிகள் மற்றும் புலிகளிலிருந்து சுதந்திரம் என்பவற்றின் காரணமாக ரி.யு.எல்.எப்பே சிறந்ததாக அமையும். இருந்த போதிலும் திருத்தப்பட்ட பெயரில் (உதாரணமாக, வடக்கு கிழக்கு மக்கள் கட்சி, என்.ஈ.பி.பி.) அவர்கள் செயற்பட வேண்டும். பரந்த அடிப்படையிலான ஜனநாயக கூட்டணியை அமைப்பதற்கும், தற்போதைய சங்கடங்களில் இருந்து தமிழ் மக்களை உயர்த்திவிடுவதற்குமான வரலாற்று கடமையும் வடக்கு, கிழக்கில் பழம்பெரும் தமிழ் அரசியற் கட்சிகளில் ஒன்றான ரி.யு.எல்.எப் க்கு உண்டு. அவ்வாறான பரந்த அடிப்படையிலான ஜனநாயக கூட்டணி பல் சமூக, பன்மொழி, பல சமய, பல ஜாதி, பல வகுப்பு மற்றும் பல பிரிவுகளையும் (இன அடையாளங்களுக்கு எதிரானதாக) அதன் அரசியல் குறிக்கோளில் உள்ளடக்குவதாக இருக்க வேண்டும்.

வரலாற்று ரீதியான வடக்கு, கிழக்கு தமிழ் அரசியற் கட்சிகள் யாழ்ப்பாணஞ் சாராதவர்களை தலைமைத்துவத்தில் வைத்திருக்கவில்லை. உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை. பொருளாதார புனர்நிர்மாணம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் சுதந்திரம் என்பவற்றுக்கு குறுகிய மொழிசார்ந்த தேசியவாதத்தை விடவும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். அதாவது, இதன் அர்த்தம் மொழி முக்கியத்துவம் அற்றது என்பதல்ல. ஆனால் பொருளாதார நலனை விட அதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படக் கூடாது. இருப்பினும், தமிழ் அரசியலின் மீள் அங்குரார்ப்பணத்திற்கான காலம் கடந்துள்ளது. தற்போதைய ரி.யு.எல்.எப் இந்த வரலாற்று சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இன,மொழி,மத,ஜாதி மற்றும் வகுப்பு குழுக்களுக்கான பிரசங்கத்திற்கு வெளியே தமிழ் அரசியல் களத்தில் உருமாற்றத்தைக் கொண்டு வரும் என நான் நம்புகின்றேன். முன்னாள் தமிழ் போராளி குழுக்கள் ஆயுதங்களை கலைந்து, பிரிந்து முன் இருந்த அரசியற் கட்சிகளான ரி.யு.எல்.எப் மற்றும் ஏ.சி.ரி.சியுடன் இணைய வேண்டும் என்பதே எனது தாழ்மையான ஆலோசனையாகும்.

3. பொருளாதார சுதந்திரம்

உள்ளுரிலும், தேசிய ரீதியிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் குறைந்த செலவில், உள்ளுர், தேசிய மற்றும் சர்வதேச அரசாங்கங்களின் குறைந்த தலையீட்டுடன் சுதந்திரமாக வர்த்தகத்தை மேற்கொள்வதே பொருளாதார சுதந்திரம் என்பது பாமரர்களின் வரைவிலக்கணமாக இருக்கின்றது. அரசியல் சுதந்திரத்தைப் போன்றே பொருளாதார சுதந்திரமும் ஜனநாயகத்தின் மிக முக்கியமான அம்சமாகும். எனினும், பொருளாதார சுதந்திரம் குறைந்த அளவிலேயே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அரசியல் சுதந்திரத்துடன் ஒப்பிடும் போது குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

“தனிப்பட்ட விருப்பம், பொது ஸ்தாபன பரிமாற்றம், போட்டிச் சுதந்திரம் மற்றும் ஆவணம் மற்றும் நபருக்கான பாதுகாப்பு என்பனவே பொருளாதார சுதந்திரத்தின் பிரதான அம்சங்கள்” என குவாட்னி மற்றும் லோவ்சன் (2008:3) ஆகியோர் தெரிவிக்கின்றனர். நாடொன்றின் பொருளாதார சுதந்திரத்திற்கான ஆதரவு கனடாவின், வென்கவரில் அமைந்துள்ள பிரேசர் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட உலக பொருளாதார சுதந்திர சுட்டெண்ணினாலேயே(நுகுறு) அளவிடப்படுகின்றது. இந்த சுட்டெண் 42 குறியீடுகளை (சர்வதேச நாடுகளின் சவால் வழிகாட்டியிலிருந்து பெறப்பட்ட 22அளவியல் சார்ந்த குறியீடுகள், பூகோள போட்டி அறிக்கை மற்றும் உலக வங்கியின் வர்த்தக அறிக்கை உள்ளடங்கலாக) அடிப்படையாகக் கொண்டது. இந்த சுட்டெண் 0 இலிருந்து 10 வரையான புள்ளிகளால் குறிக்கப்படுகின்றது. 0 என்பது பொருளாதார சுதந்திரம் முழுமையாக இல்லாததையும், 10 என்பது உயர்ந்த அளவிலான பொருளாதார சுதந்திரத்தையும் குறிக்கின்றது.

4. பொறுப்பு, நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை

பொறுப்பு, நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை என்பன மாகாண மற்றும் உள்ளுர் அரசாங்கங்களினதும், மோதல் பிராந்தியத்தில் உள்ள மாகாண மற்றும் உள்ளுர் பொது நிர்வாகங்களினதும், நாட்டின் ஏனைய பகுதிகளினதும் முக்கிய எல்லைகளாக இருக்க வேண்டும். சட்டவிதிகள் உயர்வானதாக இருந்தால் மாத்திரமே அசையும் சந்தை பொருளாதாரம் சிறப்பாக செயற்பட முடியும். தரம் மற்றும் உற்பத்திதிறன் என்பன இன்றியமையாதவை. பொறுப்பு, நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை என்பன பிரதானமானவை.

அந்த அடிப்படையில் ஆட்சிமுறைமையின் ஒழுக்க நடவடிக்கைகள் அமைப்பை பூர்த்தி செய்வதற்கு, ஊக்கமான, நம்பகமான கணக்காய்வாளர் நாயக திணைக்களம், ஊழல் ஆணைக்குழு, பொது சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஊடகங்கள் என்பன இன்றியமையாதன. ஏற்கனவே உள்ள இதனைப்போன்ற தேசிய அளவிலான நிறுவனங்கள் இயங்கக்கூடிய பரப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு அதிகளவில் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் 17ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தின் கீழ் அமைக்கப்பட்ட பொதுசேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றுக்கு கட்டாயமாக உறுப்பினர்களை நியமிப்பதனை தாமதப்படுத்துவதன் மூலம் அவற்றை பலவீனப்படுத்தியுள்ளது. இதேவேளை,அசையும் நவீன சந்தை பொருளாதாரத்திற்கு சுதந்திரமான மற்றும் செயற்பாட்டுதிறன் மிக்க ஊடகம் அவசியமாகும் (உலக வங்கி, 2002). இலங்கையில் உள்ள ஊடகங்கள் நடைமுறையில் உள்ள அதிகார ஆட்சியின் குறைவான தீவிரத்தன்மை காரணமாக சட்ட சம்பந்தமான கொலைகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் என்பன காரணமாக நசுக்கப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளன.

பகிர்ந்துகொடுக்கப்படும் போதாத நிதி மற்றும் மனித வளங்களால் கணக்காய்வாளர் நாயக திணைக்களம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் விசுவாசத்தை இழந்துள்ளன. சில சந்தர்ப்பத்தில் அரசியல் தலையீடுகளும் காணப்படுகின்றன. மேலும், ஊழல் ஆணைக்குழுவுக்கு மூன்று விதமாக சில கட்டுப்பாடுகள் உள்ளன. முதலாவது ஊழல் ஆணைக்குழுவுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட சட்டமூலங்கள் அடிப்படையாக குறையானது. ஏனெனில் அதன் நடவடிக்கைகள் பொதுத் துறையின் ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது வாய்மூலமாக அல்லது எழுத்து மூலமாக முறைப்பாடுகள் வரும்பட்சத்தில் மாத்திரமே ஊழல் ஆணைக்குழுவுக்கு விசாரணை செய்வதற்கான அதிகாரம் உள்ளது. சந்தேகத்திற்கிடமான ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பில் சுயமுயற்சியில் விசாரணை செய்வதற்கான அதிகாரம் இல்லை. மூன்றாவது ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அவர்கள் கடந்த வருடம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டமையானது அதன் செயற்பாடுகளில் அரசியல் தலையீடு இருப்பதற்கு பல உதாரணங்களில் ஒன்றாகும். ஆகையால், தனியார் மற்றும் அரச சார்பற்ற துறைகளும் உள்ளடங்கும் விதத்தில் சட்டமூலம் திருத்தப்பட வேண்டும். அத்துடன், சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்பில் விசாரணைகளை செய்வதற்கான அதிகாரமும் ஊழல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும்.

2009, மே மாதம் 19ஆம் திகதி நாட்டின் ஜனாதிபதி எங்கள் அரசியல் பிரச்சினைகளுக்கு “சொந்த நாட்டில் பிறந்த தீர்வுகள்” என கூறினார். அதாவது அவருக்கு வெளிநாட்டவர்களின் “விரிவுரைகள்” தேவையில்லை என்பதே அதன் அர்த்தம் என நான் கருதுகின்றேன். ஆனால் உத்தேச தேசிய நிறுவனங்கள் மற்றும் 17ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பன முழுமையாக சொந்த நாட்டில் பிறந்தவை மற்றும் தேசிய சட்டவமைப்பில் இணைக்கப்பட்டவை என்ற விடயத்தை அவர் மறுக்கின்றாரா? தனிப்பட்டதாகவும், சுயமானதாகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனைத்து கட்சிகள் பிரதிநிதிகள் குழுஉறுப்பினர்கள் சமர்ப்பித்த அரசியல் முரண்பாட்டுக்கான சொந்த நாட்டில் உருவான தீர்வு (பெரும்பான்மை அறிக்கை), அவராலேயே மூழ்கடிக்கப்பட்டது என்பதனையும் அவர் மறுக்கப் போகின்றாரா? உண்மையாகவே, அவரது கருத்துக்கள் அவரது செயற்பாட்டுடன் ஒன்றிப் போவதாக இல்லை.

மேலே குறிப்பிட்ட தேசிய நிறுவனங்களின் பலவீனங்களினால், ஒவ்வொரு மாகாணமும் குறித்த மாகாணத்திற்குள் சிறந்த ஆட்சிமுறையை பேணுவதற்கு பிராந்திய நிறுவனங்களை உருவாக்க வேண்டும். மாகாண நிறுவனங்களின் அஜாக்கிரதையினால் கவனிக்காது போன விடயங்களை சமமாயிருக்கும் தேசிய நிறுவனங்கள் மேற்கொள்ள முடியும். உண்மையாகவே சுயேட்சையான, பாரபட்சமற்ற மற்றும் கட்சி சார்பற்ற ஆட்சிமுறை நிறுவனங்கள் இருந்தால், நாட்டின் ஆட்சிமுறைமையில் வெளித் தலையீடுகள் அல்லது இடையீடுகள் தேவையற்றவையாகி விடும்.
அது மாத்திரமின்றி, இனம், மதம், பால், ஜாதி, பிராந்தியம், உடலியல் ரீதியாக இயலாத தன்மை, அரசியல் கட்சி இணைப்பு மற்றும் இன்னப்பிற விடயங்களை சீர்தூக்கிப் பார்த்தலை இல்லாது செய்வதற்கு சமமான சந்தர்ப்பங்களையுடைய சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஆட்சிமுறைமையின் தர அடிப்படையிலான அமைப்பை பிரபலப்படுத்த வேண்டும். இதன் மூலம் மோதலால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் தேசிய அரசாங்கத்திற்கும், ஏனைய மாகாணங்களுக்கும் உதாரணங்களாக மாற வேண்டும்.

5. கல்வி மற்றும் அறிவு பொருளாதாரம்

வரலாற்றுரீதியாக, வடக்கின் மிக முக்கியமாக யாழ்குடாநாட்டின் பிராந்திய மேன்மையின் அஸ்திவாரமாக கல்வி மற்றும் அறிவு காணப்படுகின்றது. அதனை கிழக்கிற்கும் பரவச் செய்வதற்கான சந்தர்ப்பம் இதுவாகும். அத்துடன், வேறு மாகாணங்களுடன் ஒப்பிடும் போது குறைந்த அளவிலான இயற்கை வளங்களே வடக்கில் காணப்படுகின்றன. எனவே தனியார் மற்றும் பொது துறையில் வேலைவாய்ப்புக்களை பெறும் கல்வியே அபிவிருத்திக்கான பாதையாகும். இருப்பினும், வடக்கு மக்களின் கல்வி மற்றும் அறிவே (மனித மூலதனம்) போட்டியான சாதகத் தன்மையாகும்.

எவ்வாறாயினும், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் பிரதானமாக விவசாயம் மற்றும் மீன்பிடி பொருளாதாரத்தில் தரகு வியாபாரம் செய்பவர்களாக உள்ளனர். சிவில் யுத்தத்தின் காரணமாக பாரிய அளவிலான இடப்பெயர்வு, விவசாய நிலங்கள் மற்றும் கடற்கரைகளில் கண்ணி வெடிகள், மற்றும் உறவினர்கள் அனைவருடனும் வெளிநாடுகளுக்கு பெரும் ஜனத்திரளின் வெளியேற்றமானது, உள்ளுர் ரீதியாக அல்லது வெளிநாடுகளில் குடியேறுவதற்கு “எதிர்ப்பு ஆர்ப்பாட்ட விளைவை” ஏற்படுத்தியுள்ளது (சர்வானந்தன், 2006 மற்றும் 2008). முரண்பாடுகளின் போது, சேவைகள் துறையே மாகாணத்தின் பொருளாதாரத்தில் பாரிய பங்காற்றியது (65மூக்கும் மேல்), தேசிய பொருளாதாரத்தில் சேவைகள் துறை ஆற்றும் பங்கினைவிட (50மூ) இது அதிகமாகும். எவ்வாறாயினும், தற்போது (முன்னரும்) மோதலால் பாதிக்கப்பட்ட இரண்டு மாகாணங்களினதும் சேவைகள் துறை என்பன குறைந்த உற்பத்தித் திறனுடைய பாதுகாப்பு மற்றும் பொதுநிர்வாக உபதுறைகளின் செல்வாக்குடையதாக காணப்படுகின்றது (சர்வானந்தன், 2008).

இந்த குறைந்தபட்ச உற்பத்திதிறன் சேவைகளின் உபசேவைகள் உலக சந்தையில் போட்டியிடுவதற்கான உயர் உற்பத்திதிறன் வாய்ந்த நவீன அறிவுடைய பொருளாதாரமாக உருமாற்றப்பட வேண்டும். மோதலில் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அறிவுசார்ந்த பொருளாதாரத்தை காப்பாற்றுவதுடன், விரிவாக்கல் செய்ய வேண்டும். அறிவு பொருளாதாரத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி என்பன தவிர்க்க முடியாத இரண்டு அம்சங்களாகும். அருகில், முழுமையாக சுதந்திரமான, தனியார் பாடசாலைகள் மற்றும் பிராந்திய கல்வி நிறுவுனங்கள் (உதாரணமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பஃதொழிற்பயிற்சி உயர் கல்வி கல்லூரிகள்) என்பனவும் அறிவு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாதனவாகும். அரசாங்கத்தின் கீழ் செயற்படும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் மேலதிகஃஉயர் கல்வி நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக போட்டியிடும் மாணவர்களை உருவாக்க வேண்டும். அரசாங்கம் தேவைப்படும் மாணவர்களுக்கு நேரடியாக நிதி வளங்களை வழங்க வேண்டும். எனவே, அவர்கள் தமது விருப்பத்திற்கு அமைய பொது அல்லது தனியார் நிறுவகங்களில் கல்வி சேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்கும்.

பல்கலைக்கழக உபவேந்தர்கள் அரசியல் அதிகாரிகள் அதாவது நாட்டின் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் உலகின் மிகச் சில நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இது வேடிக்கைக்குரிய விடயமாகும். சுதந்திரமான ஆட்சிமுறையின் அங்கங்களுக்கான நியமனங்கள், உதாரணமாக நீதி, கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய வங்கி என்பன சுதந்திரமான, பக்கச்சார்பற்ற மதிப்புக்குரிய துறைகளில் சிறந்த நபர்களால் ஆன குழுவினால் வழங்கப்பட வேண்டும்.

6. நிதியியல் சுயாட்சி

யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில், தேசிய அரசாங்கம் நிதி, பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரம் தவிர அதன் பெரும்பாலான நடவடிக்கைகளையும், பொறுப்புக்களையும் அனைத்து 9 மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். ஒருங்கிணைக்கப்பட்ட நாடொன்றின் கீழ் மாகாண அரசாங்கங்களின் ஒழுங்குபடுத்தும் கருவியாக செயற்படுவதே தேசிய அரசாங்கத்தின் பிரதான செயற்பாடாகும். உதாரணமாக மாகாண அரசாங்கங்களின் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையில் நிரப்பலை விதித்தல். அதன் செயற்பாடுகளையும், பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக, மாகாண அரசாங்கங்களுக்கு நிதி சம்பந்தமான சுயாட்சி வழங்கப்பட வேண்டும். அதாவது, தமது மாகாணத்திற்குள் வருமானத்தை அதிகரிப்பதற்கும், ஈட்டுவதற்கும் அதனை பொது சேவையில் பயன்படுத்துவதற்குமான அதிகாரம். ஒவ்வொரு மாகாணமும் ஏற்றுமதிக்கான ஏற்றுமதி வரி, சுங்கத் தீர்வை மற்றும் பெறுமதி சேர் வரிகளைத் தவிர வரிகளை விதிக்கவும் சேமிக்கவும் வேண்டும். ஆகையால், தேசிய அரசாங்கத்தின் வருமானம் பிரதானமாக சர்வதேச வர்த்தகத்தின் தீர்வையிலும், வரிகளிலுமே தங்கியிருக்கும். ஒவ்வொரு மாகாணத்திலும் செயற்படும் வர்த்தகங்கள் அம்மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டு அம்மாகாண அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும்(நேரடியாகவும், மறைமுகமாகவும்). தனியார் மற்றும் பொதுத் துறை ஆகிய இரண்டு துறைகளினதும் ஊழியர்கள் மாகாண அரசாங்கத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டும். அதேநேரத்தில், தேசிய அரசாங்க ஊழியர்களும் (மத்திய வங்கி ஊழியர்கள், முப்படைகளின் உறுப்பினர்கள், நிதி அமைச்சின் ஊழியர்கள் போன்றோர்) தேசிய அரசாங்கத்திற்கே வருமான வரி செலுத்த வேண்டும்.

மாகாணங்களுக்கு நிதி சம்பந்தமான தன்னாட்சியை வழங்குவதன் மூலம், மாகாணங்களுக்கு இடையில் போட்டித் தன்மையை உருவாக்கி வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் (உள்ளுர் மற்றும் வெளியூர் இரண்டிலுமே) தேசிய அரசாங்கத்தால் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். மேற்குறிப்பிட்ட வகையில் மாகாணங்களுக்கு நிதிசம்பந்தமான இடத்தினை வழங்கும் போது மாகாணங்களுக்கு இடையில் உற்பத்தியிலும் போட்டித் தன்மையான சூழலையும் உருவாக்க முடியும். தற்போது செயற்படும் முறைக்கு வெளியே அரசாங்கம் செயற்பட வேண்டும். எதிரெதிராக மாகாணங்களுக்கு குறிப்பிட்ட தகைமைகளின் அடிப்படையில் வருடாந்த மானியம் வழங்குதல் வேண்டும். தற்போது மத்தியில் இருந்து மாகாணத்திற்கு அனுப்பப்படும் நிதி பொதுவாக சம்பளம், ஒய்வூதியம் மற்றும் மாகாண செலவுகளுக்கானதாகவே காணப்படுகின்றது. எதிரிடையாக, பணம் ஈட்டுவதற்கும், தமது சொந்த பணத்தை செலவிடுவதற்கும் மாகாணங்களுக்கு ஊக்கம் வழங்கப்பட வேண்டும்.

தேசிய அரசாங்கத்தின் முழுமையான வருமானம் கடந்த 20 வருடங்களாக(1989 முதல்) அரசாங்கத்தின் மீள்செலவீனங்களை சமாளிப்பதற்கே போதுமானதாக இல்லை. எனவே, அரசாங்கத்தின் மீள்செலவீனத்தின் ஒரு பகுதியும், முதலீட்டு செலவீனமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வழங்கல்களின் மூலமே ஈடு செய்யப்படுகின்றது. அதற்கும் மேலாக, அரசாங்கத்தின் வருடாந்த வருமானத்தின் பெரும் பகுதியில் பொதுமக்கள் கடன்களின் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) மீள்வழங்கலுக்கு பயன்படுத்தப்படுகின்றது. தேசிய அரசாங்கம் கட்டத்திற்கு வெளியே சிந்தித்து இயற்கையையும், தேசிய அரசாங்கத்தின் நேருக்கு நேரான மாகாண அரசாங்கங்களின் நிதி சம்பந்தமான கட்டமைப்பின் உள்ளடக்கம் மற்றும் வெளியடக்கம் ஆகியவற்றையும் உருமாற்றி நிதி சம்பந்தமான குறைபாடுகளை நிரப்புவதற்கு இது சிறந்த தருணமாகும்.

மோதல் பிராந்தியத்திற்கான பொருளாதார மறுமலர்ச்சிக்கான அரசாங்கத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட தந்திரபோயம் பௌதீகம் (வீடுகள், வீதிகள், பாலங்கள், இன்னபிற), பொருளாதாரம் (மின்சாரம், நீர், தொலைத்தொடர்பு, ரயில்சேவை, இன்னபிற), மற்றும் சமூகம் (பாடசாலைகள், வைத்தியசாலைகள், இன்னபிற), உட்கட்டமைப்பு அபிவிருத்தி, ஆகிய இன்றியமையாத விடயங்களை இலக்காகக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், இவ்வாறான உட்கட்டமைப்பு செயற்றிட்டங்களுக்கு நிதிவழங்குதல் தொடர்பில் என்னிடம் வள ஒதுக்கீடொன்று உள்ளது. அரசாங்கத்தின் மிகநெருக்கமான நிதி சம்பந்தமான இடத்தை குறிப்பிட்டாக வேண்டும். இவ்வாறான உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான போதிய நிதிவசதி அரசாங்கத்திடம் இருப்பதாக நான் கருதவில்லை. ஏனெனில், அவற்றுக்கு அதிக செலவாகும். அதுமாத்திரமின்றி, உலக பொருளாதார நெருக்கடி வெளி அரசியல் உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வெளி நிதியுதவியாளர்களிடம் (இருபக்கங்களில் மற்றும் பல்பக்கங்களில்) இருந்து போதிய அளவான நிதியை பெறமுடியாத நிலை அரசாங்கத்திற்கு உள்ளது.

இந்த நிலையில், பி.ஓ.ஓ (டீழுழு கட்டு, செயற்படு மற்றும் சொந்தமாக) அல்லது பி.ஓ.ரி (கட்டு, செயற்படு மற்றும் மாற்று) நுட்பத்தின் கீழ் மோதல் பகுதிகளிலும் அப்பாலும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீட்டுக்கு தனியார் மூலதனத்தை (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) கவரச் செய்வதே அரசாங்கத்திற்கு எஞ்சியுள்ள வழியாகும். வவுனியாவில்; இருந்து காங்கேசன்துறை வரையான ரயில் பாதையை மீளக்கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சி பாராட்டத்தக்கது. ஏனெனில், வடக்கிற்கான ரயில் சேவையே (‘யாழ்தேவி’) 1980களின் மத்தியப் பகுதியில் சிவில் யுத்தம் காரணமாக இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தின் ரயில்சேவைகளுக்கு(ஊபுசு) அதிக வருமானம் ஈட்டித் தரும் ரயில்சேவையாக இருந்துள்ளது. அதற்கு அப்பால், ஒரு நபருக்கான குறைந்த எண்ணெய் செலவீனம் காரணமாகவும், போக்குவரத்து வீதிதடைகள் மற்றும் சோதனைச் சாவடிகள் இன்மையாலும் வீதி, கடல் மற்றும் ஆகாய போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து இலாபகரமானது.

எவ்வாறாயினும், இந்த உறுதியான, பயன்மிக்க செயற்றிட்டத்துக்கு செலவு செய்வதற்கான போதிய நிதிவளங்கள் அரசாங்கத்திடம் இல்லையென்றே நான் நினைக்கின்றேன். அரசாங்கம் வெளிப்படையாகவே பொதுமக்களின் ஆதரவை கோரியுள்ளதுடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கை இராஜதந்திர அலுவலகங்கள் இலங்கையிலிருந்து சென்று வெளிநாடுகளில் வசித்து வருபவர்களிடம் நிதிபெறுவதற்கான ‘நன்கொடை நிகழ்ச்சிகளை’ நடத்தி வருகின்றன. ஆனால் அவை போதிய அளவு பயனை தரவில்லை. மத்திய வங்கிக்கு அமைய (2008:69), ரயில்வே திணைக்களம் 2008ஆம் ஆண்டில் நாளாந்தம் 12.5 மில்லியன் ரூபாயை செயற்பாட்டு நட்டமாக காட்டியுள்ளது(வருடாந்த நட்டம் 4,553 மில்லியன் இலங்கை ரூபாய் அல்லது 43 மில்லியன் அமெரிக்க டொலர்கள்).அரசாங்கத்தால் சொந்த பணத்தை பயன்படுத்தியும், வெளிநாட்டு நிதிவழங்குநர்களிடம் இருந்து பெறும் பணத்தை பயன்படுத்தியும் ரயில் பாதைகளையும், ரயில் நிலையங்களையும் (உட்கட்டமைப்பு) மீளமைக்க முடியவில்லையாயின், பயணிகள் போக்குவரத்தை தனியார் துறைக்கு (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) ஒப்படைக்கலாம் என்பதே எமது ஆலோசனையாக இருக்கின்றது. அதாவது, ரயில் இயந்திரங்கள், ரயில் பெட்டிகள் என்பன தனியார் துறையினால் முதலீடு செய்யப்பட்டு, முகாமைத்துவம் செய்யப்பட்டு நிர்வகிக்கப்படலாம். இவ்வாறான பொது மற்றும் தனியார் இணைந்த நடவடிக்கையே அரசாங்கம் எதிர்நோக்கும் நிதி சம்பந்தமான பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறந்த தீர்வாகும். அத்துடன், தேசிய அரசாங்கம் ரயில் பாதைகளையும், ரயில் நிலையங்களையும் மீளமைக்க ஆரம்பிக்க வேண்டும். இதன் பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்த மாகாண அரசாங்கங்களிற்கு ஒப்படைக்கப்படல் வேண்டும்.

7. முடிவுரை

எல்.ரி.ரி.ஈயின் தொடர்ச்சியான மற்றும் இறுதியான தோல்வியானது சவால்களையும், சந்தர்ப்பங்களையும் வழங்கியுள்ளது. தமிழ் அரசியல் தலைமைத்துவமும், தேசிய அரசியல் தலைமைத்துவமும் அவர்களை நிலைமாற்றி யுத்தத்தின் பின்னர் இலங்கை எதிர்நோக்கும் சவால்களை சந்திப்பதற்கு இந்த வரலாற்று சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். யுத்தத்திற்கு பின்னரான இலங்கைக்கு பொதுவாக மற்றும் விசேடமாக மோதல் பிராந்தியத்திற்கு நாங்கள் முன்வைக்கும் பரந்த கொள்கை திட்டவரைபுகள் பின்வருமாறு:

1. பொருளாதார தந்திரோபாயம் – மோதல் பிராந்தியத்தில் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளின் வழிகாட்டிகளின் கொள்கைகளுக்கு அமைய பொருளாதார சுதந்திரம், மாகாண ரீதியாகவும், தேசிய ரீதியாகவும்.

2. தொகுதி தந்திரோபாயம் – பொருளாதார மறுமலர்ச்சிக்கு அறிவு பொருளாதாரமே பிரதான அம்சமாகும். அத்துடன் ஏனைய பகுதிகளைப் பிடிப்பதற்கு மோதல் பிராந்தியம் வேகமாக செயற்படுதல்.

3. அரச சீர்திருத்தம் – செவிலித்தாய் நிலையிலிருந்து அதிகாரமளிக்கும் நிலைக்கு மாற்றுதல்.

4. தமிழர்களுக்கான அரசியல் சீர்திருத்தம் – பிராந்திய அடையாளத்தின் ஊடாக குறகிய மொழிசார்ந்த மற்றும் இன அடையாளத்தை நிலைமாற்றுதல்.

5. ஆட்சிமுறைமை சீர்திருத்தம் – உண்மையாகவே சுதந்திரமான ஆட்சிமுறை அங்கங்கள் பாதுகாப்பளிப்பதுடன், ஜனநாயகத்தை பிரபலப்படுத்துவதுடன், நீதியையும் சட்டவிதிகளையும் உறுதி செய்கின்றன.

6. குறிக்கப்பட்ட சீர்திருத்தங்களுக்கான நிதி வழங்கல் – குறிக்கப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களுக்கு நிதி சம்பந்தமான தன்னாட்சியே பிரதான அம்சமாகும்.

நெல்சன் மண்டேலா மற்றும் எப். டுபிள்யு. டி கிளர்க் போன்றவர்கள் இரண்டு இனபிரிவுகளிலும் இந்த நேரத்தில் இலங்கைக்கு தேவையானவர்களாகும். இலங்கையில் இரு தரப்பிலும் தகுதியான அபேட்சகர்களை என்னால் இதுவரை இனங்கான முடியவில்லை. நான் தவறாக நினைத்திருப்பதாக கருதுகின்றேன். இலங்கை மக்களின் ஆர்வம், மிக முக்கியமாக மோதல் பிராந்தியத்தில் உள்ளவர்கள், இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஜேர்மனியர்களும், ஜப்பானியர்களும் இருந்ததைப் போல் இருக்க வேண்டும். ஒன்றாக நாங்கள் சாம்பலில் இருந்து எழுவோம் அல்லது எங்களை எரித்துக் கொள்வோம். இது செய் அல்லது செத்துமடி சூழ்நிலை. நம்பிக்கை கொள்பவர்கள் தயவுசெய்து எழுந்து நில்லுங்கள்?
– thenee –

Read Full Post »

தற்போதைய சூழலில் இலங்கையில் மிகவும் பிரச்சாரப்படுத்தப்பட்ட ரீதியில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி தொடர்பாக பல புலம்பெயர் மக்களும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக தெரிகிறது. உண்மையில் இது இலங்கையில் அவர்களின் கைகளை உயர்தப்போகும் பாமர மக்களின் பார்வையில் எப்படியுள்ளது என்பதே இந்தக் கட்டுரை

“பாமரமக்கள்” இலங்கைத் தீவில் காலாகலமாக சிறிய சுனாமிக்கும் பெரிய சுனாமிக்கும் முகம் கொடுத்து சித்திரவதைப்பட்டாலும் ஓடி ஒழிந்து கொள்ளாமல் மீண்டும் துளிர்த்துக் கொண்டிருக்கும் போதி மரங்கள் அவர்கள் அவர்களின் உண்ர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டாமோ?

தனக்கு பிறந்த மகளுக்கு முடியிறக்கியபோது ஆரம்பித்த சனியன், கொடூரம் தனது பேத்தியின் திருமணத் திகதிக்கு முடிவுற்றிருக்கிறது. இத்தனை கால இடைவெளியில் இழந்ததையும், இல்லாமல் போனவற்றையும் மறந்து போயிருக்கிறார்கள் அந்த மக்கள் காரணம் ஞாபகம் வைத்துக்கொள்ள கூடிய அளவில் அவை இருக்கவில்லை அதைவிட எத்தனையோ GBக்கள் அவை அதிகமானவை. எனவே ஹிரோ போன்றிருந்த அவர்கள் பிச்சைக்காரனின் உருவத்திலும், எதியோப்பிய ஏழைகளின் உடல் பலத்திலும் அந்த மகா அலெக்ஸேன்டரின் மனபலத்திலும் உள்ளனர்.

இழந்தவற்றை மீட்க முயற்சிப்பது புத்திசாலித்தனமல்ல! என்பது அவர்களுக்கு வாழ்கை கொடுத்த பாடம் இனி அதற்கு தேவையான ஆயுலும் அவர்களிடம் இல்லை. எனவே இனி இருப்பதை காப்பதே அவர்களின் ஒரே குறிக்கோளாக உள்ளது.

அரசியல்வாதியைக் கண்டால் ஒதுங்கி நடக்கிறார்கள், அநியாயக் காரர்களைக் கண்டால் உமிழ்ந்து விடுகிறார்கள், ஹிரோயிஷமும், கோஷங்களும், விடுதலைப் பாடல்களையும் கண்டால் அவர்கள் ஒரு கும்பிடு போட்டுவிடுகிறார்கள். அவர்களின் தேவை பசித்த வயிற்றுக்கு ஒரு நேரமாவது சோறு, மிஞ்சியிருக்கும் குஞ்சுகளின் எதிர்காலத்திற்கான கல்வியும் வழிகாட்டுதலும் அவ்வளவுதான்.

அவர்கள் மட்டும் எழுத்தாளர்களாக இருந்திருந்தால் உலகத்தில் அதிகம் விற்பனையாகும் நாவல் அவர்களுடையதாக இருக்கும், டைரக்கடராக இருந்திருந்தால் ஒவ்வொறு வருட ஒஸ்கார் அகடமி அவாடுகளும் இலங்கைக்கு வெளியே பல ஆண்டுகளுக்கு செல்லாது, அவர்கள் ஐ.நாவில் இருந்திருந்தால் உலக முழுமையிலும் சமாதானத்தைத் தவிர எதுவும் இருக்காது அவ்வளவு முதிர்ச்சியும் அனுபவமும் அவர்கள் அடைந்திருக்கிறார்கள் குட்டுப்பட்டு கற்றவையல்ல அவை காசிக்கு விற்க. வெட்டுப்பட்டு, சுடப்பட்டு, சொந்தத்தை இழந்து, கணவனை இழந்து, தாயை இழந்து, தந்தையை இழந்து, தடை முகாமிலிருந்து கற்றவை. எனவே இலகுவாக அவர்கள் யாரையும் நம்பத் தயாராகவில்லை என்பதே உண்மை.

இன்னும் சரியாகச் சொல்வதானால் உலகில் “சைபர் வேல்ட்” “ரியல் வேல்ட” என்று இரண்டு உலகம் உண்டு என்று கம்பியூட்டர் காரர்கள் சொல்வதைப் போல, “புலம் பெயர் தமிழர் உலகம்” “இலங்தை தமிழர் உலகம்” என இரண்டு உண்டு இதில் புலம் பெயர் தமிழர்களின் உலகத்திற்கும் இலங்கைத் தமிழர்களின் உலகிற்கும் இடையில் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூர வித்தியாசமுண்டு.

இதில் முன்னயவர்கள் கற்பனையை கதையாக்குகின்றவர்கள், பின்னயவர்கள் வாழ்கையை கதையாக்குபவர்கள் எனவே கமேஸியலாக கற்பனைக்கு வரவேற்ப்பு அதிகம் என்றாலும் அவை வாழ்கைக்கு உதவாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது இலங்கையில் அமைக்கப்படுகின்ற ஆளும் அரசுக்கு எதிரான அரசியல் கூட்டணி தொடர்பில் புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும் இலங்கையில் கஸ்டப்படாமல் வாழும் மேல் வர்கத்தாலும் அதிகம் அலசப்பட்டாலும் அதனை வெற்றி அல்லது தோல்வியடையச் செய்யும் உயிர் சக்திகளாக உள்ள பாமர மக்களின் மத்தியில் எந்த பரபரப்பையும் அல்லது நம்பிக்கையையும் காணமுடியவில்லை.

காரணம் வட்டுக் கோட்டை தீர்மாணம் முதல் ஒரு நாட்டுக்குள் தீர்வு என்ற கோஷம் வரை பலதரப்பட்ட அரசியல் தீர்க்கதரிசிகளின் நிஜ, நிழல் உருவங்களைப் பார்த்தவர்கள். தன்னால் முடியாது என்று பாயில் தான் படுக்கும் வேலையில் தன் பிள்ளை சோற்றுக்காக அழுவதை தினம் கேட்பவர்கள் எனவே அவர்களிடம் எந்த அரசியல் சாணக்கியமும் இனி பலிக்கும் என்று எதிர்பார்ப்பது தப்பு.

தற்போது ஆட்சியிலிருக்கும் ஆட்சியாளர்கள் ஆனாலும் சரியே அல்லது தற்போது அமைக்கப்பட்டுள்ள கூட்டணியானாலும் சரியே இவர்கள் யார்? மக்களுக்கு இக்கட்டான சூழல் ஏற்படும் போதெல்லாம் இவர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர்? எங்கெல்லாம் ஓடி ஒழிந்து கொண்டனர் ? என்பதையெல்லாம் அக்குவேறு ஆணிவேறாக அறிந்தவர்கள்.

அவர்களின் பாஷையில் எழுதுவதானால் பொல்லைக் கொடுத்து அடியும் வாங்கியவர்கள் மக்கள். ஆட்சியதிகாரத்தை கொடுத்து கட்டியிருந்த கோவணத்தையும் இழந்தவர்கள் எனவே இவர்கள் யார் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை.

தற்போது அமைக்கப்பட்டுள்ள எதிரணி அரசியல் கூட்டணியை நோக்குவோமாயின் அதில் இடம்பெற்றுள்ள தமிழர் கட்சிகளின்மீது சாதாரண பொது மக்களுக்கு அதிக அதிருப்திகள் உள்ளதை காண முடிகிறது. அதில் பிரதான குற்றச் சாட்டாக மக்கள் வைப்பது இவர்கள் தங்களின் ஒற்றுமையை மக்களுக்கு அவசியமான மற்றும் மக்களை காக்க வேண்டிய நேரங்களில் எல்லாம் பிரிந்து செயற்பட்டு விட்டு இன்று ஓரளவு மக்கள் சாதாரண வாழ்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது தேவையில்லாத நேரத்தில் கூட்டணி சேர்ந்திருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.

நீங்கள் கேட்கலாம்!. இதுதானே மிகவும் முக்கியிமான தருணம் இப்போது கூட்டணி சேர்ந்து ஒற்றுமையாக செயற்படுவது சரியானதுதானே என்று? இல்லை மக்களின் பார்வையில் அவர்களுக்கு அவர்களின் உயிர்களை விட இது முக்கியமான தருணமாகத் தெரியவில்லை. இந்தக் கூட்டணி சில வருடங்களுக்கு முன்னர் ஒற்றுமையாக செயற்பட்டு தமிழர்களின் பிரச்சினையை ஒன்றாக சர்வதேசத்திடம் முன்வைத்திருந்தால் இன்று அவர்கள் இழந்தது எல்லாம் இல்லாமல் இருந்திருக்குமே! எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்குமே! எவ்வளவோ அனாதைகள் குடுப்பத்துடன் வாழ்ந்திருக்குமே! எவ்வளவோ விதவைகள் சுமங்களியாக இருந்திருப்பார்களே! எத்தனையோ அங்கவீனர்கள் முழு மனிதர்களாக உலாவியிருப்பார்களே! கண்கெட்ட பின் எதற்கு சூரிய நமஸ்காரம்.

இதற்கு முன்னர் இவர்கள் பல கூட்டணிகள் இயக்கங்களிலும் இருந்தபோது ஒவ்வோறு தடவையும் இனித் திருந்திவிடுவார்கள் என்றுதானே அவர்களை மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் மக்கள் அனுப்பியிருந்தனர் அப்போதெல்லாம் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையைத் தவிர எதையும் மக்கள் காணமுடியவில்லை.

தமிழர்களுக்கு மிகவும் இக்கட்டான காலகட்டமான யுத்தக்காலத்தில் கூட காத்திரமான எந்த நடவடிக்கையையோ அல்லது இவர்களுக்குள் ஒரு பொது நன்மைக்காக ஒற்றுமையையோ பேணமுடியாதவர்களா? இனி வரும் காலத்தில் ஒற்றுமையாக செயற்படப் போகிறார்கள் என ஒரு கேள்வி மக்களின் இதயங்களில் தொற்கி நிற்கிறது.

தற்போது இலங்கையில் எதிர்கட்சிகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள கூட்டனியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தொடர்பாக தமிழர்கள் மத்தியில் அதிக மனவருத்தங்கள் அவர்களின் மனங்களில் அசைக்கமுடியாமல் உள்ளது. இதனை கழுவுவது தற்போதைக்கு மிகவும் கடினமாகவே இருக்கப்போகிறது. என்பதுடன் இவர்கள் ஒவ்வொருவர் தொடர்பாகவும் பல குற்றச்சாட்டுக்களை மக்கள் முன்வைக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன.

ஆளும் கூட்டணியைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கள் மத்தியில் ஒரே சில குற்றச்சாடுகள் மட்டுமே சொல்வதை காணமுடிகிறது. தற்போதைய ஜனாதிபதியை மறைந்த பிரபாகரன் “யதார்தமான அரசியல்வாதி” என்று அழைத்ததைப் போலவே மக்களின் மனதிலும் அவர் குறித்த நல்லென்னம் வலுப்பெற்று வருவதைக் காணமுடிகிறது.

இதற்கு காரணம் இலங்கையில் முதல்வன் பட பாணியில் நடக்கும் அதிரடியான சட்டதிட்ட மாற்றங்களும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுமாகும். இலங்கையில் புலிகள் தொடக்கம் பாதாள உலகக் கூட்டத்தினரிலிருந்து ஆயுதத்தை வைத்துக் கொண்டு அராஜகம் புரிந்த இஸ்லாமியர்கள் வரை அனைவரும் ஒரு பார்வையில் அடக்கி ஒடுக்கப்பட்டதும் மக்கள் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஒரளவாவது நிம்மதிப் பெருமூச்சு விடுவதுமாகும்.

அவ்வப்போது தற்போதைய அரசினால் பிரச்சனைகளுக்கு எடுக்கப்படும் அதிரடி சரியான முடிவுகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

தற்போது அமைக்கப்பட்டுள்ள எதிரணிக் கூட்டணியில் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியவர்கள் என்று சொல்லிக் கொள்ள எந்த நீதி வழுவாக் கட்சியோ அல்லது நியாயமான அரசியல் வாதிகளோ இல்லை அனைவரும் மக்களுக்கு பழக்கப்பட்ட சலித்துப்போன முகமுடையவர்களாகவே இருக்கின்றனர்.

அரசனை நம்பி மக்கள் புருஷனை கைவிட்ட கதைகள் தமிழர்கள் வாழ்கையில் ஏற்கனவே பல துன்ப துயரங்களை தந்துவிட்டன. தற்போது அவ்வளவு அவசரப்பட்டு தமிழர்கள் கைவிட முற்பட மாட்டார்கள். அத்துடன் தற்போதைய அரசினால் பகிரங்கமாக முன்னெடுக்கப்படும் பல புத்த மதத்தை புகுத்தும் பாணியிலான செயல்கள் தமிழர்களிடம் முகம் சுழிக்கச் செய்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

என்றாலும் ஆட்சியிலுள்ள அரசு நாடு நலன் சார்ந்த விடயங்களில் மிகவும் துணிச்சலாகவே செயற்படுவதை காணமுடிகிறது. எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் இலங்கையர் என்பதை வளர்ச்சி அடைந்த நாடுகளின் தரத்திற்கேட்ப்ப காட்டுவது படித்தவர்கள் மற்றும் பாமரர்கள் மத்தியில் கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதாரிகளையும், கள்வர்களையும், அடாவடித்தனம் புரிபவர்களையும் அரசு கையாளும் முறையையும் ஈவிரக்கமின்றி பகிரங்கமாக அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவதையும் பொது மக்கள் நேரடியாக ஆதரிக்கின்றனர்.

இந்த அரசு தவிர வேறெந்த அரசும் செய்யத் தராணியற்றிருந்த மிகவும் துணிச்சலான செயற்பாடுகளை அந்தந்த கால, சூழ்நிலைக்கேற்ப ஜனாதிபதி துணிச்சலாகச் செய்வதினால் இன்னும் அவர் மக்களின் மனதில் ஹிரோவாகத்தான் இருக்கிறார். இந்த இடத்தை மிக எளிதில் எவரும் கைப்பற்ற முடியுமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

இதை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது இது அடை மழைக்காலம் என்பதால் அரிசியை உற்பத்தியாளர்களிடம் வாங்கி அதனை பதுக்கும் பணியில் பல கொழுத்த பண முதலைகள் ஈடுபட்டிருந்தன. இந்த செயல் அதிகமாக இலங்கையின் நெல் உற்பத்தியில் 25% தரும் கிழக்கில் அதிகமாகவே இருந்தது என்றாலும் நெல்லைப் பதுக்கி செயற்கைத் தட்டுப்பாட்டை அரிசிக்கு ஏற்படுத்தினால் குறைந்த விலையில் அரிசி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என்ற அரசின் அதிரடி அறிவிப்பினால் விலை ஏறிச் சென்ற அரிசி தற்போது விலை வீழ்சியடைய ஆரம்பித்துள்ளது. கல்முனை, சம்மாந்துறை உட்பட அம்பாறை மாவட்டத்தில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது இஸ்லாமிய சட்டப்படி கூடாது என்பதுடன் யாரும் பதுக்கி வைத்தால் உங்கள் நெல்லுக்கு நீங்கள் தற்போது பெறும் விலையை விட குறைந்த விலையில் நெல்லை விற்க நேரிடும் என்ற எச்சரிக்கை பள்ளிவாயல்களில் விடுக்கப்பட்டது. தற்போது அரிசி தட்டுப்பாடு இன்றி மக்களுக்கு கிடைக்கின்றது. இத்தகைய அதிரடிச் செயற்பாடுகளில் பாமர மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர் நேசிக்கின்றனர்.

இலங்கையில் ஆட்சியுள்ள அரசினால் அதிரடியாகச் செய்யப்படும் சட்டதிட்ட மாற்றங்கள், மக்கள் நலன் சார்ந்த விடயங்கள், அபிவிருத்தித் திட்டங்கள், சுமூகமான வாழ்கை, மக்கள் அதிசயக்கின்ற செயற்திட்டங்கள் என அனைத்தையும் மீறி எதிர் கட்சிகள் கூட்டமைப்பு வெற்றியடையும் என கட்டியம் கூற முடியாதுள்ளது.

கீரைக் கடைக்கும் எதிர் கடை வேண்டும் என்ற விடயத்துக்காகவோ அல்லது தற்போதுள்ள கட்சிகளையும் இழந்துவிட்டால் தமிழ் சமூகம் அநாதையாகிவிடும் என்று சிலருக்கிருக்கின்ற பயத்தினாலோ இக் கூட்டணி ஆதரிக்கலாமே ஒழிய! அவர்களை ஆதரிப்பதால் தற்போதைய சுமூக நிலையை விட உடனடியாக எதனையும் எதிரணிக் கூட்டமைப்பினால் செய்துவிட முடியாது என்பது மக்களுக்குத் தெரியும்.

பழைய பழுத்த அரசியல் வாதிகள் சிலர் அரசியலில் இருந்து விலகுவதும் ஆளும் கூட்டணியில் பல படித்த முகங்கள் அறிமுகம் செய்யப்படுவதும் ஆளும் கட்சிக்கு ப்பிளஸ் பொயிண்டாக இருக்கின்றது. காரணம் பழுத்த பழங்கங்கள் மக்களை ஏமாற்றிய கதைகள் சந்திகளில் கதைக்கப்படுவதால் இது சாத்தியமாகியுள்ளது.

இனி நடக்க இருக்கின்ற தேர்தல்கள் முஸ்லீம் காங்கிரஸ் உட்பட அனைவருக்கும் பல நெஞ்சுவலிகளை ஏற்படுத்தப் போவது உறுதி. காரணம் புலிகள் இருக்கும்வரை நாம் முஸ்லீம் காங்கிரஸை பாதுகாக்கவேண்டிய தேவையிருந்தது. இனி ஒற்றுமையான நாடு என்று வரும்போது நாம் பிரிந்து இனத்துவேஷம் பேசுவது கூடாது என்று பல முஸ்லீம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினர்களே பேசுவதை காண முடிகிறது.

தமிழர்களுக்கான சரியான தீர்வுத் திட்டம் மட்டும் தற்போதைய அரசினால் முன்வைக்கப்பட்டால் இனி தமிழ் மக்களின் எந்த சந்தேகப் பார்வைக்கும் ஆளும் அரசு உட்படப்போவதில்லை.

ஆனால் எதிர் கூட்டணியைப் பொறுத்தவரை தனிப்பட்ட ரீதியிலும் கட்சி ரீதியிலும் ஆளும் தரப்பை விட அதிக குறைகளுடன் இவர்கள் நோக்கப்படுகின்றனர். அத்துடன் இவர்களுக்குள் இருக்கும் பணிப்போரும் ஒற்றுமையின்மையும் அவர்களை விட பாமர மக்களுக்கு நன்றாகத் தெரிகிறது.

எனவே தற்போதைய சூழலில் எதிர்கட்சிக் கூட்டணி தேர்தலில் வென்றால் அது இன்னும் ஒரு அதிசயமாகவே அமையும்.

ஆக்கம்
இலங்கையிலிருந்து-கிழக்கான் ஆதம்.
– thenee –

Read Full Post »

5 தடவை நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டும் மகாத்மா காந்திக்கு பரிசு கிடைக்காமல் போனது ஏன்?

இது உலகம் முழுவதும் வரவேற்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரு நாட்டின் விடுதலைக்காக அகிம்சை முறையில் போராடி உலகையே தன் பக்கம் திரும்பச் செய்த மகாத்மா காந்திக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
k1
இத்தனைக்கும் 1937, 1938, 1939, 1947 மற்றும் 1948 (காந்தி இறந்த பின்) ஆகிய 5 ஆண்டுகளில் நோபல் பரிசுக்காக மகாத்மா காந்தி சிபாரிசு செய்யப்பட்டார்.

இதில் கடுமையான போட்டிக்கு இடையில் 1937, 1947 மற்றும் 1948 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் மகாத்மாவின் பெயர் நோபல் பரிசுக்கான இறுதிச் சுற்று வரை சென்றது. எனினும் பரிசு கிடைக்கவில்லை. இது பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

மகாத்மா காந்திக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பதற்கு நோபல் பரிசு தெரிவுக் குழு பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளது.

முதன் முதலாக 1937 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு இறுதிச் சுற்றுவரைச் சென்றது. அப்போது, நோபல் தேர்வுக் குழுவின் ஆலோசகரும் பேராசிரியருமான ஜாக்கப் வோர்ம் முல்லர், காந்தி பற்றி எழுதிய குறிப்புகள்தான் காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனதற்கு காரணமாய் அமைந்தது.

அவர் எழுதிய குறிப்பு இதுதான்.

‘சந்தேகத்துக்கு இடமின்றி காந்தி நல்ல, மேன்மையான, தன்னலமில்லாத மனிதர்தான். பெரும்பான்மை மக்களால் கெளரவிக்கப்படக் கூடிய பெரிய மனிதராக திகழ்கிறவர்தான். எனினும் அவரது கொள்கைகளில் காணப்பட்ட திடீர் மாற்றங்கள் குறித்து அவரது ஆதரவாளர்களே கூட சிரமப்பட்டுத்தான் திருப்தியான விளக்கம் அளிக்க முடிகிறது. காந்தி ஒரு சுதந்திர போராட்டக்காரர், சர்வாதிகாரி, மிகுந்த சிந்தனை கொண்டவர், தேசபக்தர்.

அவர் அவ்வப்போது இயேசு போல் தோன்றினாலும் உடனடியாக சாதாரண பிரஜையாக மாறிவிடுவார். தொடர்ச்சியாக அவர் அஹிம்சை நெறியைப் பின்பற்றவில்லை. வெள்ளையர் அரசாங்கத்துக்கெதிராக அவர் செய்த பிரசாரங்கள் சிலநேரம் பெரும் கலவரத்தையும், வன்முறையையும் ஏற்படுத்தியுள்ளன.

1920 – 21 ஆம் ஆண்டு காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தின்போது சாவ்ரி சாவ்ரா என்னுமிடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு காவல் நிலையத்தை தாக்கியதில் பொலிஸார் பலர் உயிரிழந்தனர். பிறகு அந்த பொலிஸ் நிலையம் தீவைத்தும் கொளுத்தப்பட்டது.

மேலும் காந்தி, இந்திய தேசிவாதியாகத்தான் திகழ்ந்தார். தென்னாபிரிக்காவில் கூட அவர் இந்தியர்களுக்காக மட்டுமே போராடினார். அந்த நாட்டின் கறுப்பர் இன மக்களின் நிலைக்காக அவர் போராடவில்லை.
k1-1
இப்படி வோர்ம் முல்லர் எழுதிய குறிப்புகளால்தான் மகாத்மா காந்திக்கு முதல் தடவை நோபல் பரிசு வாய்ப்பு நழுவிப் போனது. இரண்டாவது தடவையாக 1947 ஆம் ஆண்டு மகாத்மாவின் பெயர் மீண்டும் நோபல் பரிசு தேர்வுக்கான இறுதிச் சுற்றுவரை சென்றது. இந்த தடவை தேர்வுக்குழு ஆலோசகராக இருந்தவர் ஜென்ஸ்.

3 தடவையாக பிரிசீலனை

11 ஆண்டுகளில் 3 தடவையாக, 1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் பெயர் நோபல் பரிசுக்கான இறுதிச் சுற்றுவரை சென்றது. துரதிர்ஷ்டவசமாக அந்த ஆண்டு ஜனவரி மாதம் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்.

அப்போது, காந்தியின் கடைசி 5 மாத செயல்பாடுகள் குறித்து நோபல் தேர்வுக்குழுவின் ஆலோசகர் செய்ப் நல்ல விதமாகவே எழுதினார்.

“காந்தி தனது வாழ்நாள் முழுவதும் நீதி மற்றும் அரசியல் நெறிமுறைகளை மட்டுமே கொள்கைகளாகக் கொண்டு செயல்பட்டார். இதனால் இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் அவர் வெகுவாக போற்றப்பட்டார். இந்த வகையில் அவர் ஒரு மதத்தை தோற்றுவித்தவர் போல் ஒப்பிடப்படுகிறார்” என்று செய்ப் தனது குறிப்பில் கூறியிருந்தார்.

இதனால் மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கிடைத்து விடும் என்றே கருதப்பட்டது. ஆனால் இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்குவதில் அப்போது, நோபல் பரிசு தேர்வுக்குழு ஒரு விசித்திர விதியை பின்பற்றி வந்தது.

அதன்படி பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டவர், தகுதி உடையவராக இருந்தால் அவர் ஏதாவதொரு அமைப்பைச் சார்ந்தவராக இருக்கவேண்டும். ஆனால் காந்தி எந்த அமைப்பிலும் இல்லை. இதனால் அவருக்கு பரிசு வழங்குவதில் தயக்கம் காட்டப்பட்டது.

ஏனென்றால் மகாத்மா காந்தி இறப்புக்கு பின் எந்த சொத்துக்களையும் விட்டுச் செல்லவில்லை. உயிலும் எழுதவில்லை. இதனால் நோபல் பரிசுத் தொகையை யார் பெறுவது என்பதில் கேள்வி எழுந்தது. பரிசை வழங்கும் சுவீடன் அமைப்பின் நிறுவனங்கள் இது குறித்து ஆலோசனை நடத்தின.

அவர்களது பதில் காந்திக்கு நோபல் பரிசு வழங்கிட சாதகமாக அமையவில்லை. ஏனெனில் நோபல் பரிசு பெறும் தகுதிக்குரியவர் இறக்கும் முன்பாகவே தேர்வுக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்று அந்த அமைப்புகள் கருதியதுதான்.

எனவே, தேர்வுக்குழு இறுதி முடிவு எடுக்கும் முன்பாகவே மகாத்மா காந்தி இறந்து விட்டதால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போய் விட்டது.

இறந்து விட்ட மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படாததால் 1948 ஆம் ஆண்டு வேறு யாருக்கும் நோபல் பரிசை வழங்க தேர்வுக்குழு விரும்பவில்லை.

இதனால் உயிருடன் இருக்கும் எவரும் அந்த ஆண்டு நோபல் பரிசை பெறும் தகுதியுடன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக 1948 ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை.

http://www.thinakaran.lk

Read Full Post »

அக்கினி இடித் தாக்கம்
அசுர வல்லமை ஊக்கம்
அப்படிப் பொறுமை யற்ற புயலினிலே
புதுநெறி படைக்க வேண்டி
புறப்படும் எமது கனவுகள்.
kalam

இன்று டாக்டர், பாரத ரத்னா, பாரத விபுசன், ராக்கெட் பிதாமகன், கவிஞர், அனு விஞ்ஞானி அபுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாமுக்கு எழுபத்தெட்டாவது பிறந்த தினம்.

(இன்று உலக மக்கள் தங்கள் கைகளை கழுவும் தினமும் கூட உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல்படி ஆண்டுக்கு 35 இலட்சம் குழந்தைகள் தங்கள் ஐந்தாவது பிறந்த தினம்வரை உயிருடன் வாழ்வதில்லை இந்தக் குழந்தைகள் வயிற்றொட்டம் மற்றும் நிமோனியா போன்றவற்றால் இறந்து விடுகின்றன காரணம் சாப்பிடு முன்பும் மற்றும் மலம் கழித்த பின்னரும் நன்றாக கைகளை சவர்காரத்தால் கழுவாமையாளாகும் என்கிறது அந்த நிறுவனம்.)

“கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது.

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.” என்று தன்னம்பிக்கையூட்டும் குரல்.

எளிமை, வலிமை, திறமை, முதிர்ச்சி, ஆராச்சி, ஆளுமை, வீரம், விவேகம், மதிப்பு என்பவைகளையெல்லாம் உலகத்து மக்கள் இவரிடம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள மதராசு மாநிலத்தின் (1967ம் ஆண்டுக்குப் பின் தமிழ் நாடு) தெற்கிலுள்ள ராமேஸ்வரத்தின் மசூதி தெரு (பள்ளிவாயல் வீதி) வில் அக்டோபர் மாதம் பதினைந்தாம் திகதி 1931ம் ஆண்டு ஆஸியா உம்மா அபுல் பக்கீர் ஜெய்னுலாப்தீன் குடும்பத்தினருக்கு மகனாக பிறந்தார். பிள்ளைக்கு பெற்றோர் இட்ட பெயர் அப்துல் கலாம் (அரபி மொழியில் ‘அப்வ்து’ என்றால் கடவுளின் அடிமை என்றும் ‘கலாம்’ என்றால் பேச்சு அல்லது வார்த்தை என்றும் பொருள்.) “அடிமையின் வார்தை” என்று இதற்குப் பொருள்.

அங்குள்ள ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். திருச்சி ஸெயின்ட் ஜோஸ·ப் கல்லூரியில் விஞ்ஞான அடிப்படைக் கல்வியைக் கற்றவர். தனது சிறப்புப் பொறிநுணுக்க டாக்டர் பட்டப் படிப்புச் சென்னை பொறியியல் துறைக் கல்லூரியில் [Madars Institute of Technology] சேர்ந்து (1954-1957) விமானவியல் எஞ்சினியரிங் துறையை [Aeronautical Engineering] எடுத்துக் கொண்டார். பட்டப் படிப்பின் போதே பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் [Hindustan Aeronautics Ltd] பயிற்சிக்குச் சேர்ந்தார். அங்கே விமானங்களை இயக்கும் பிஸ்டன் எஞ்சின், டர்பைன் எஞ்சின், ஆர அமைப்பு எஞ்சின் [Piston, Turbine & Radial Engines] ஆகியவற்றில் அனுபவம் பெற்றார்

இன்று உலகில் பலதரப்பட்ட மதம்கள், மார்க்கம்கள், மொழிகளை பேசும் மக்களுடன் ஆத்திகர்கள், நாத்திகர்கள், துறவிகள் என பல தரப்பார் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு விடயத்தை ஒத்துக் கொள்பவர்களாகவே இருக்கிறன்றனர் அது இந்த உலகை இயக்க ஒரு சுப்பர் பவர் உண்டு என்பதாகும். அதை மதமாக பின்பற்றுபவர்கள் கடவுள், இறைவன், இயசு, அல்லாஹ், சிவன் என பல பெயர்களிலும் நாத்திகர்கள் நீங்கள் சொல்லும் கடவுள்களை நாங்கள் நம்பவில்லை அவைகளை விட்டு அவர் புனிதமானவர் என்றும் ஏதோ ஒரு வடிவத்தில் அல்லது பெயரில் ஏற்றுக் கொள்கின்றனர்.

இதனாலோ என்னவோ அப்துல் கலாம் என்ற பெயரிடப்பட்ட இந்தக் குழந்தையும் உலக மக்கள் அனைவராலும் ஹிரோவாக பின்நாட்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இளைஞர்களுக்கு ஒரு தூண்டுகோளானார், இந்திய இளைஞர்கள் மத்தியில் இருந்து வந்த கல்விகற்ற புத்திசாலிகள் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற மோகத்தை துடைத்தெரிந்து தாய் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதை வேரூண்டச் செய்தார்.

படிக்கும் மாணவர்களுக்கும் உழைக்கும் இளைஞர்களுக்கும் விளையாடும் குழந்தைகளுக்களையும் கனவு காணச் சொன்னார். இந்தியாவின் வளர்ச்சியிலும் அது தன்னகத்தே கொண்டுள்ள செல்வங்களிலும் அதிகம் நம்பிக்கை கொண்டவர் இவர்.

பாரதியையும் பாரதிதாசனின் தன் ஆத்மார்தமாக கொண்டார் மில்டனும் ரவிந்திரநாத் தாகூரும் அவரால் அதிகம் நேசிக்கப் பட்ட கவிஞர்கள். வாழ்கையின் இளம் பிராயத்திலேயே அம்மாவிடம் இருந்து கருணையையும் அப்பாவிடமிருந்து நேர்மையையும் கற்றுக் கொண்டார்.

அவர் எழுதிய அக்கினிச் சிறகுகள் ( The wings of Fire) புகழ் பெற்ற ஒரு சுயசரிதை அதில் தனது சாதனைக்கு பக்கபலமாக இருந்த விஞ்ஞானி சத்தீஸ் தவானைப் பற்றி எழுதிய வரிகள் இவரின் குணத்திற்கும் அவரின் குருவிற்கும் பெருமை.

“1979ம் ஆண்டு எஸ்.எல்.வி. ராக்கெட் பரிசோதனைக்காக அத்தனை பேரும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தோம். நான் அந்த ப்ராஜெக்டின் இயக்குநர். பிரதமரில் இருந்து ராணுவ அமைச்சர் வரை நாட்டின் எல்லோருடைய கவனமும் அந்த ராக்கெட் மீதே இருந்தது.

ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஒன்று, இரண்டு என்று சில கட்டங்களை நாங்கள் வகுத்துக் கொடுத்தபடி ஒழுங்காகச் சென்ற ராக்கெட் அதற்கு மேல் தடுமாற ஆரம்பித்து கடலில் விழுந்து படுதோல்வி அடைந்தது. அப்போது எங்கள் உயரதிகாரியான போராசிரியர் சத்தீஷ் தவான் உடனடியாக பிரஸ்மீட் நடக்கும் இடத்துக்கு வருமாறு எனக்கு அவசரச் செய்தி அனுப்பினார்.

“போச்சு! எல்லோர் நடுவிலும் நம் மானம் கப்பல் ஏறப்போகிறது’ என்று நினைத்துக்கொண்டே போனேன். ஆனால் அங்கு எனக்கு வேறுவிதமான அனுபவம் காத்திருந்தது. அங்கே நிருபர்கள் பல சங்கடமான, காயப்படுத்தும் கேள்விகளைக் கேட்டனர். அவர்களிடம் என்னையும் என் டீமையும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் சத்தீஷ் தவான். எங்கள் தரப்பு நியாயங்களை புரிய வைத்தார். சுருக்கமாகச் சொன்னால் எங்களுக்கு ஒரு பாதுகாப்பு அரண் போல செயல்பட்டார்.

சில கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் அதே பரிசோதனை. இப்போது எஸ்.எல்.வி.3 வெற்றிகரமாக ரோகிணி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் முதல் பெரிய வெற்றி அது. எல்லோரும் ஆனந்தக் கூத்தாடினோம். சத்தீஷ் தவான் என்னை அழைத்து, “நீயும் உன் டீமும்தான் இந்தச் சாதனைக்குக் காரணம். நீ போய் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்து’ என்று அனுப்பி வைத்தார்.

கல்லடி வந்தபோது முன்னே போய் தாங்கிக் கொண்டவர், பூமாலை வந்தபோது என்னை முன்வரிசைக்குத் தள்ளியது சிலிர்க்க வைத்தது. ஒரு டீம் லீடர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அவரிடம்தான் கற்றுக் கொண்டேன்.” என்றார்.

தாய் நாட்டின் மீதும் அதனைக் குறை கூறுபவர்கள் மீதும் அதிக கோபம் அவருக்கு அவர் சொன்ன அந்த வார்தைகள் தாய்நாட்டின் மீது குறைகூறுகின்ற நமக்கும் பொருந்தும்

“நமது அரசாங்கம் திறமையற்றது என்று நீங்கள் சொல்கிறீர்கள். நம் திட்டங்கள் பழையவை என்று சொல்கிறீர்கள். நகராட்சிக்காரர்கள் குப்பையை ஒழுங்காக அள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். இந்தியா ஒரு நரகம் என்று சொல்கிறீர்கள். எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். இதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

சிங்கப்பூரில் நீங்கள் இருந்தால், சிகரெட் துண்டைத் தெருவில் எறிய மாட்டீர்கள். துபாயில் இருக்கும்போது ரமலான் மாதத்தில் பொது இடத்தில் உண்ண உங்களுக்கு தைரியம் வராது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து கடற்கரையில் குப்பைத்தொட்டி தவிர, வேறு எங்கும் குப்பையை எறிய மாட்டீர்கள். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் போலிச் சான்றிதழ் வாங்க முயற்சிக்க மாட்டீர்கள்.

இப்படியெல்லாம் வெளிநாடுகளில் ஒழுங்குகளை மதிக்கத் தெரிந்த உங்களால், உங்கள் சொந்த நாட்டின் ஒழுங்குகளை மதிக்க முடியவில்லையே, ஏன்?

ஓர் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க ஓட்டுச் சாவடிக்குப் போவதோடு நம் பொறுப்பை உதறிவிடுகிறோம். நம் பங்களிப்பு எதுவுமே இல்லாமல் அரசாங்கமே நமக்காக எல்லாவற்றையும் செய்து தரவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். அரசாங்கம் சுத்தம் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், நாம் குப்பை போடுவதை நிறுத்தமாட்டோம்.

ஒவ்வொருவரும் நம் நாட்டைத் தவறாகவே உபயோகித்துக் கொள்கிறோம். நமது மனசாட்சி அடகு வைக்கப்பட்டிருக்கிறது.”

காற்றைக் கிழித்து வானில் இந்தியாவிற்கு வேலியமைத்த இந்த ராக்கெட் மகனின் சிறுவயதில் நீங்கள் ராக்கெட் விட்டிருக்கிறீர்களா என்று சன் தொலைக்காட்சிக்காக விவேக் கேட்டபோது

“1931 ம் ஆண்டு தொடக்கம் 1941 ம் ஆண்டுவரை 10 வயது எனக்கு அந்தக் காலத்தில் ராக்கெட்டெல்லாம் கிடையாது ஐயா நான் கோவில் திருவிழாக் காலங்களில் ஆண் பனையின் பூ அது காய்ந்து விழுந்ததை தோட்டத்தில் புறக்கி அதன் ஒரு பக்கத்தில் தீபத்துடன் மத்தாப்பை வைத்து மேலே எறிவேன்” அது ராக்கெட் மாதிரி பறக்கும்” என ஒரு சிறு குழந்தையாக கதை சொன்னார்.

புனிதக் குர்ஆனைக் கறைத்துக் குடித்தவர் அடிக்கடி பகவத் கீதையையும் ஞாபகத்தில் வைத்துப் பேசக் கூடியவர் திருக்குறல் அவருக்கு அத்துப்படி கருணாடக இசை மற்றும் வீணை வாசிப்பதிலும் ஞானி இவர்.

தன்னம்பிக்கையை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஊட்டியதால் அவர்களின் மனதில் ஒரு தீப்பொறியாய் ஆனவர். தீவிரவாதத்தையும் வன்முறையையும் எப்படி மக்கள் எதிர்கொள்வது என்று கேட்கப்பட்டபோது

“எல்லோருக்கும் ஒன்று நான் சொல்ல விரும்புகின்றேன் கெட்ட மனங்கள் ஒன்று சேர்ந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தும்போது நல்ல மனங்கள் ஒன்று சேர்ந்து அதை எதிர்த்து செயற்பட வேண்டும்” என்றார்.

தனது இளம் வயதில் தான் விமானப்படையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்றவுடன் மனமுடைந்த அவர்கள் ரிஷிகேசில் சுவாமி சிவானந்தா அவர்களை சந்திக்கிறார்கள் சுவாமியவர்கள் டாக்டர் அப்துல் கலாமுக்கு கூறினார்கள்

“உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்; விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது. நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை. ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது. நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது. ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு. உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல். உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்! கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”

இந்த நல்ல உபதேசம் இன்றும் டாக்டர் அப்துல் கலாமைப் படிக்கும் ஒவ்வொறுவரும் தங்களுக்கு கூறப்பட்டதாகவே நினைக்கின்றனர்

இலவசமாக உலக மாணவர்களுக்கு பாடம் நடாத்தும் மாமேதை, நாட்டின் தன்மானம் காத்த விஞ்ஞானி, ஜனாதிபதி மாளிகையில் சொந்த செலவில் குடும்பத்தினருக்கு உணவளித்த ஜனாதிபதி, இரண்டு சூட்கேசுடன் வந்து அதே இரண்டு சூட்கேசுடன் ஜனாதிபதி மாளிகையை விட்டுச் சென்ற அரசியல் வாதி.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஏழையாகவே வாழ துணிவு கொண்டவர் இந்தியாவை குறித்து கனவு கண்டவர். அவர் தனது இளம் பயதில் படிப்புச் செலவுக்காக தினசரிப் பத்திரிகை விற்றார். இன்று அவரின் பெயரைப் போட்டால் பத்திரிகைகள் அதிகம் விற்கின்றன.

“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”

தமிழினச் சிந்தனைச் சிற்பிக்கு ஈழத்தமிழ் மக்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் பல சாதனைகள் புரிந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கின்கின்றோம்.

ஆக்கம்
கிழக்கான் ஆதம்
14.10.2009
http://www.thenee.com

Read Full Post »