‘இஸ்லாமிய சமுதாயம் அமை வது எப்படி?’ என்பது சகோதரி மர்யம் ஜமீலா எழுதிய ஒரு நூல். அதனை 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாம் முறையாக மீட்டி வாசித்தேன். அவர் குறிப்பிட்டுள்ள ஒரு கருத்து என் உள்ளத்தில் தைத்தது.
இஸ்லாமிய மறுமலர்ச்சி முஸ்லிம்களின் ஆதரிவின்றி ஏற்பட முடியாது எனவும் முஸ்லிம் பொது மக்கள் ஈமானின் உயர்ந்த பெறுமா னத்தை விளங்கி வாழ கல்விக் கூடங்களும், கலாசாலைகளுமே பொறுப்பேற்க வேண்டுமெனவும் குறித்துக் காட்டும் அவர், கல்வி எவ்வாறு அமைய வேண்டும் என்ப தைப் பின்வருமாறு குறிப்பிடுகின் றார்.
நமது பாடசாலைகள் அனைத்திலும் அல்குர்ஆன் போதிக்கப்பட வேண்டும். ஆனால், பல பாடங்களோடு மற்றொரு பாடமாகவல்ல. அல்குர்ஆனே பிரதான பாடமாக இருத்தல் அவசியம். மற்றப் பாடங் கள் அனைத்துமே குர்ஆனின் திவ் விய கருத்துக்கு சற்றும் முரண்படா திருத்தல் வேண்டும். அதாவது அல்குர்ஆன் சூரியனைப் போல வும் மற்றப் பாடங்கள் அதனைச் சுற்றிச் சுழன்று வருகின்ற கிரகங்க ளைப் போலவும் இருக்கும். ஏனைய பாடங்கள் யாவையும் குர்ஆனின் விளக்கங்களைத் தழுவியே கற் பிக்க வேண்டும். மதக் கல்வி, மதச் சார்பற்ற கல்வி என்ற பேதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும். (பக்கம்: 27-28)
இஃது இஸ்லாமிய ஆட்சி ஒன்று உருவாக்க வேண்டிய கல்வி முறை யின் ஒருவடிவமாக முன்வைக்கப் பட்டுள்ளது. எனினும் இஸ்லா மிய ஆட்சி நிலவாத முஸ்லிம் நாடுகளும், முஸ்லிம்கள் சிறுபான் மையாக வாழும் நாடுகளும் பரீட் சார்த்தமாகவேனும் இந்த வழி முறையை நடைமுறைப்படுத்திப் பார்க்க முடியும்.
வாசகர் வாசிப்புக்காக பரிந்துரைக்கும் கட்டுரை .