கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக பேராசியர் அ.மார்க்ஸ் எழுத் தாளர், ஆய்வாளர், முன்னாள் பௌதீகவியல் பேராசிரியர் -சென்னை மாநிலக் கல்லூரி. மாநில அமைப்பாளர் – மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு.இலங்கையில் இன்றைய சூழலில் நபிகளை
இலங்கை முஸ்லிம்களுக்கும் மாற்றுமத சகோதரர்களுக்கும் அறிமுகமும் புரிந்துணர்வு கொள்ளவும் செய்கின்றன மிகப் பெரும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள் . நேற்றைக்கு முந்திய தினம் காத்தான்குடியில் கலந்துரையாடலில் ஈடுபட்ட பேராசிரியர் நேற்று அட்டாளைச்சேனையில் அதே போன்ற ஒரு நிகழ்விலும் பங்கு கொள்டார்ரகள் .
தமிழ் எழுத்துலக சூழலில் நபியவர்கள் பற்றி பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் அளவுக்கு யாரும் மிக நவீனமாக நபியை முன் நிறுத்தவில்லை .
நபியை நேசிக்க வேண்டும் அவர்கள் மீது ஆயிரமாயிரம் ஸலவாத் சொல்லியும் அல்லது கந்தூரி கொடுத்தாயினும் என்று சொல்கின்ற அலவி மெளலானாக்களோ அல்ல .
நபியை இன்னும் திக்ர் மஜ்லிஸ்களுக்குள்ளும் கந்தூரி நார்சாவாகவும் சுருட்டி வைத்திருப்பவர்கள் இவர்கள் தான் .
நேத்ரா டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நபியவர்களின் ஸீரா நிகழ்ச்சி அலவி மெளலானாவின் தொலை பேசி அழைப்பின் காரணமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டது .
இந்த நிகழ்வானது நபியின் சீராவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிகப் பெரும் அநீதியாகக் கருத வேண்டியது . இந்நிகழ்வில் பங்கு கொண்டவர்களில் நளீமியாவின் சிரேஷ்ட விரிவுரையாளரான ஏபிஎம். இத்ரீஸ் மாத்திரமே முஸ்லிம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நவீன உலகின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் சக்தி சீராவுக்கு மாத்திரமே இருக்கிறது .அதன் மீது நிகழ்த்தப்படுகின்ற மறுவாசிப்பானது அனைத்துக்குமான் தீர்வாக அமைய முடியும் என்பது தான் மாற்றுமத சிந்தனையாளர்கள் இன்று வந்தடைந்திருக்குன்ற நிலையாகும். மிகக் கவலையானது சாணக்கியம் மிக்க அரசியல் தலைவர் எமது நபிகளார் என்று சொல்லிக் கொள்ளும் நம் சமூகம் அவர் மீதான மறுவாசிப்பை ஏன் தடுத்து நிறுத்துகிறது என்பது தான் புரியவில்லை .
நபியை நேசித்தல் என்பதன் அர்த்தம் அவர்கள் மீது ஸலவாத் சொல்வதனோடு சுருங்கிய ஒரு விசயமல்ல என்பதை அலவி மெளலானா போன்ற அரசியல் அபூ நவாஸ்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள் .
இலங்கையின் ஸாஹிராக் கல்லூரியில் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆற்றிய உரையின் தலைப்பு –
நபிகள்: சமூக அரசியல் ஆளுமை என்பதாகும் .இஸ்லாத்தை ஏற்றிராத மாற்றுமத அறிஞர் ஒருவர் இன்றைய சூழலில் நபிகள் எப்படி பார்க்கப்பட வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கும் மனநிலை, கண்ணோட்டப் புள்ளியை அலவி மெளலானா போன்றவர்கள் எப்போது வந்தடையப் போகிறார்கள்.
இஸ்லாம் கூறும் சமூக மாற்றம் எப்போது தான் வரும் …? இத்தகைய தலைவலிகள் நிறைந்த தலைமைகள் ஆக்கிரமித்திருக்கும் நிலமையில் …?.
நபியை நேசித்தல் என்பதன் அர்த்தம் விசாலித்தது . அல்குர்ஆனை தனது பண்பாடுகளாகக் கொண்டிருந்த நபியவர்களை இன்னும் நாம் மிகச் சரியாக எமது அரசியல் , சமூகத் தளங்களில் பயன்படுத்தத் தொடங்கவில்லை .
இந்தப் பின் போக்குத்தனம் மாறவேண்டும் . பதின் நான்கு நூற்றாண்டுகளாக வாழும் கொள்கைக்கு நடைமுறை பாவனைத் தன்மையைக் கொடுத்தவர்கள் எமது நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் .
என்றோ அழிந்து போன கொள்கைக்காக இன்னும் கார்ல் மார்க்ஸும் லெனினும் கொண்டாடப்படுகிறார்கள்.
உயிர் வாழும் கொள்கையைத் தந்து விட்டுப் போன நபி பற்றி நாம் வெறும் வார்த்தைப் புகழ்கள் மட்டும் துதி பாடிப் பாடி இருப்பதன் அர்த்தமென்ன …?
அல்குர்ஆனையை இன்னும் எமது சூழலுக்கு மிகச் சரியாக வாசிப்புச் செய்யவில்லை , இதில் சீராவை மறுவாசிப்புச் செய்வதற்கு மிக நீண்ட அனுபவமும் பக்குவமும் அதை விட மிக முக்கியம் தன் சுயநலம் தாண்டிய சமூகம் சார்ந்த உணர்வும் தேவைப்படுகின்றது.
பின்னூட்டமொன்றை இடுக