சேர்ர அரசியல்,
கட்சி அரசியல்,
நமது அரசியல்
அரசியல் பற்றிய அறிவு எந்தளவுக்குத் தான் பொது மக்கள் பரப்பிக்குள் ஊடுருவிப் போயிருக்கிறது. கட்சி அரசியல் இஸ்லாமிய அரசியல் கிடையாது என்பதை எப்படித் தெளிவாக சொல்ல வேண்டும் ? என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஒரு வழி இருக்கிறது. ஆனால் அதைக் கைக் கொள்வதில் எமது மெளலவிமார்களுக்கும் தயக்கம், அரசியல்வாதியும் தன் அதிகாரத்தினால் அதைத் தடுத்து நிறுத்தவும் முயல்கிறான்.
அண்மையில் நூறானியாப் பள்ளிவாயலில் பிர்தெளஸ் நளீமி நிகழ்த்திய குத்பா பிரசங்கத்திற்கு எதிராக சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அனுப்பிய கடிதம்.
குறைந்த பட்சம் நாம் அதனை எப்படிப் பார்க்கிறோம் என்றால் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் மொக்கையாக அனுப்பப்பட்டிருந்தமை. சகோதரர் ஹிஸ்புல்லாஹ் தமது அரசியல் பிரச்சாரங்களில் பொய் சொல்கிறார் என்று நாம் சம்மேளனத்திற்கு கடிதம் அனுப்பினால் அது தொடர்பில் எப்படியான நிலைப்பாடுகள் எடுக்கப்பட வேண்டும் ?
குற்றம் சுமத்தும் போது அவற்றிற்கான ஆதாரங்களைத் தான் முதலில் குற்றம் சுமத்தும் தரப்பில் இருந்து கேட்க வேண்டும். இஸ்லாமிய சட்ட மரபும் அதுவாகத் தான் இருக்கிறது.
இஸ்லாமிய சட்டவியல் ஒழுங்கில் உள்ள முக்கியமான ஒரு விதி ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் சுத்தவாளி என்பதாகும்.
நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. முடிந்து போன ஒரு விடயம் குறித்து இனிப் பேசுவதன் பயன் என்ன ?
இலங்கைக்குள் ஒரு முஸ்லிம்கெளுக்கென கொள்கை அரசியலை முன்னெடுக்க எமது ஊரில் மரம் வைத்தவர்கள் நாம். துரதிஷ்டமாக இன்று இலங்கைக்குள் மிக மோசமான இஸ்லாமிய அரசியலை முன்னெடுக்கும் சமூகமாக நாம் இருக்கின்றோம்.
சேர்ர அரசியல்
என்ன தான் சொன்னாலும் ஊருக்கு சேர் இல்லாட்டி எதுவும் நடக்காது என்பது எமது மக்களின் ஐதீகமாக இருக்கிறது. மரபான ஐதீகங்களின் மீதான கேள்வியும் அவற்றை உடைத்து மாற்றங்களின் மீது மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதும் மிகக் கடினமானதாகும்.
சேர் இன்றளவில் செல்வாக்குடன் ஊருக்குள் இருப்பதற்கு துணை செய்கின்ற விடயங்கள் நிறைய இருக்கின்றன.
– தொழில் எடுத்துக் கொடுத்தமை
– ஆதரவாளர்களின் தரத்திற்கு ஏற்ப கொன்றக்ட் கொடுத்தமை
இந்த இரண்டு விடயங்களையும் நாம் மிக முக்கியமாக நாம் பார்க்கிறோம்.
சேருக்கான ஆதரவைத் திரட்டுவதில் இவர்களின் பங்களிப்புக்குக்கள் மிகக் காத்திரமானதாக இருக்கிறது.
இதில் மிகத் தெளிவாகவே தெரிகின்ற விடயம். அவரவர் சுயம் சார்ந்து தமது விருப்புக்கு ஏற்ற ஒரு விடயத்திற்காக அதனைப் பொதுப்படுத்த முனைகிறார்கள்.
தமக்கு கொடுக்கப்பட்ட சலுகைக்கு விசுவாசத்தைக் காட்ட முழு ஊரையும் ஒரு அணியில் திரட்ட முயல்கிறார்கள் என்பது தான் இவர்கள் செய்யும் மடமை.
இதுவரை காலமும் இவ்வழி முறை கைகொடுத்தது. ஆனால் இனி வரும் காலங்களில் அவை எந்தளவு தூரம் நிலைக்கும் உதவும் என்பது கேள்விக் குறி தான்.
கட்சி அரசியல்
இது முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் தோற்றத்தோடு மாத்திரம் நாம் சுருக்கவில்லை, அதனோடு மாத்திரம் சுருக்கிப் பார்ப்பதும் தவறான விடயமுமாகும்.
காலங்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளராக ஒருவர் இருப்பார்; வெளித் தெரியும் காரணமாக நாம் இப்படி வேணுமானால் சொல்லலாம் – வியாபாரிகளுக்கு சாதமாக இருப்பது.
இது போன்று வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம் அது காலம் காலமாக அந்தக் குடும்பத்தை தொடர்ந்தும் கட்சி அரசியலில் நிலைப்படுத்தியிருக்கும். இவர்களது ஆதரவு வெளிப்படையானதாகவும் இருக்கும் ஊரளவில் தெரிந்ததாகவும் இருக்கும்.
இதில் மிகவும் வலுவானதாக நாம் சொல்வது தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசியல்.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுக்குப் பின் காங்கிரஸின் தலைவராக யார் வந்திருந்தாலும் என்ன தான் முடிவுகளை எடுத்தாலும் தொடர்ந்தும் தாமாகவே சில நியாயங்களைக் கற்பித்துக் கொள்வார்கள்.
இதில் சிந்தனை என்பதற்கே எந்த இடமும் கிடையாது. தமக்கு சிந்திக்கும் திறன் இருக்கின்றது என்பதனை இவர்கள் உண்மையில் மறந்தே போய் இருப்பார்கள்.
இவர்களுக்கு நாம் தான் சொல்ல வேண்டும் ; உங்களுக்கும் மூளை இருக்கிறது நீங்களும் சுயமாக சிந்திக்கலாம் ; முடிவு எடுக்கலாம்.
கொள்கைவாத அரசியல்
இலங்கைக்குள் இது எந்தளவு தூரம் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பது பெரும் கேள்வி. நாம் இதனுடாக எதனைச் சொல்கிறோம் என்பதற்கு நபி ஸல் அவர்களின் ஒரு ஹதீஸை முன்வைக்கின்றோம். ரஸூலுல்லாஹ் ஸல் அவர்கள் சொன்னார்கள் : உங்களில் மூன்று பேர் இருந்தால் அதில் ஒருவரைத் தலைவராக்கிக் கொள்ளுங்கள்.
நாம் உலகளாவிய முஸ்லிம் சமூகம் (உம்மத் ).
இவ்வுலகில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார். உலகில் 150 மில்லியன் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இலங்கையில் 02 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறோம். எங்களுக்கெல்லாம் யார் தலைவர் ?.
மிக வினயமாக நாம் சிந்திக்க வேண்டிய கால கட்டம். தியாகங்கள் இன்றி எமது வரலாறு வெற்றியானதாக அமைய மாட்டாது. நான், எனது மனைவி, எனது குழந்தைகள் என்ற சிந்தனைக்கு அப்பால் நாம் , எனது சமூகம், எனது ஊர், நான் சர்வதேசிய உம்மத் என்ற சிந்தனையில் வளர வேண்டும். அவற்றை வளர்க்க வேண்டும்.
இந்த இடத்தில் நபி ஸல் அவர்களின் எச்சரிக்கையை நாம் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.
‘நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
– பாகம் 1, அத்தியாயம் 3, எண் 100 -.
பின்னூட்டமொன்றை இடுக