Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மருத்துவம்’ Category

daibetic200 மாறிவரும் வரும் மிலேனிய யுகத்தில் நோய்களும் புதுப்புது வடிவத்தில் மக்களை வருத்திய வண்ணமாகவே உள்ளன. மனிதன் போராடி வெற்றி பெறுவதும் தோல்வியுறுவதுமான ஒரே தொழில் மருத்துவம் என்றால் கூட அது மிகையல்ல.

இன்று மருத்துவத்துறையில் தனக்கென தனியான ஓரிடத்தைப் பெற்றிருப்பது நீரிழிவு நோய். இதில் என்ன வேடிக்கை என்றால், எல்லாவற்றுக்கும் நாள் குறித்து திருநாளாக கொண்டாடி வரும் மனிதன் தன்னை அழிக்க வரும் நோய்களுக்கும் ஒரு தினத்தை அனுஷ்டித்து வருவதுதான்.

இது மனிதனின் பெருந்தன்மையா? மூடத்தனமா? அல்லது நாகரீகமா?

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 14ஆம் திகதி நினவுகூரப்படும் நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921 இல் கண்டுபிடித்தவர் பிறட்ரிக் பான்ரிங் என்பவர். இவரது பிறந்த தின நினைவாகவே இன்றைய நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது.

சர்வதேச ரீதியில் ஏறத்தாழ 150 நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்நோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினாலும் 1991 முதல் முறையாக நீரிழிவு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர் ஐக்கிய நாடுகள் சபை 2006 ஆம் ஆண்டு மேற்கொண்ட தீர்மானம் ஒன்றுக்கமைய இத்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
– virakesari.lk –

Read Full Post »

medi 1

அந்தக் காலம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பாட்டி இருப்பார். வீட்டில் யாருக்காவது ஜலதோஷம் என்றால், சுக்கு கஷாயம் சூடாகும், திப்பிலி அரைபடும், சித்தரத்தை கடுக்காய் பொடி, கறிவேப்பிலை, புதினா, காசினிக் கீரை என்று உணவுகள் அனைத்தும் மருந்துகளாகும்

கைப்பக்குவம் தெரிந்தவர்கள் கலக்கினார்கள், கிண்டினார்கள், ஆனால், இப்போது உணவை மருந்தாக மாற்ற, பேர்கரையும், பானிபூரியையும், பீட்ஸாவையும் அரைத்துப் பத்துப் போட முடியாதே.

விளைவு… பார்மஸி வாசலில் குவிகிறது கூட்டம், மனப்பாடமாக குறள் சொல்வது போல, மாத்திரைகள் பெயர்களைச் சொல்லி வாங்கும் தாத்தா, மல்டி விட்டமின், மாமி, மெமரி டொனிக் வாங்கும் மாணவன், தலைவலி மாத்திரைகளை தாராளமாக வாங்கி விழுங்கும் ஆசாமிகள், தந்தூரி சிக்கனும், முட்டை பொடிமாஸ¤ம் தின்று நெஞ்சு எரிச்சலுக்கு அல்சர் மருந்துகளை ஆசையாகக் குடிக்கும் பெரும் தொப்பை ஆண், பெண்கள் என… எல்லோருமே இப்போது சுயமருந்துவம் தேட ஆரம்பித்து விட்டார்கள்.

சுயமாகச் சம்பாதிக்கலாம், சுயமாகச் சிந்திக்கலாம். ஆனால், நமக்கு ஏற்படும் நோய்களுக்கு நாமே சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளலாமா?

“கூடவே கூடாது; மருத்துவரின் அறிவுரை இல்லாமல் தங்கள் உடல் பிரச்சினைகளுக்கு தாங்களே மருந்து எடுத்துக் கொள்ளும் இந்த சுயமருத்துவம் ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய விஷயமாகும்” என்று அக்கறையுடன் சொல்கிறார் தமிழக மருந்தகத் துறையைச் சேர்ந்த ஜீ.சக்கரவர்த்தி, இந்த விசயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே ‘மருந்து சாப்பிடும் முன்…’ என்ற நூலை எழுதியவர் ஜீ. சக்கரவர்த்தி.

medi 3

பொதுவாக , மருத்துவர்கள் மருந்து எழுதிக் கொடுப்பது, மருந்து செயல்படும் கால அளவைப் பொறுத்தது. ‘இந்த மருந்தை இத்தனை தடவை, இத்தனை நாள் சாப்பிட்டால் உங்களுக்கு முழுதாகச் சரியாகும்’ என்று அவர்கள் சொல்வது பெரிய புத்தகங்களை நாலைந்து வருடங்கள் மாறி மாறிப் படித்த அறிவின் அடிப்படையில்.

அதை விடுத்து, மருந்து பற்றிய சில்லறை அறிவோடு நாம் நமக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள், மருந்தாகச் செயல்படாமல், இன்னும் பல நோய்களுக்குப் பாதைபோடும் பணியைத்தான். செய்கின்றன.

நாம் உட்கொள்ளும் மருந்துகள் பல முகம் கொண்டவை. சிலசமயம், இரண்டு மருந்துகள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டு, மருந்தின் பயன்பாட்டை முறித்துவிடும்! இது தானாக மருந்து வாங்கி சாப்பிடும் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. நம் மருந்துவர் என்றால், மருந்துகளோடு அதை எடுத்துக் கொள்ளும் முறையையும் நிதானமாக நமக்கு எழுதித் தருவார்.

சில மருந்துகள், நாம் எடுத்துக் கொள்ளும் உணவோடு சண்டைபோட்டு, வேலை செய்யாமல் கோபித்துக்கொள்ளும், இதை, ‘டிரக் ஃபுட்இன்டராக்ஷன்’ (ளிrug பிooனீ யிntலீraணீtion) என்பார்கள். டாக்டர், ஆதிகாலத்தில் எழுதித்தந்த மருந்து சிட்டையே வைத்துக் கொண்டு, அதே மருந்தை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே வரும்போது, ஒரு கட்டத்தில் அது வேலை செய்யாமல் போய்விட வாய்ப்பு அதிகம். அதை ‘டிரக் ரெஸிஸ்டன்ஸ்’ என்பார்கள்.

இதிலுள்ள இன்னொரு சிக்கல், நீங்களே பெயர் சொல்லி மருந்து வாங்கி சாப்பிடும்போது உங்கள் மருந்துக் கடைக்காரர் தவறான மருந்துகளை தந்து விடவும் வாய்ப்புண்டு. இதை டிரக் மிஸ்மட்ச் (ளிrug – ணிisசீatலீh) என்பார்கள், சரியாகப் பயிற்சி பெறாத, மருத்துவம் சார்ந்த படிப்பில்லாத, வெறும் அனுபவ அறிவுமட்டும் கொண்ட போலி பார்மஸிஸ்டும் இருக்கக்கூடும். ஆக, எப்போதும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே மருந்துக் கடைக்குச் செல்வது உத்தமம்! மருந்துகளை நீங்களாக சாப்பிட்டுப் பார்த்து சோதித்துக் கொள்ள, நீங்கள் ஆய்வுகூட எலிகள் அல்ல.

சுயமருத்துவம் பற்றி ஆஸ்துமா-அலர்ஜி மருத்துவர் ஆர்.ஸ்ரீதரன் ஆஸ்துமா, அலர்ஜி போன்ற நாள்பட்ட உபாதைகள் இருக்கும் நோயாளிகள், இப்போது தாங்களாகவே வலிமருந்து எடுப்பதால், ஆஸ்துமா திடீரென்று அதிகமாகி மிகவும் மோசமான நிலைமையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கும் அசம்பாவிதங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

medi 2

சிறுநீரகக் கோளாறுகள், இறுதியில் சிறுசீரகச் செயல் இழப்பாகத் தீவிரமடைய ஒரு முக்கிய காரணம். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கண்டபடி சக்தி வாய்ந்த வலி மாத்திரைகளை விழுங்குவதுதான் அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை எடுப்பதால் வயிற்றில் புண் ஏற்பட்டு அது ரத்தக் கசிவை ஏற்படுத்தும் அபாயமும் உண்டாகிறது. சில வலி மருந்துகள் உட்கொள்பவரை அடிமைப்படுத்தும் தன்மை கொண்டவை. நர்கோட்டிக் பெயின் கில்லர் (னிarணீotiணீ pain றிillலீr) எனப்படும் இம்மருந்துகள், முறையான மருத்துவர் பரிந்துரை இல்லாமல் லாப நோக்கில் கடத்தப்பட்டு, கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. அடிக்கடி செய்தித் தாள்களில், ‘விமான நிலையத்தில் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள போதைப் பொருளாகப் பயன்படுத்தப்படும், மயக்க மருந்தான, ‘கீட்டமின்’ (றிலீtaசீinலீ) பறிமுதல் செய்யப்பட்டது என்றொரு செய்தியைப் பார்க்கிaர்களே… அது இந்த வகைதான். மைக்கேல் ஜாக்சனின் துர்மரணம்கூட சுயமருத்துவம் சம்பந்தப்பட்ட மர்மமாக இன்னும் தொடர்கிறது.

தலைவலி, வயிற்றுவலி, நெஞ்சுவலி போன்றவை வர காரணங்கள் பல. தன் தலைவலிக்கு, ‘மிக்ரேன்’ என்று கூறி மெடிக்கல் ஷொப்பில் மருந்து வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார் ஒரு பதினாறு வயதுப் பெண் நான்கு நாட்களில் சுயநினைவை இழக்கும் நிலைக்குச் செல்ல, மருத்துவரிடம் சென்றதில், அவளது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதுதான் தலைவலிக்குக் காரணம் என்பது தெரிந்தது. இது ஒரு உதாரணம்தான். தனக்கு வந்திருப்பது ஆபத்தான நோய் என்பது கூடத் தெரியாமல், நிதானமாக மெடிக்கல் ஷொப்பில் மருந்து வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கூட்டம் இங்கே அதிகமாகவே இருக்கிறது.

வியாதி என்னவென்றே அறியாமல் கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடுவதால், அந்த வியாதி இன்னும் முற்றிவிடும். உதாரணமாக, அதிகளவு உடம்பு வலி மாத்திரைகளால் சிறுசீரகம் செயல் இழக்கலாம். மற்றவருக்கு கொடுக்கப்படும் மருந்தை, தான் எடுத்துக் கொள்வதால் சில பக்க விளைவுகளும் ஏற்படலாம். நீரிழிவு வியாதி வந்து சில நாட்களே ஆனவர்களும், பல வருடங்களாக சர்க்கரை வியாதி உள்ளவர்களும் எடுக்கும் மருந்தில் வித்தியாசம் உண்டு. ஆனால், ஜூனியர்கள், சீனியர்களின் மருந்தை அவர்களாகவே வாங்கிச் சாப்பிட, உடலில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து, மயக்கம்கூட ஏற்படலாம்.

மொத்தத்தில் பணத்தை மிச்சப்படுத்தலாம் என நினைத்தோ, மருத்துவமனை செல்ல சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டோ மருந்துக் கடைகளில் மருந்தை வாங்கி விழுங்கினால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு வாழ்க்கை முழுவதும் செலவு செய்ய நேரிடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

நன்றி: இணையம்

Read Full Post »