Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஓகஸ்ட், 2009

imagesதென் மாகாண சபைத் தேர்தலில் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களை நேற்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளது.

காலி, மாத்தறையில் கடந்த சில தினங்களாக கட்சி ஆதரவாளர்களிடையே பெறப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே இவ்விரு மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிடுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
http://www.muslimguardian.com

Read Full Post »

muslim-islam_symbol_sword-300x290கிழக்கில் இயங்கிவரும் முஸ்லிம் ஆயுதக்குழுக்களுக்கு மற்றுமொரு பொதுமன்னிப்பு காலம் வழங்கப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூன்று வாரங்களுக்கு முன்னர் ஆயுதங்களைக் களையுமாறு முஸ்லிம் ஆயுதக்குழுக்களுக்கு பாதுகாப்பு தரப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். ஆயுதங்களைக் களையுமாறு முஸ்லிம் ஆயுதக்குழுக்களுக்கு விடுக்கப்பட்ட சகல கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பிலான புலனாய்வு விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மாஅதிபர் எடிசன் குணதிலக்க தெரிவித்துள்ளார். கிழக்கில் இயங்கிவரும் முஸ்லிம் ஆயுதக்குழுக்களிடம் பெருமளவு ஆயுதங்கள் உள்ளதாகவும், சொற்ப அளவிலான ஆயுதங்களே இதுவரையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது.
athirady.com

Read Full Post »

child-edu

பாலியல் கல்வி ஏன் தேவை? அதனை ஏன் தனியாக ஆராய வேண்டும், பாலியல் விவகாரங்கள் குழந்தைகள் அறிய வேண்டிய அவசியமிருக்கின்றதா? அல்லது இவை திருமணத்திற்கு முன் எமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்களா?

குழந்தைகளுக்கான பாலியல் கல்வி சமயப் பண்பாட்டு ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முக்கியத்துவம் குறைந்தது அல்ல. எமது சமூகத்தின் பின்னடைவும் அறியாமையும் தான் இந்தத் தலைப்பில் என்னை எழுதத்தூண்டுகின்றது. பாலியல் விவகாரங்களை நாம் பார்க்கும் விதம் மிக அநிதியானது. எமது குழந்தைகளுக்கு பல்வேறு உளச்சிக்கல்கள் தோற்றுவிக்கிறது. எமது பிற்போக்கான தன்மை அது எடுத்துக் காட்டுகின்றது. இதில் குழந்தைகள் எந்தப் பங்கும் அறியாதவர்களாக பெற்றோர்கள் அது பற்றிய மிகப்பெறும் அறியாமையில் வாழ்கின்றனர். அவர்களிடம் கேட்கவும் முடியாது கேட்டாலும் சங்கோசப்படுவார்கள்.

பாலியல் கல்வி என்பது குழந்தைகள் கட்டிளமைப் பருவத்தை அடைந்ததும் நாம் செய்ய போகும் நூல் வழி பாடமாக அல்லது அது குழந்தை மரணிக்கும் வரை நடைபெறும் தொடர்ச்சியான தொழிற்பாடாகும். முன்பள்ளிப் பருவத்திலிருந்து குழந்தை பேசத்தொடங்கும் முன் பெற்றோர் பாலியல் கல்வியை அணுகப்பழக வேண்டும். அதாவது குழந்தைகள் தமது பாலுறுப்புக்கள் கையாளும் விதத்திலிருந்து தொடங்குகின்றது.

பாலியல் விடயங்களை தெளிவுபடுத்தும் பொறுப்பு தந்தை மற்றும் ஆசிரியரோடு சேர்ந்தது கூடுதல் சுமை தாய் மீதே சுமர்த்தப்படுகின்றது. பெற்றோர் அல்லது பயிற்றுவிப்பாளரின் பொறுப்பை செல்லுபடியற்றதாக்காமல் பெற்றோரை முன்னிறுத்தியதாகவே எனது உரையாடல் அமைகின்றது.

குழந்தை தொட்டில் பருவத்தில் தனது உடல் உறுப்புக்களை பயன்படுத்தி விளையாடவே விரும்பும் விளையாடுவதால் அதிக மகிழ்ச்சி அடைகின்றது. குழந்தையின் முதல் கவனத்தைப் பெறுவது விரல்களாகும். விரல்களை உயர்த்திப் பார்க்கின்றது. பின்னர் அவற்றை சூப்புகின்றது. ஆரம்பத்தில் பெருவிரலைத்தான் சூப்ப ஆரம்பிக்கின்றது. பின்னர் கால் விரலைகளை கண்டுபிடித்து அவற்றைப் பிடித்து அணுகுகின்றது. கால் பெருவிரலையும் சில போது குழந்தை சூப்ப எத்தணிக்கின்றது. அதன் பிறகு தான் ஆடைகளையும் களையும் போது திரும்ப அணிவதில்லை நிர்வானமாக இருக்கவே விரும்பு கின்றது. கால்களை உதைத்து விளையாட ஆசைப்படுகின்றது. தனது பாலுறுப்புக்கள் வெளியில் தெரியும் போது உடலின் இந்தப் பகுதியை காண ஆச்சரியப்படுகின்றது. விரல்களைப் பயன்படுத்தி விளையாட அனுமதிக்காமல் கைகளை பாலுறுப்புகளை விட்டு உயர்த்தும் போது தான் குழந்தை பாலுறுப்புகளுக்கும் ஏனைய உறுப்புகளுக்குமிடையிலான வேறுபாட்டை முதன் முறையாக புரிய ஆரம்பிக்கின்றது. அதேவேளை அவ்வுறுப்புக்கள் தொடுவதற்கு கராமாக்கப்பட்டது என்ற அறிவையும் பெற்றுக்கொள்கின்றது.

குழந்தை பிறந்த புதிதில் உடலின் பல உறுப்புகள் அதற்கு உணர்ச்சி பூர்வமாக இருக்கின்றன. அவை அணைத்தையும் சூப்பவே ஆசைப்படுகின்றது. இது தான் சாப்பாட்டுக்குப் பிறகு விரல்களை சூப்புவதையும் இதன் தொடர்ச்சியாக கொள்ளமுடியும். அவ்வாறு சூப்புவதன் காரணமாக பொருட்களின் தன்மையை குழந்தைகள் அறிந்து கொள்கிறது. குழந்தைகள் கை விரல்களை சூப்புவதோடு கையில் அகப்படும் எப்பொருளையும் சூப்ப ஆசைப்படுகின்றது. அதன் பிறகு மலங்கழிப்பது ஓர் இன்பமாக உணர்கின்றது. அதன் பின் அதனை விட அதிக உணர்ச்சி தரும் உறுப்பை நாடுகின்றது. குழந்தை பாலுறுப்புக்களை தொடுவதன் மூலம் அடையும் இன்பம் விரல்களை சூப்புவதன் மூலம் அடையும் இன்பதிற்கு இணையாதது. இதனை ஆங்கிலத்தில் Sexual Organs Play என்று அழைப்பார்கள்.

ஆண் குழந்தை ஆரம்பத்திலேயே ஆண்குறியை அறிந்து கொள்கின்றது. (அந்த இடத்திலிருந்து தான் இன்பம் வருகின்றது என்பதை) இது இறைவன் படைத்த இயற்கை உணர்வாகும். இதனைக் கண்டு பயப்படவே கலங்கவே தேவையில்லை. இது குடலும் இரைப்பையும் நிரம்பும் போது ஏற்படும். தொடர்ச்சியான நரம்பின் செயற்பாடாகும். சிறுநீர் கழிக்கும் போது குடலும் இரைப்பையும் வெறுமையாகிவிடுகின்றது, இந்த உணர்வும் கலைந்து விடுகின்றது. இது இறைவன் இயற்கையாக உடலில் ஏற்பாடு செய்துள்ள ஒரு தொழிற்பாடு. ஆடை விலகும் போது உங்கள் குழந்தை தனது குறியுடன் விளையாடனால் நீங்கள் அவதானிப்பதாக காட்டிக்கொள்ளாதீர்கள். குழந்தை தனது விரல்களுடன் விளையாடுவதைப் போலவே நினைத்து விளையாடுகிறது. கால்மேஸ் அணியும் போது குழந்தை பாதங்களை பிடிக்க முயன்றால் எப்படி அதனை கையைத் தொட்டு தூரமாக்குவீர்களோ அதே போன்று குழந்தை குறியைப் பிடித்து விளையாடும் போது செய்யுங்கள். அதாவது குழந்தைக்கு ஆடை அணிவிக்கின்றீர்கள் வேறெதுவுமில்ல என்பது போல செய்யுங்கள். இவ்வாறு இரு இடங்களுக்கிடையிலும் வேறுபாடு இருக்கின்றது என்பதை குழந்தை உணரக்கூடாது.

பாலியல் உறுப்புக்கள் குழந்தை கண்டு மகிழ்வதைக் கண்டு நீங்கள் கலங்கிவிடக்கூடாது. அதற்காக குழந்தையை தண்டித்து விடாதீர்கள். (குழந்தை ஏனைய வழமையான உறுப்புக்களை தேடிக்கண்டு பிடித்து விளையாடும்) பாலியல் உறுப்புக்களைப் பிடித்து விளையாடுவதைக் கண்டு நீங்கள் தடுத்திடவும் வேண்டும். இந்தப் பருவத்தில் குழந்தை கையை உபயோகப்படுத்துவது மிகவும் அவசியமாகும். இதனூடாகத் தான் குழந்தை வெளி உலகத்தைத் தெரிந்து கொள்கின்றது.

இவ்வாறான விளையாட்டை பழக்கமாக கொண்டுள்ள ஆண் குழந்தையை பார்த்து ‘தொட்டால் உண்ட கொட்டையை வெட்டுவன்’ என்று பெற்றோர் பயமுறுத்துவது Castration Complex மனசிக்கலை உருவாக்குகின்றது. ஆடையில்லாத பெண் குழந்தைகள் இவ்வாறு நான் சிறுவர்களை காணும் போது அக்குழந்தை ஆண்குறி தறிக்கப்பட்டு விட்டதாக எண்ணிக் கவலைப்படுகின்றார்கள். இவ்வாறான குழந்தைகள் நோவு இன்பத்துக்கு உட்பட்டுவதாக இட்டும் பயப்பட ஆரம்பிக்கின்றார்கள். இது தான் Castration Complex என்று அழைக்கப்படுகின்றது. இது போன்ற அச்ச (பய) உணர்வுதான் சுயஇன்பம் பெறுவதற்கு வழிவகுக்கின்றது. அதாவது தனது உறுப்பை இழந்து விடுவேன் என்று அச்ச்படுவதால் அவ்வுறுப்பை பிடித்து அதன் இருப்பை தற்காத்துக் கொள்வதற்காக அசைகின்றது. இதன்பின் ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ அடுத்த குழந்தைகளை ஆடையின்றி பார்க்க விரும்புகின்றது. இருபாலாரினருக்குமுள்ள இந்த வேறுபாட்டிலுள்ள யதார்த்தத்தை அவர்கள் அறிய விரும்புகின்றார்கள். அவ்வாறு இது குறித்து அவர்கள் வினாவும் போது முடியுமான அளவு எளிமையாக அவ்வேறுபாட்டை நாம் எடுத்துக்கூறவேண்டும்.

குழந்தை சூ போன அல்லது கக்கா போன உடுப்பை நீங்கள் மாற்றும் போது அருவருப்பை தெளிவாக வெளிப்படுத்தினாலும் குழந்தை அதனை அவதானிக்கின்றது. பாலியல் உறுப்புகள் கழிவகற்றல் உறுப்புகளுடன் தொடர்புற்றிருந்தால் அவை அழுக்கானவை என்ற மனப்பதிவை பெறுகின்றன. இதனால் மிக இளமைப் பருவத்திலிருந்தே மிக மோசமான மனப்பதிவுகளை ஏற்படுத்தி வருகின்றோம். எதிர்கால பாலியல்சார் வாழ்க்கையை நாம் மிக ஆரம்பத்திலேயே சீரழிவுக்கு வித்திடுகின்றோம் என்பதனை மறந்து விடக்கூடாது. தன்னை யோசிக்கக்கூடிய, தன்னைக் கொண்டு கண்ணியமான ஆளுமையான குழந்தை எப்படி உருவாக்குவது. குழந்தைகள் பார்வையில் எல்லாமே தூய்மையானவை, எல்லாமே அதிசமூட்டுபவை. வளர்ந்தவர்கள் நாம் தான் எல்லாவற்றையும் மட்டுப்படுத்தி அழித்து விடுகின்றோம். குழந்தை மீது குற்றம் சாட்டுவதற்கு நமக்கு என்ன யோக்கிதை இருக்கின்றது? நம்முடைய மேய்ப்புக் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவோம். குழந்தைகளை மேய்ப்பது ஆடு, மாடுகளை மேய்ப்பது போல (அவற்றை மேய்ப்பதற்கும் அழகான பாடத்திட்டம் வந்து விட்டது) அல்ல. எனவே நம்மிடமிருக்கின்ற வக்கிர சிந்தனைகளை விட்டு விட்டு, இறைவன் படைத்த தூய இயல்பிலிருந்து குழந்தையை அணுக வேண்டும்.

பிறப்புறுப்புகள் ஒன்றும் இழிவானவை அல்ல. ஓர் உறுப்பு மனித விருத்திக்கு வழிவகுக்கின்றது. அடுத்த உறுப்பு அவ்வாறு பிறந்த குழந்தையை போசித்து வளர்க்கின்றது. எனவே அவ்வுறுப்புக்களால் பெற்றிருக்கின்ற ஆணும் பெண்ணும் சமூகப்பங்களிப்பைச் செய்கின்றன. அவர்களுக்கு சமூகத்தில் இடமிருக்கின்றது. அவ்வுறுப்புக்களை கெட்ட உறுப்புக்களாக கட்டமைப்பதன் மூலம் அவ்வுறுப்புக்களைப் பெற்றிருக்கின்ற பெண்ணையையும் கெட்டவனாளாக கட்டமைக்கின்றோம். அவள் ஆற்றுகின்ற சமூகப்பங்களிப்பு அற்பமாவைகளாக ஆக்கிவிடுகின்றோம். அவளை சமூகத்தின் விளிம்பு நிலைக்கு தள்ளிவிடுகின்றோம். எமது பிள்ளை வளர்ப்பில் பங்களிப்பு வளங்கியவை தூஷண வார்த்தைக்காக இருக்கின்றன. நாம் கட்டமைத்திருக்கும் தூஷணத்தில் நாம் தான் பருகவும் செய்கின்றேம். ஆனால் அல்குர் ஆன் எமது விசுவாசத்தின் படி புனித நூல். அந்த நூல் கெட்ட வார்த்தைக்காக இந்த உறுப்புக்களைப் பயன்படுத்தவில்லை. ஆனால் பெண் உறுப்புக்களைப் பற்றி பல இடங்களில் பிரஷ்தாபிக்கின்றது. அல்குர் ஆனை வாசிப்பதால் தவாபு கிடையாது ஆனால் அல்குர் ஆனை ஆனால் குர்ஆனை விளங்காமல் ஓதினால் தவாப் கிடைக்கும். ஒவ்வெரு ஹர்புக்கும் பத்து நன்மை என்று ஹதீஸ் கூறுகின்றது. பாலியல் உறுப்பை, அவற்றின் தொழிப்பாட்டை அவை தொடர்பான சட்டங்களையும் பேசுகின்ற ஆயத்துக்களை குழந்தையே பேராசிரியரோ ஓதும் போது இருவருக்கும் நன்மை கிடைக்கத்தானே வேண்டும். கெட்ட உறுப்புக்காக எப்படி நன்மை கிடைக்க முடியும்?
-pirathikal.wordpress-

Read Full Post »

athavulla-30அக்கரைப்பற்றில் ஜனாதிபதி மஹிந்த

(அக்கரைப்பற்றிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம், அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

தமிழ், சிங்களம், முஸ்லிம் என இனவாத அரசியல் நமது நாட்டிற்கு உகந்ததல்ல. குறுகிய தீர்மானங்களை தவிர்த்து நாட்டை முன்னேற் றக்கூடிய சிறந்த தீர்மானங்களை சிந்தித்து மேற் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநா டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த் தும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டமும் நேற்று அக்கரைப்பற்று பொது விளையாட்ட ரங்கில் விமரிசையாக நடைபெற்றன.

நேற்றுப் பிற்பகல் 2.00 மணியளவில் தேசிய மற்றும் கட்சிக் கொடியேற்றலுடன் ஆரம்ப மான இந்நிகழ்வுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட துடன் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா, அமைச்சர்கள் மேர்வின் சில்வா, டக்ளஸ் தேவா னந்தா, பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
-தினகரன்-

Read Full Post »

15_003
கலாநிதி என்.எம்.பெரேரா நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் யுத்தத்தின் பின்பு அடுத்தது என்ன? என்னும் தலைப்பில் விசேட கருத்தரங்கு ஒன்று கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 22 ஆகஸ்ட், சனிக்கிழமை மாலை 4.30முதல் 7மணிவரை இடம்பெற்றது.

மேற்படி கருத்தரங்கில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் பேராசிரியருமான அமைச்சர் திஸ்ஸ விதாரண, கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் கலாநிதி ரவீந்திரகுமார், கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானபீடத் தலைவர் கலாநிதி கீத பொன்கலன், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம். நௌசாட், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சட்டத்தரணியும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளருமான கந்தையா நீலகண்டன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம். நௌசாட் அவர்களின் உரையின் முழு வடிவம் கீழே.
போருக்கு பின் – அடுத்தது என்ன?

இந்த கருத்தரங்கு மன்றத்தில் எனது கருத்துக்களையும் முன்வைப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த ஏற்பாட்டுக்குழுவுக்கு முதலில் நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதி என்ற ரீதியில்; ‘போருக்கு பிந்திய சூழலில் அடுத்தது என்ன?’ என்பது தொடர்பான முஸ்லிம்களின் நோக்கு எவ்வாறு என்பது பற்றி விளக்கமாக எடுத்துக்காட்ட விரும்புகிறேன். அதற்கு முதலில் சற்று கடந்த கால நிகழ்வுகளை திரும்பிப்பார்த்துவிட்டு இன்றைய நிலைப்பாடு பற்றி கதைக்கும் போது மிகவிளக்கமாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்த காலகட்டத்தில் கடந்த கால நிகழ்வுகளை நிணைவு கூறி பேசுவது பலராலும் விரும்பத்தக்கதல்ல. ஆனால் என்னைப்பொருத்த மட்டில் ‘கடந்தகாலம் எதிர்காலத்தை ஒளிரூட்டாவிடில் உணர்வலைகள் இருளில் ஊசலாடும்’

முஸ்லிம் சமுகம் குறுகிய அரசியல், நில ஆட்சிச் சிந்தனைகளால் வரையறுக்கப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் உலகலாவியவர்கள். ‘உம்மா’ என்னும் உலகலாவிய கோட்பாட்டிற்கு உற்பட்டவர்கள். இலங்கை முஸ்லிம்களை பொறுத்தவரை வர்த்தகமும் பாவா ஆதமின் பாதச்சுவடுகளை தரிசிப்பதுமே அவர்களின் வருகையின் பிரதானமான நோக்கமாக இருந்தது. பின்னர் சூபிகளின் வருகை இஸ்லாத்தின் பரவலுக்கு வழிவகுத்தது. ஆனால் மேற்கு நாடுகளைப்போல் முஸ்லிம்கள் மதத்தையும் வர்த்தகத்தையும் ஒன்றோடு ஒன்று இணைக்கவில்லை. இலங்கையரோடு இலங்கையராகவே அவர்கள் வாழ விரும்பினர். அவர்கள் எந்த சமயத்தோடும், எந்தச் சமூகத்தோடும் தமது சமயத்தை இணைக்க விரும்பவில்லை. அந்த வகையில் தனது தனித்துவத்தை பேணி வளர்த்தார்கள்.

முஸ்லிம்களுடைய அரசியல் வரலாறு சுவாரசியமானது. இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் பிரித்தானிய பாராளுமன்ற அமைப்பின் கீழ் சிறுபான்மையினருக்கான அரசியல் யாப்பின் பாதுகாப்புச் சரத்துக்களும், தேர்தல் தொகுதி நிர்ணயமும், முஸ்லிம்களின் நாடாளவிய குடியேற்றங்களும் இணைந்து முஸ்லிம்களை இலங்கை அரசியலில் ஓர் இன்றியமையாத அம்சமாக மாற்றிவிட்டது. வர்த்தகத்தில் திறமை பெற்ற இவ்வினம் அரசியலையும் வியாபாரச் சாதணமாகக் கணித்ததில் வியப்பில்லை. எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக்கட்சியே நமது கட்சி என அவர்கள் வாழ்ந்தார்கள், அதனோடு ஒத்துழைத்தார்கள் அதற்காக பாடுபட்டார்கள். இவ்வாறு வாழ்ந்தவர்களுக்கு எத்தகைய அரசியல் அபிலாசைகள் உள்ளன என்று கேட்பதற்கு விரிவானதொரு பின்னணி உண்டு.

இலங்கை அரசியலில் 1950 களில் பெரும் சக்தியாக இருந்தவர்களில் ஒருவர் என்.எம். பெரேரா. அக்காலகட்டம் இடதுசாரி அரசியல் முக்கியம் பெற்றிருந்தது. அதனோடு ஒத்ததாக இனத்துவமும் முனைப்புப்பெறத் தொடங்கிற்று. இந்த இனத்துவ முனைப்புக்கு மத்தியில் டாக்டர். பத்யுத்தீன் மஹ்மூத் அவர்களின் அரசியல் முக்கியமானது. இக்கால கட்டத்தில் முஸ்லிம் தனித்துவ அரசியலுக்கான சில சிந்தனைகளும் அக்காலத்தின் அரசியல்வாதிகளான ஆயு அப்துல் மஜீத் போன்றவர்களிடம் காணப்பட்டன. ஆனால் இலங்கையின் அரசியல் பண்புக்கு அது உசிதமானதல்ல என்று அவர்கள் கண்டுகொண்டு 1970ம் ஆண்டுகளில் தேசிய பெருங்கட்சிகளுக்குப் பின்னால் ஓர் அமுக்கக் குழுவாகவே செயல்பட்டனர். இந்த வகையில் னுச. கலீல் போன்றவர்களில் முஸ்லிம் லீக்கினைக் குறிப்பிட வேண்டும்.

இவ்வாறானதோர் முஸ்லிம் அரசியல் பாரம்பரியத்திலே எம்.எச்.எம். அஷ்ரப் வருகிறார். அஷ்ரொப் தமிழரசுக்கட்டசியின் பிரதிநிதி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதிநிதி. அவர் ஒரு கட்டத்தில் இப்படியும் பேசினார். ‘அண்ணர் அமிர்தலிங்கம் தமிழ் ஈழத்தைப் பெற்றுத்தராவிட்டால் தம்பி அஷ்ரொப் அதனைப் பெற்றுத்தருவேன்’ என்றார். தமிழர் அரசியலுக்குள்ளே இருந்த அஷ்ரொப் அதன் கூர்மைத்தன்மையை புரிந்து கொண்டார். அல்லது தமது சமுகத்தின் பாராளுமன்ற உறுப்புறிமையின் தனித்துவத்தை புரிந்துகொண்டார். அதனால் அஷ்ரொப் முஸ்லிம் கட்டசியொன்றின் ஸ்தாபகர் ஆகின்றார்.

அஷ்ரொப் முஸ்லிம் கட்சியினைத் தொடங்கிய சந்தர்ப்பம் முக்கியமானது. ‘எலிவலையானாலும் தனி வலை வேண்டும்’ என்று முஸ்லிம்கள் சிந்திக்கின்ற காலம் அது. அவ்வப்போது பெரும்பான்மை ரீதியான சிந்தனைக்குள் மாட்டிய அவர்கள் இன்னுமொரு பெரும்பான்மையின் முரனுக்குள்ளும் மாட்டிய காலம் அது.

இலங்கையின் இனப்பிரச்சினை உக்கிரமடைந்த 1980 களில் அதன் தீர்வுகளில் இந்தியா முனைப்புக்காட்டியது. அதன் பெறுபேராக மாகாண சபை ஆட்சிமுறை உருவானது. வடக்கு கிழக்கு இரவோடிரவாக இணைக்கப்பட்டது. தமிழர்களுக்கு தீர்வு அவசியம் என்று கூறிய முஸ்லிம் சமுகம், இந்த இணைப்பால் வடக்கு கிழக்கில் சிறுபான்மையானது. முஸ்லிம் காங்கிரஸ் துடித்தெழுந்தது. இந்தத் தீயினை முஸ்லிம் சமுகத்திடம் அது காரசாரமாக கொண்டு சென்றது. வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இந்தியாவின் திணிப்பில் போட்டியிட்டு எதிர்க்கட்சியாக அமர்ந்த அக்கட்சி இவ்விணைப்பிற்குள்ளே ‘தனி அதிகார அலகு’ பற்றிப் பேசியது. இந்தக்கோஷமே முஸ்லிம் அரசியலில் அதிகாரம் பற்றிய கோரிக்கையாகும். இதைப்பற்றி அவர்களுக்கு முன்னவே ஆஐஆ மொஹிதீன் பேசியமை குறிப்பிடத்தக்கது. ஆனால் வரதராஜப் பெருமாளின் செயற்பாட்டோடு அம்மாகாண சபை கலைந்தது.

பின்னர் வந்த தீர்வுத்திட்டங்கள் முக்கியமானது. மங்கள முனசிங்க தெரிவுக்குழு அறிக்கை, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் திட்டங்கள் எல்லாம் முஸ்லிம்களின் அபிலாiஷகளுக்குப் புறம்பாக அமையவில்லை. 2000ம் ஆண்டு சந்திரிக்கா அரசு முன்வைத்த அரசியலமைப்பு நகல் திட்டம் முக்கியமானது. ‘பல்லினங்கள் கொண்ட மக்கள் கூட்டமைப்பு’ ஒன்றினை அது வலியுறுத்தியது. ஆனால் அதனது துர் அதிஷ்டம் அது வாசிக்கப்படும் பொழுதே எரிக்கப்பட்டும் விட்டது.

2002ம் ஆண்டு இறுதியில் ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மீண்டும் முஸ்லிம் சமுகத்தினை புண்படுத்தியது. முஸ்லிம்களை அவர்கள் ஒரு ‘குழுவாக’ அடையாளப்படுத்தினர். அப்போது முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பங்காளியாக இருந்தது. முஸ்லிம் சமுகம் துடித்தெழுந்தது. பிரதான முஸ்லிம்களின் கட்சி அரசோடு இணைந்திருந்ததால் அவர்கள் மௌனம் காத்தனர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

மக்கள் இணம்புரியாத ஐயத்துக்குள்ளானார்கள். அதனாலே, ஆங்காங்கே அவர்கள் சிவில் சமுகத்தைக் கூட்டினார்கள். அதனைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் சமுகம் ஒன்றினைத்தது. முஸ்லிம்களின் ஒட்டுமொத்தப் பிரகடனமாக அவர்கள் ஒலுவில் பிரகடனத்தை முன்வைத்தார்கள். இந்த கால கட்டத்தில் என்னைப்பொறுத்த மட்டில் இந்த நாட்டின் முஸ்லிம் சமுகம் தேசியப் பெரும்பான்மையினால் துஷ்பிரயோகிக்கப்பட்டும் பிராந்தியப் பெரும்பான்மையினால் வெறுக்கப்பட்டு, வேட்டையாடப்பட்ட சமுகம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

2006ம் ஆண்டு 2009ம் ஆண்டு காலப்பகுதி இலங்கையின் சிறுபான்மை அரசியலையும் இலங்கை அரசியலையும் இன்னுமொரு கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. ‘ஒரே நாடு, இலங்கையர் என்ற ஒரே இனம் என்று இன்றையத் தேசத்தலைவர் எங்கும் பேசி வருகின்றார். அப்படியாயின் சிங்களவரோ, தமிழரோ, சோனகரோ, மலாயரோ யாவருமே இந்நாட்டின் பிரஜைகள் என்ற குடையின் கீழ் ஒன்றுபடுகின்றனர். இதன்படி ஒரு பிரஜைக்குறிய உரிமைகள் எல்லாம் முஸ்லிம்களுக்கும் பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும். இதுவே முஸ்லிம்களின் நியாயமான அபிலாஷையுமாகும்.

இலங்கையின் இனங்களுக்கிடையே ‘சந்தேகமற்ற சூழ்நிலை’ இதனூடாக உறுவாகுமேயானால் அதுவே போதுமானது. சிறுபான்மை இனங்கள் நிராகரிக்கப்படாத சூழ்நிலை உருவாக வேண்டும். அதற்கு அரசியலமைப்பு ரீதியான உறுதிப்படுத்தல் வேண்டும். இதற்காக தமிழ், சிங்கள, முஸ்லிம் சமுகங்கள் கலந்துரையாட வேண்டும். பௌத்த, ஹிந்து, கிருஸ்தவ, இஸ்லாமிய சமயப்பிரதிநிதிகள் கலந்துரையாட வேண்டும். உண்மையான தீர்வு குறித்து அரசு நகர வேண்டும். இந்தக் கட்டத்தினை இலங்கை அரசு கையாள்வதிலேயே ஒட்டுமொத்த சிறுபான்மை சமுகத்தின் அபிலாஷைகள் தங்கி உள்ளது. இவை இடம்பெறாத பட்சத்தில் ‘ஒரே இனம்’ என்பது ஒரு வெறும் அரசியற் கோசமாகவே அமையும்.

அலகுகள் வரையுறுக்கப்பட்டால் எல்லோரும் அவ்வாறு பேசவேண்டி வரும். எனவே நாங்கள் கோருவதெல்லாம் ‘இலங்கையில் சமுகங்களுக்கிடையில் சந்தேகமான சூழ்நிலை தவிர்க்கப்பட வேண்டும்’

முஸ்லிம்களுக்கு என்ன அச்சம் இருக்கின்றது?

1. மார்க்க, கலாசார, அரசியல் சூழலை இழந்துவிடும் அபாயம்.

2. தன்னிருப்பை உறுதி செய்து கொள்ளவதில் உள்ள அச்சம்.

3. தங்கு தடையின்றி பொருளாதார நடவடிக்கைளை மேற்கொள்வதில் உள்ள சிறமங்கள்.

4. தங்களின் பாரம்பரிய நிலங்களை இழக்கும் அச்சம்

இவ்வாறான அச்சம் ஒன்று இல்லை என்றால் ஓர் உதாரணத்தோடு முடித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

1. வடக்கு முஸ்லிம்கள் விவாகரத்தை இன்றைய சூழலில் எப்படிக் கையாள்வது?

2. பொத்துவில், விவகாரத்தை எப்படிக் கையாள்வது?

3. அம்பாரை மாவட்டத்திலுள்ள தீகவாபியைச் சுற்றிய சந்தேங்களை எப்படிக் களைவது?

4. கிழக்கில் உருவாகும் தமிழ் – முஸ்லிம் அரசியல் தலைமைகளில் அதிகாரங்களை எப்படிக் கையாளும்?

எமக்குள் பிரச்சினை இருநிலைப்பட்டது

1. தமிழ் – முஸ்லிம் முரண்நிலை

2. சிங்கள – முஸ்லிம் முரண்நிலை

மேற்சொன்ன உதாரணங்களை அரசும் தமிழ் சமூகங்களும் கையாள்வதிலேயே முஸ்லிம் சமூகத்தின் அபிலாiஷ தங்கியிருக்கின்றது.

ஒரு நாட்டின் பிரஜையாக உரிமைகளை கோரும்போது கடமையும் அதனுடன் இணைந்துள்ளதை யாரும் மறக்கக்கூடாது. முஸ்லிம்களின் கடமைகள் தேசப்பற்று, ஜனநாயத்தைப்பேணுதல், பல்லின சமுகத்தின் பண்மைகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் தமது மதத்தையும்இ கலாச்சாரத்தையும் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல் என்பவற்றை உள்ளடக்கும்.

80 வருடங்களுக்கு முன்னர் பெங்காலி எழுத்தாளரும் கவிஞருமான Pramatha Chauduri அவர்கள் சொல்லியதை நிணைவு கூற விரும்புகிறேன்.

‘ஒரு நாட்டினை நேசிப்பதென்பது அந்நாட்டு மக்களை நேசிப்பதாகும் ஏனெனில் ஒரு மனிதன் அடுத்த மனிதனை நேசிக்கிறான். எவராவது ஒரு ஆத்மாவை அன்றி மன்னை விரும்புகிறானோ அவன் ஒரு உயிருள்ள மனிதன் அல்ல ஒருபொருள் இன்னொன்றை கவர்வது இரக்கமற்றதும் கண்மூடித்தனமானதும் என விஞ்ஞானம் ஒரு விதியைக் கூறுகிறது. சிந்தனை ரீதியிலும் மொழி இணைப்பாலும் ஒரு பெங்காலி இன்னொரு பெங்காலியின் உறவினர் ஆவான். அவனது எண்ணத்தில் மொழி இனைப்பென்பது இரத்த உறவாகும்’.

http://www.muslimguardian.com

Read Full Post »

kotha raja
பாதுகாப்பு செயலாளரை படுகொலை செய்ய தயார் நிலையில் இருந்த தற்கொலை அங்கி மீட்பு
மோதரை மாடிவீட்டிலிருந்து பாதுகாப்புத் தரப்பினரால் கண்டுபிடிப்பு

* குண்டுதாரி தலைமறைவு

* கொலைக்குப் பயன்படுத்தவிருந்த

மோட்டார் சைக்கிளைத் தேடி வலைவிரிப்பு

* வீட்டு உரிமையாளர் கைது
http://www.thinakaran.lk

Read Full Post »

municipal
யாழ். மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முஸ்லிம் உறுப்பினர்கள் அரசு பக்கம் தாவுவதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்று சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைக்குழுவின் தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் உறுப்பினர்கள் சிலர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து இயங்குவதற்கு விரும்புகிறார்கள். இது ஒரு நல்ல அறிகுறி. வடக்கு – கிழக்கில் உள்ள எமது சமூகத்தின் நலனுக்காகப் பணியாற்ற நாம் விரும்பினால் எமது சமூகத்திடம் இருந்து எம்மால் முடிந்த ஆதரவை நாம் திரட்டி சேமித்துக்கொள்ள வேண்டும் என்றார் முரளிதரன்.

puthinam.com

Read Full Post »

kalaki

இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்..

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.

இதை தமிழில் மொழி பெயர்த்த சகோதரி சுமஜ்லா அவர்களுக்கு நன்றி!!

ஆங்கிலத்தில் படிக்க http://comparativestudy.blogspot.com

Read Full Post »

OB-CY590_oj_1sr_E_20090115114830இந்த வருடத்தின் இறுதி மூன்று மாத காலப்பகுதியில் அமைச்சர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளக் கூடாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்களுக்கும் இடையில் அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டமொன்றின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்பட இருப்பதனால் எவரும் நாட்டைவிட்டு வெளியேறக் கூடாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தொகுதிகளில் தோல்வியடையும் தொகுதி அமைப்பாளர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனவும்,. தேர்தலில் தோல்வியைத் தழுவும் தொகுதி அமைப்பாளர் என்ன பதவியை வகித்தாலும் அவருக்கு அடுத்தத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வஙழ்கப்பட மாட்டாதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
puthinam.com

Read Full Post »

02%20Gold%20Finch%20Relax
புனித ரமழான் நோன்பு காலத்தின் போது விசேட சமய வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு வசதியாக அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரச நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான விபரங்களை அமைச்சு சகல திணைக்களங்களுக்கும்; அனுப்பி வைத்துள்ளது.

அதன்படி அதிகாலை 3.30 மணி தொடக்கம் காலை 6.00 மணி வரையும், பிற்பகல் 3.15 மணி தொடக்கம் 4.15 மணிவரையும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதேவேளை, மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 7.00 மணி வரையும், இரவு 7.30 மணி தொடக்கம் 10.30 மணிவரையும் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு 14 நாட்களுக்கு முன்பதாகவே விசேட விழா முற்பணக் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அரச நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு பணிப்புரை வழங்கியுள்ளது.
http://www.muslimguardian.net

Read Full Post »

mannar-townமன்னார், முசலி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 8 கிராமங்களில் 442 தமிழ் – முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 1.898 பேர் தமது சொந்த இடங்களில் மீளக் குடிய மர்த்தப்பட்டுள்ளனர்.முசலியில் இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் காலை நடைபெற்ற மீள்குடியேற்ற நிகழ்வின்போது 2007 ஆம் ஆண்டு மோதல்கள் காரணமாக கொக்குபுடையான் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து நானாட்டான் பகுதியில் தங்கியிருந்த 94 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 347 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.

முசலி பிரதேச செயலகத்தின் வேப்பங்குளம், பண்டார வெளி, பூநொச்சிக்குளம், பெரிய புல்லச்சி, பொற்கேணி, பூலான்குளம், புதுவெளி, மேத்தன்வெளி பகுதிகளிலிருந்து 90 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட 348 குடும்பங்களைச் சேர்ந்த 1.551 முஸ்லிம்களும் மீளக் குடியமர்த்தப்பட்டனர்.

1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட இவர்கள் புத்தளத்தில் அகதிகளாக தங்கியிருந்தனர்.நேற்று முன்தினம் நடைபெற்ற மீள்குடியேற்ற நிகழ்வின் போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மன்னார் அரச அதிபர் நிக்கலஸ்பிள்ளை, முசலி பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

மன்னார் மாவட்ட மீள்குடியேற்ற திட்டத்திற்கமைய முதலாவதாக சிலாபத்துறையிலும், முசலி பிரதேச பிரிவிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றங்கள் நடைபெற்றன.முசலி பிரதேச செயலகத்தின் இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தின் பின்னர் முள்ளிக்குளம் பகுதியில் மீள்குடியேற்றம் நடைபெறும். தற்போது முள்ளிக்குளம் பகுதியில் நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் வேலைகள் நடத்தப்படுகின்றன.

முசலி பிரதேச செயலகத்திலுள்ள எட்டு கிராமசேவகர் பிரிவுகளிலும் நேற்று முன்தினம் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு உலர் உணவுகள், சமையல் பாத்திரங்கள், தற்காலிக கூடாரங்கள் போன்றவை நேற்று வழங்கப்பட்டன.

யுனிசெப் நிறுவனம், உலக உணவுத் திட்ட நிறுவனம் உட்பட தொண்டர் நிறுவனங்கள் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கின. வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் எஸ். எம். சந்திரசேன உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

http://www.mahaveli.com

Read Full Post »

musaliதமது சொந்த இடங்களிலிருந்து வெளியேறிய மக்களை மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா பாராட்டியுள்ளது. மீள்குடியேற்றுகை மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் மும்மொழிகளிலும் வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரம் தொடர்பாக முஸ்லிம் இயக்கத்தின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மேற்படி விளம்பரத்தின்படி பத்தொன்பது வருடத்திற்கு முன் (1990) சொந்த இடங்களிலிருந்து வெளியேறி இதுகால வரை மீள்குடியேறும் வாய்ப்பை இழந்திருக்கும் வடபுல முஸ்லிம்கள் தமது சொந்த மண்ணில் கால்பதிப்பதற்கும் அவர்களது காணிகள் வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அல்லது அவற்றுக்கான நஷ்டஈடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் சரியான சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றிருப்பதனால் வடபுல முஸ்லிம் குடும்பம் ஒவ்வொன்றும் உரிய காலத்திற்கு முன்னர் விண்ணப்பித்து தங்கள் குடும்ப, மற்றும் காணி விபரங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு முஸ்லிம் கவுன்சில் வடபுல முஸ்லிம்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளது.

நீங்கள் மீள்குடியேறுகிறீர்களோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகக் குடியேறாது விடுகிறீர்களோ, இவற்றில் எதுவாக இருந்தாலும் உங்களது ஒவ்வொரு குடும்பத்தையும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் தெவித்துள்ளார்.

அத்துடன் பதிவின் ஒரு பிரதியை ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்குமாறும் முஸ்லிம் கவுன்சில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களைக் கேட்டுள்ளது. முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா, இலக்கம் 05, மந்தி ரோட், கொழும்பில் 5. ஈமெயில் muslimcouncilsl@gmail.com தொலைநகல் 011 7393883.

http://www.ilakkiyainfo.com

Read Full Post »

வசந்தம் என்றாலே மனம் இனிக்கும். ஏனெனில் அது பூமி பூக்கும் காலம். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு வசந்தக் காலம் உண்டு. ஒட்டு மொத்த பூமிக்கும் சேர்த்து ஒரு வசந்தம் உண்டா… ஆம் உண்டு. ஆசியாவும், ஆப்ரிக்காவும், அமேரிக்காவும், ஐரோப்பாவும், உலகின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் ஒன்று சேர்ந்து எதிர்பார்கும் வசந்தம். அந்த வசந்தம் வருவதற்கு முன்பே அந்த வசந்தம் பற்றிய திருவிழாக்கள் ஒவ்வொருவரின் மனதிலும். இதோ நமக்கு எதிரில், அருகில் வந்து விட்டது அந்த வசந்தம். அந்த வசந்தத்திற்கு பெயர் ரமளான். முத்தாக ஒரு மாதம் பூக்கும் அந்த மலர்களுக்குப் பெயர் நோன்பு.

தான் ஒரு இறையடிமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் இன்னும் ஆழமாக இறைவனிடமும், உலகப் பார்வையாளர்கள் முன்பும் பதித்துக் கொள்ளும் மாதம். அனுமதிக்கப்பட்ட உணவுகளைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு பட்டினிக் கிடப்பதில் ஆனந்தம் கொள்ளும் அற்புதம் நிகழும் மாதம்.

இன்று நேற்றல்ல..

வருடந்தோரும் வரும் இந்த வசந்தம் துவங்கி சில நூறு ஆண்டுகளோ, அல்லது வெறும் ஆயிரம் ஆண்டுகளோ ஆகவில்லை. இதன் சரித்திரம் பல ஆயிரம் வருடங்களைக் கடந்ததாகும். இறைவன் நேசிக்கக் கூடிய, இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கூடிய அடியார்கள் என்றைக்கு இந்த பூமியில் வாழத் துவங்கினார்களோ அவர்கள் காலத்திலிருந்து துவங்கியது இந்த வசந்தம்.

நோன்பு என்றால் என்ன?

மனிதன் தன் உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்கிறான். அவன் மேற் கொள்ளும் பல்வேறு முயற்சிகளை உள்ளடக்கியதாக நோன்பு அமைந்துள்ளது. எழுத்தில் இதை முழுமையாக விளக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணரும் காரியமாகும் இது.

பசியின் தன்மை உணர்த்தப்படுகிறது.

வேண்டா கொழுப்புகள் குறைக்கப்பட்டு உடல் நலம் காக்கப்படுகிறது.

தீய எண்ணங்களும் செயல்களும் மனிதனை விட்டு விலகி ஓடுகின்றன.

பிறர் மீதான அக்கறையும் இல்லாதோருக்கு கொடுத்துதவும் மனப்பக்குவமும் கூடுகின்றது. அதிகமான இறை வணக்கங்களால் மனம் மிகுந்த அமைதிப் பெறுகிறது.

பாவக்கறை படிந்தவனாக இருக்கும் நிலையில் மனிதனை மரணம் வந்தடைந்து விடாமல் இருக்க இறைநம்பிக்கையாளர்களின் பாவங்களை அவனை விட்டு அகற்ற இந்த நோன்பு வழிவகுக்கிறது.

நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து எவர் ரமளானில் நோன்பு வைக்கிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று இறைத்தூதர் (ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா(ரலி) புகாரி முஸ்லிம் திர்மிதி)

நோன்பு எதற்கு?

பகல் நேரங்களில் மனிதனை வருத்தி அவன் தோற்றத்தை பலவீனப்படுத்துவது நோன்பின் நோக்கமல்ல பலவீனமாகவே படைக்கப்பட்ட மனிதனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக இறைவன் நோன்பை கடமையாக்கி இருந்தால் இரக்க குணமிக்க இறைவனின் பண்பிற்கு மாற்றமாக அது அமைந்து விடும். அதனால் மனிதனை பலவீனப்படுத்தத் தான் நோன்பு என்ற எண்ணமோ அர்த்தமோ தவறானதாகும்.

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது நீங்கள் உள்ளச்சமுடையோராய் ஆக வேண்டும் என்பதற்காக. (அல் குர்ஆன் 2:183)

மனிதனிடம் இறைவன் பற்றிய உள்ளச்சம் வந்து விட்டால் அவன் தூய்மையடைய அது வழிவகுத்துவிடும் இதற்கான முழு பயிற்சியையும் நோன்பின் மூலம் மனிதன் – ஓரிறை நம்பிக்கையாளர்கள் – பெற முடியும். உலகில் நடக்கும் கொடுமைகள் அனைத்திற்கும் இறைவன் பற்றிய அச்சமும் அவன் பற்றிய நம்பிக்கையும் இல்லாததேயாகும். நோன்பு தொழுகைப் போன்ற பயிற்சியின் வாயிலாக மனிதன் இறைவன் பற்றிய நம்பிக்கையையும் அச்சத்தையும் வளர்த்துக் கொள்ளும் போது அவன் மூலம் பிறருக்கு எவ்வித கெடுதிகளும் ஏற்படுவதில்லை. அல்லது மிகவும் குறைவான கெடுதிகளே அவனால் வெளிப்படும்.

இறைவனுக்காக ஒருவன் தனக்கு பிடித்த – அனுமதிக்கப்பட்ட – உணவுகளை பகல் பொழுதில் திரும்பிக் கூட பார்ப்பதில்லை பிறர் தூண்டினால் கூட உண்பதில்லை இவ்வாறு ஒருநாள் இரண்டுநாள் என்றில்லாமல் ஒருமாதம் முழுதும் பயிற்சி எடுக்கிறான் என்றால் அவனது இந்த பயிற்சியின் பக்குவம் மற்ற மாதங்களில் வெளிப்படவே செய்யும். இறைவன் விரும்பாத செயல்களிலிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொள்வான். இதன் மூலம் அவன் வாழ்வு நிம்மதி அடைவதோடு மட்டுமல்லாமல் அவன் வழியாக பிறரும் நிம்மதியும் – உதவியும் பெறுகிறார்கள்.

வருடந்தோரும் உலக முஸ்லிம்களை சந்தித்து விட்டு செல்லும் இந்த நோன்பின் மூலம் உரிய பயிற்சியைப் பெறாதவர்கள் பயனற்றவைகளுக்கு உதாரணமாகி விடுகிறார்கள்

வயிற்றுப் போக்கு நோயால் அவதிப்படும் ஒருவனுக்கு டாக்டர் சில மருத்துவ முறைகளை கையாள சொல்கிறார். மருத்துவரை சந்தித்து அவருக்குரிய பணத்தையும் கொடுத்து விட்டு மருந்து சீட்டையும் வாங்கி வரும் நோயாளி மருத்துவர் சொன்ன அறிவுரையை மட்டும் கடைப்பிடிக்கவில்லை என்றால் அவன் மருத்துவரை சந்தித்த சந்திப்பில் எப்படி ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போய்விடுமோ அதே போன்று தான் இந்த ஆன்மீக மருத்துவ மாதத்தை சந்தித்து அதில் பயிற்சிப் பெறாதவர்களின் நிலையுமாகும்.

தன் வயிற்றில் பிறந்த பிள்ளை நல்லப்பிள்ளையாக வளர வேண்டும் என்று நினைக்கும் தாய்க்கு கூடுதல் பொறுப்பு உண்டு. தாய் என்ற உலகத்தை தாண்டி வேறு உலகத்தை குழந்தை எட்டிப்பார்க்க துவங்கும் போது தாயின் கூடுதல் பொறுப்பு வேலை செய்ய துவங்கி விட வேண்டும்.

ஒரு மாணவன் சிறந்தவனாக உருவாக ஆசிரியருக்கு அதிக பொறுப்பு உண்டு. வகுப்பறையைக் கடந்து இதர மாணவர்களோடு அவன் கலக்கும் போது ஆசிரியரின் பொறுப்பு உஷார் நிலையை எட்டி விட வேண்டும்.

தன் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசைப்படும் குடும்பத் தலைவனுக்கும் கூடுதல் பொறுப்பு உண்டு. பணத்திலோ – ஆடம்பரத்திலோ – சுக போகங்களிலோ குடும்பம் காலடி எடுத்து வைக்கும் வேலைகளில் இவனுடைய கரம் நீண்டு அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த கூடுதல் பொறுப்பு குழந்தையையும், மாணவனையும், குடும்பத்தையும் இடற்பாடில்லாத அல்லது இடற்பாடு மிகக் குறைந்துப் போன ஒரு நல்லப் பாதையில் வழி நடத்தி செல்ல உதவும். உலகம் என்ற பகட்டுப் பல்லக்கில் மனிதன் ஊர்வலம் வர துவங்கி விட்டான். உச்சியில் ஊர்வலம் போகும் மனிதனுக்கு உலகம் அழகாகத் தெரியும். இந்த சந்தர்பங்களிலெல்லாம் அவன் பல்லக்கிலிருந்து தவறி விழுந்து விடாமலிருக்க அந்தப் பல்லக்கை இயக்குபவனுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. அந்த கூடுதல் பொறுப்பின் வெளிபாடுகளில் ஒன்றுதான் இந்த நோன்பு. இந்த பயிற்சியை முறையாகப் பெற்றால் வழி கேடுகள் என்ன வசீகரித்தாலும், உலகத்தின் பனிப் பாறைகள் பள்ளத்தாக்குகள் தன்னை நோக்கி ஈர்த்தாலும் பல்லக்கிலிருந்து தவறி விழும் அபாயம் நம்மை அண்டாது. சிந்திக்கும் மக்களுக்கு ரமளான் நல்லப் பயிற்சிக் கொடுக்கும்.

இறையச்சம் உலகில் மிகைக்கும் போது சாந்தி சமாதானம் எங்கும் வியாபித்து நிற்கும். இறையச்சமுள்ள மனிதன் பிற மனிதனுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்த மாட்டான். இதற்காக இஸ்லாம் பல்வேறு வழிகளில் மனிதனை பக்குவப்படுத்த வழிவகுக்கின்றது. அதில் ஒன்று நோன்பு. வருடந்தோரும் ஓராண்டு இந்த பயிற்சியில் ஒன்றிணையும் போது இந்தப் பயிற்சியின் தாக்கமும் விளைவும் வாழ்வில் பிரதிபளிக்கவே செய்யும்.

தீயவை அனைத்திலிருந்தும் ஒதுங்கும் மாதம் இது. பார்க்கும் சுதந்திரம் இருந்தும், கேட்கும் சுதந்திரம் இருந்தும், பேசும் சுதந்திரம் இருந்தும், சுவைக்கும் சுதந்திரம் இருந்தும் தனக்குள்ள சுதந்திரத்தைக் கூட இறைவனுக்காக புறந்தள்ளி வைக்கும் பயிற்சி. இறை வணக்கங்களிலும், இறை நினைவிலும் திளைத்திருக்கும் பயிற்சி. இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுவோர் வெறும் சில நூறுகளோ, சில லட்சங்களோ, ஏன் சில கோடிகளோ அல்ல. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தப் பயிற்சியை மேற்கொள்கிறார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் கூட இந்தப் பயிற்சியில் தன்னை விரும்பி இணைத்துக் கொண்டு குதூகளிக்கும் ஆனந்தம்.

நோன்பு விதிக்கப்பட்டுள்ளது. இறைநம்பிக்கையுள்ள மனிதன் தூய்மையடைய வேண்டும் என்பதற்காக.

எத்துனை நாட்கள்?

ரமளான் என்பது ஒரு மாதத்தின் பெயர் என்றாலும் சந்திர சுழற்சியை மையமாகக் கொண்ட மாதம் என்பதால் இறைவன் நோன்பிற்கான கால அளவை நாட்கள் என்றே குறிப்பிடுகிறான்.

எண்ணப்படும் நாட்களில் நோன்பு கடமையாகும். (அல்குர்ஆன் 2:184)

எண்ணப்படும் நாட்கள் என்பது 29 நாட்களாகவோ, 30 நாட்களாகவோ இருக்கலாம். துவக்கத்திற்கும் முடிவுக்கும் பிறைப் பார்த்தாக வேண்டும்.

பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், பிறைப் பார்த்து நோன்பை விடுங்கள் என்று இறைத்தூதர் கூறியுள்ளார்கள். (அனைத்து நபிமொழி நூட்களிலும் இந்த செய்தி பதியப்பட்டுள்ளது).

பிறை வழிகாட்டல் பற்றியக் கட்டுரை தனியாக இடம் பெற்றுள்ளது

ஒரு பிறைதான் அறிவுப்பூர்வமானது (கட்டுரை)

தேதிக்கோடு சட்ட சிக்கலை உருவாக்குமா..? (கட்டுரை)

பிறைப்பார்ப்பதின் அறிவியல் அர்த்தம் (கட்டுரை)

சலுகையளிக்கப்பட்டவர்கள்.

மனித பலவீனங்களை கருத்தில் கொண்டு இறைவன் இஸ்லாமிய வரையறைகளில் பல்வேறு சலுகைகளை அளித்துள்ளான். நோன்பும் சிலருக்கு சலுகையளிக்கின்றது.

1)நோயாளிகள்.

நோன்பு நாட்களில் ஒருவர் நோய்வாய்படுகிறார். அது தலைவலியோ, காய்ச்சலோ, அல்லது வயிற்றுக் கோளாறுகளோ அல்லது இன்ன பிற எதோ ஒரு நோய். இந்த நோயின் தாக்கத்தால் அவதிப்படுபவர்கள் இந்த நோயால் நோன்பு வைக்க முடியாது அல்லது நோன்பு வைத்தால் நோயின் பாதிப்பு அதிகமாகும் என்று கருதுபவர்கள் நோயின் போது நோன்பு வைக்காமல் ரமளானுக்கு பிறகு நோயிலிருந்து குணமடைந்தவுடன் விடுபட்ட அனைத்து நோன்பையும் நோற்றுவிட வேண்டும்.

ஏமாறுவது நாமே!

இறைவன் பொதுவாக நோயாளி என்று தான் குறிப்பிடுகிறான். இன்ன இன்ன நோய்க்கு சலுகை என்று குர்ஆனிலோ சுன்னாவிலோ பட்டியல் எதுவும் இல்லை. எனவே தலைவலியிலிருந்து மரணப்படுக்கை வரையுள்ள அனைத்து நோயையும் இது உள்ளடக்கவே செய்யும். இந்த நோய், அந்த நோய் என்று வரையறைப் போடும் உரிமை எவருக்கும் இல்லை என்றாலும் முஸ்லிம்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

சாதாரணமாகவே நோன்பு வைக்கும் முதல் நாளில் சிலர் தலைவலிக்கு ஆட்படலாம். நோன்பு திறக்கும் பொழுதுகளில் அனைவருக்குமே ஒரு வித மயக்கம் ஏற்படும். பட்டினி இருக்கும் பொழுதுகளில் வயிற்றில் புரட்டல் போன்ற உணர்வுகள் ஏற்படவே செய்யும். இதையெல்லாம் நோய் என்ற பட்டியலில் கொண்டு வந்து ‘தான் நோயாளி’ என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டு நோன்பு வைக்காமல் இருப்பது அறிவுடமையாகாது. அப்படி செய்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகும். தலைவலி, மயக்கம் போன்ற நோய்கள் சில மணித் துளிகளில் மறைந்து விடக் கூடியதாகும். அதை காரணங்காட்டி நோன்பை முறித்துக் கொள்வது, அல்லது நோன்பு வைக்காமலிருப்பது நம்மீது நோன்பு என்ற கடனை அதிகப்படுத்தி விடும். தவிர்க்க முடியாத நிலை இருந்தால் மட்டுமே நோன்பை விட வேண்டும். பின் வரும் நாட்களில் நோற்கலாம்.

தொடர் நோய்.

முதுமை ஒரு தொடர் நோய். முதுமைக்கு ஆட்பட்டு விட்டவர்கள் மீண்டும் இளமைக்கு திரும்ப முடியாது என்பதால் நோன்பு வைப்பதை கடினமாக கருதும் முதுமையைப் பெற்றவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்பது அவர்களின் பலவீனத்தை அதிகப்படுத்தி விடும் என்பதால் இவர்கள் நோன்பிலிருந்து விலக்குப் பெறுகிறார்கள். முதுமையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது ‘அறிவு பெற்று வாழ்ந்தும் பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்மூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்’ என்று குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 22:5) இத்தகையவர்கள் மீது நோன்பு கடமையில்லை.

தொடர் நோய்க்குட்பட்ட இன்னும் சிலர் இருக்கிறார்கள்.

எயிட்ஸ் நோயாளிகள், எயிட்ஸ் தாக்கப்பட்ட எவரும் மரணத்தின் நாட்களை எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். தனது தவறான போக்கால் இந்த நோயைப் பெற்றுக் கொண்டாலும் இவர்கள் நோன்பிலிருந்து விலக்கு பெற முடியாது. ஏனெனில் நோன்பு வைத்தால் என்ன பலவீனம் ஏற்படுமோ அந்த பலவீனம் எயிட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படாது. எனவே எயிட்ஸ் என்பது ஒரு தொடர் நோய் என்ற பொதுவான நிலையை வைத்துக் கொண்டு இவர்கள் நோன்பு வைக்காமல் இருக்க முடியாது. இவர்கள் அவசியம் நோன்புவைத்தாக வேண்டும்.

கோமா நிலைக்குத் தள்ளப்பட்டவர்களும் தொடர் நோயாளியாகக் கருதப்படுவார்கள். அவர்கள் முழு அளவு நோன்பிலிருந்து விதிவிலக்கு பெறுபவர்களல்ல. மீண்டும் தன் நிலைக்கு திரும்பினால் அவர்கள் மீது பழைய நோன்பு கடமையாகும்.

அல்சர் நோயின் தாக்கத்தைப் பெற்றவர்கள் இறை நினைவு மிக்க ஒரு முஸ்லிம் மருத்தவரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது நலம்.

பிரயாணிகளுக்கு சலுகை.

நோயாளிகளைப் போன்று பிரயாணிகளுக்கு உடல் நிலை பாதிப்பு இல்லை என்றாலும் பிரயாணிகள் வேறுபல பிரச்சனைகளை சந்திப்பதால் இஸ்லாம் பிரயாணிகள் குறித்து பல கருத்துக்களை முன் வைத்துள்ளது. அதிலொன்றுதான் பிரயாணிகள் நோன்பை விடலாம் என்ற சலுகை.

அன்றைய பிரயாணம் – இன்றைய பிரயாணம்.

பிரயாணத்தைப் பொருத்தவரை மனிதன் பெருமளவு முன்னேற்றத்தைப் பெற்று வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டாலும் பிரயாணத்தில் ஏற்படும் களைப்பையும் வழியில் பல பிரச்சனைகளையும் சந்திக்கவே செய்கிறான். அன்றைக்கு ஒட்டகம், குதிரை, கழுதை போன்ற மிருகங்களை தங்கள் பிரயாண வாகனமாக அனைவரும் பயன்படுத்தினார்கள். இன்றைக்கும் அந்த மிருகங்கள் உலகில் பல நாடுகளில் பிரயாணத்திற்கு பயன்படவே செய்கின்றது.

பிரயாணம் செய்யும் வாகனங்களையெல்லாம் சிலர் கருத்தில் எடுத்துக் கொண்டு இன்றைய பிரயாணங்கள் பிரயாணங்களே அல்ல. மனிதன்; வீட்டில் இருக்கும் போது எப்படி இருக்கின்றானோ அதே நிலையை பிரயாணத்திலும் பெற்று விட்டான் என்றெல்லாம் விளக்கமளித்து இன்றைக்கு எந்த பிரயாணியும் நோன்பிலிருந்து சலுகைப் பெற முடியாது என்றெல்லாம் கூறுகிறார்கள். மேலைநாடுகளில் வசித்துக் கொண்டு ஏசி கார்களை கையில் வைத்துக் கொண்டு பிரயாணம் செய்பவர்களை பார்ப்பவர்கள் மட்டுமே இத்தகைய கருத்தை முன் வைக்க முடியும். (இருந்தாலும் அவர்களை பிரயாணி என்று சொல்லக் கூடாது என்ற கருத்து தவறாகும்).

இதில் பிரயாணம் செய்யும் வாகனங்களையெல்லாம் கருத்தில் எடுத்துக் கொண்டு பிரயாணியை தீர்மானிக்க வேண்டும் என்பதற்கு துணை ஆதாரங்கள் கூட ஒன்றும் கிடைக்கவில்லை. இன்றைக்கு விரைவு வாகனங்கள் இருப்பது போன்று அன்றைக்கு குதிரைகள் பயன்பட்டன. எனவே சொந்த ஊரிலிருந்து வெளியில் கிளம்பும் அனைவரும் பிரயாணியாகவே கருதப்படுவர்.

பிரயாணத்தில் இருப்பவர்கள் நோன்பு வைப்பது சிரமம் என்று கருதினால் அவர்கள் பிரயாணத்தின் போது நோன்பை விட்டு விட்டு பிரயாணம் இல்லாத மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்று விட வேண்டும். சிலர் தினந்தோரும் பிரயாணம் செய்பவர்களாக இருப்பார்கள். உதாரணமாக வெளியூர் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள், தொழிலுக்காக வெளியூர் செல்பவர்கள் இவர்கள் தினந்தோரும் பிரயாணம் செய்பவர்களாக இருப்பதால் தொடர்;ச்சியாக நோன்பிலிருந்து விலக்கு பெறுவார்களா.. என்று சிலர் நினைக்கலாம். நிரந்தர நோயாளிகளைப் போன்று நிரந்தர பிரயாணி என்று எவருமில்லை. எனவே பிரயாணிகள் பிற நாட்களில் நோன்பை நோற்க வேண்டிய நிலையிலுள்ளவர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தினந்தோரும் பிரயாணத்தை காரணங்காட்டி இவர்கள் நோன்பை விட்டால் வரும் நாட்களில் இவர்கள் நோன்பை நோற்க முடியாமல் போய்விடும் நிலை ஏற்படும். ஏனெனில் ரமளானுக்கு பிறகும் இவர்களின் தின பிரயாணம் தொடரவே செய்யும்.

நோன்பு காலங்களிலேயே நோன்பை வைத்து விடுவதுதான் இவர்களைப் போன்றவர்களுக்கு இலகுவாகும். ஏனெனில் கடமையான மாதம் என்ற எண்ணத்தில் பொழுது கழியும். பிற மதத்தவர்களும் இது முஸ்லிம்களுக்கு நோன்பு மாதம் என்று தெரிவதால் அலுவல்களில் முஸ்லிம்களுக்கு வேலையில் உதவி புரிவார்கள். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கும். ரமளான் கழிந்து நோன்பு வைப்பவர்கள் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பதால் அவர்கள் நோன்பு வைத்து விடுவதுதான் சிறந்தது.

நபி(ஸல்) பிரயாணத்தின் போது நோன்போடு இருந்தும், நோன்பை விட்டும் வழிகாட்டியுள்ளார்கள். எனினும் உலகில் உள்ள அனைவரையும் விட அவர்கள் இறைவனை அதிகம் அஞ்சியதால் விடுபட்ட நோன்புகளை நோற்க மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டு அந்தக் கடமையை நிறைவேற்றினார்கள். இன்றைக்கு நோன்பு என்ற சூழ்நிலை நிலவும் போதே நோன்பு வைப்பது சிரமம் என்று கருதுபவர்கள் பிற நாட்களில் அதை தவறவிட்டு விடும் அபாயம் உள்ளதால் அந்தக் கடமையை அதற்குரிய நாட்களில் நிறைவேற்றி விடுவதுதான் நல்லது.

நோன்பும் – பெண்களும்

நோயாளிகள் – பிரயாணிகள் என்ற பொது சலுகையில் அந்த நிலையைப் பெற்ற பெண்களும் அடங்குவார்கள் என்றாலும் பெண்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு இன்னும் சிலரும் சலுகைப் பெறுகிறார்கள்.

மாதவிலக்கு.

பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவீனத்தை ஏற்படுத்தும் நாட்கள் மாவிலக்கு நாட்கள். எனவே அந்த சந்தர்பங்களில் அவர்கள் கூடுதல் பலவீனத்தை அடைந்து விடக் கூடாது என்பதால் மாதவிலக்கு நாட்களில் நோன்பு வைப்பதிலிருந்து இஸ்லாம் சலுகையளித்துள்ளது.

நாங்கள் மாதவிலக்கு நாட்களில் தொழுகையையும் நோன்பையும் விட்டுவிடுமாறும் பிற நாட்களில் நோன்பை மட்டும் நோற்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம் என நம்பிக்கையாளர்களின் தாயார் ஆய்ஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (அனைத்து ஹதீஸ் நூல்களிலும் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது)

மாதவிலக்கிற்கான விளக்கங்கள்.

சாராசரியாக குறிப்பிட்ட நாட்களில் மாதவிடாய் ஏற்படும் பெண்கள் மாதவிடாய் ஏற்படும் நேரத்தை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அன்றைய தினம் முன் கூட்டியே நோன்பை விட்டு விடலாம். உதாரணமாக ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மாதவிலக்கு ஏற்படும் பெண் நோன்பு மாதத்திலும் அதே நாளில் இன்றைக்கு மாதவிலக்கு ஏற்படும் என்று தெளிவாக தெரிந்தால் நோன்பு வைக்கமால் இருந்து விடலாம். ஆனால் அன்றைய தினம் நோன்பு முடிந்த பிறகுதான் மாதவிலக்கு ஏற்படும் (உதாரணமாக இரவு 7மணிக்கு) என்று தெரிந்தால் அத்தகைய பெண்கள் அன்றைய தினம் நோன்பை வைத்து விட வேண்டும்.

மாதவிலக்கு நாட்களில் கோளாறு உள்ளப் பெண்கள் மாதவிடாய் ஏற்படும் வரை நோன்பை விடக் கூடாது. உதாரணமாக இன்றைக்கு அல்லது நாளைக்கு மாதவிடாய் ஏற்படலாம் என்று நம்பும் பெண்கள் அந்த சந்தேகத்திற்காக நோன்பை விட்டு விடக் கூடாது. இன்றைக்கு ஏற்படலாம் என்று எண்ணி நோன்பை விட்டு விட்டு அன்றைக்கு மாதவிலக்கு ஏற்படவில்லை என்றால் அந்த நோன்பு களாவாகி விடும். எனவே இத்தகைய பெண்கள் நோன்பை தொடர்ந்து விட வேண்டும். இத்தகைய நிலையில் உள்ள பெண் நோன்பு வைத்துள்ளார் அன்றைய பொழுது மாதவிலக்கு வந்து விடுகிறது என்றால் தானாகவே நோன்பு முறிந்து விடும். பிறகு அதை களா செய்ய வேண்டும். இந்த மாதவிலக்கு நோன்பு திறப்பதற்கு முன் எந்த நேரத்தில் ஏற்பட்டாலும் (நோன்பு முடிய 5 நிமிடங்களே உள்ள நிலையில் மாதவிலக்கு ஏற்பட்டாலும்) நோன்பு முறிந்து விடும். அதை களா செய்ய வேண்டும்.

தொடர் இரத்தப் போக்கு.

சிலர் அபூர்வமாக இந் நிலைக்கு ஆட்படுவார்கள். அதை மாவிடாய் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. தொடர் இரத்தப் போக்கு என்பது ஒரு நரம்பு நோயின் தன்மையாகும். இந்த நிலையை அடைந்தவர்கள் தொழுகையையோ, நோன்பையோ விட்டு விட அனுமதியில்லை.

தொடர் இரத்தப் போக்கு ஏற்பட்ட பாத்திமா பின்த் கைஸ் என்ற நபித்தோழிக்கு இறைவனின் தூதர் தொழுகையிலிருந்து விலக்கு அளிக்கவில்லை. குளித்து விட்டு தொழுமாறு வழிகாட்டியுள்ளார்கள். வழக்கமாக மாதவிடாய் ஏற்படும் நாட்களை கணக்கிட்டு அந்த நாட்களில் தொழுகையை விட்டு விடுமாறு பணிந்துள்ளார்கள்.

தொடர் உதிரப் போக்கு ஏற்படும் பெண்கள் அந்த நோயால் பலவீனம் அடையவில்லை என்றால் அவர்கள் நோன்பு நோற்க வேண்டும். இரத்தம் வெளியேறுவதை கருத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒருவேளை இந்த தொடர் உதிரப் போக்கு தாங்க முடியாத பலவீனத்தை கொடுக்கின்றதென்றால் அத்தகையப் பெண்கள் ‘தொடர் நோயாளி’யாகக் கருதப்படுவார்கள். அவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்.

மாதவிடாய் ஏற்பட்டப் பெண்கள் நோன்பை விட்டு விட்டு பிறகு களா செய்ய வேண்டும் என்பதற்கு நேரடியாக ஹதீஸ் இருப்பதுப் போன்று கர்ப்பிணி – பாலூட்டும் பெண்கள் நோன்பை களா செய்யலாம் என்பதற்கு நாம் தேடி பார்த்த வரை எந்த ஒரு ஹதீஸூம் கிடைக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: இன்னல்லாஹ அஸ்ஸவஜல்ல வழஅ அனில் முஸாபிரி அஸ்ஸவ்ம வஷத்றஸ் ஸலாத்த வஅனில் ஹூப்லா வல்முர்ளிஇ அஸ்ஸவ்ம. அல்லாஹூ கர்பிணித் தாய்கும் பாலூட்டும் தாய்கும் நோன்பை அகற்றி விட்டான் என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ் விலக்களித்துள்ளான் என்பது நிரந்தரமானதா.. தற்காலிகமானதா.. என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களை பொருத்தவரை அவர்கள் சூழ்நிலையை அணுசரித்தே முடிவெடுக்க வேண்டும் என்பதே நமக்கு சரியாகப்படுகின்றது.

அல்லாஹ் நோயாளிகளுக்கும் பிரயாணிகளுக்கும் சலுகையளித்துள்ளான். கர்ப்பிணி பெண்களும் சலுகைப் பெருகிறார்கள் என்று நபி(ஸல்) விளக்கியுள்ளார்கள். நோயாளிகளிலும், பிரயாணிகளிலும் தற்காலிக சலுகையும் நிரந்தர சலுகையும் பெற்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் இந்த பெண்கள் யாரோடு ஒத்துப் போவர்கள் என்பதை பார்ப்போம்.

பிரயாணிகளின் நிலையும் கர்ப்பிணிப் பெண்களின் நிலையும் வெவ்வேறானவை என்று நாம் சிந்தித்தால் நோயாளிகளைப் பற்றி பேசும் வசனம் இவர்களுடன் ஒத்துத்தான் போகும்.

உங்களில் எவரேனும் பிரயாணத்திலோ அல்லது நோயாளியாகவோ இருந்தால் அவர் வேறு நாட்களில் நோற்றுவிடவும். (அல் குர்ஆன் 2:184,185)

நோயாளிகளும் – கர்ப்பிணிகளும்.

நோயளிகளுக்கு நோன்பு தேவையில்லை என்று சொல்வதற்கு நியாயம் இருந்தும் இறைவன் அவர்களுக்கு நிரந்தர விலக்களிக்கவில்லை. நோயிலிருந்து விடுபட்டவுடன் நோற்க வேண்டும் என்று கூறி விட்டான். நோயாளிகளுக்கே இதுதான் நிலவரம் என்றால் கற்பிணிகளுக்கோ – பாலூட்டுபவர்களுக்கோ முழுவதுமாக விலக்களித்திருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் கர்ப்பிணி – பாலூட்டுபவளை விட நோயாளிகளே அதிக சிரமத்திற்குள்ளாகுபவர்கள். நோன்பிலிருந்து முழுதும் விலக்களிக்க தகுதியுள்ளவர்கள் இவர்கள் தான். இவர்களையே இறைவன் பின் வரும் நாட்களில் நோன்பை பூர்த்தி செய்யுங்கள் என்று சொல்லியுள்ளதால் இந்த வசனத்திற்கு முரண்படாமல் அந்த ஹதீஸை விளங்குவதுதான் பொருத்தமானதாகும்.

தொடர் நோயாளிகளும் – தொடர் கர்ப்பிணிகளும்.

நோயாளிகள் பின்வரும் நாட்களில் நோன்பை நோற்கலாம் என்றால் அவர்கள் நோயிலிருந்து விடுதலைப் பெற வேண்டும். சுகம் பெற முடியாத அளவிற்கு தொடர் நோயால் தாக்கப்பட்டவர்கள் (உதாரணமாக முதுமை – வயிற்றுப் பிரச்சனைகள் போன்றவற்றை சொல்லலாம்) ஒவ்வொரு நோன்புக்கு பகரமாகவும் ஒரு ஏழைக்கு உணவளித்து விடவேண்டும். இதை 2:184 வசனத்திலிருந்து விளங்கலாம்.

இதே நிலை கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஒத்துதான் போகும். எப்படி என்றால், கர்ப்பம் தரித்ததிலிருந்து குழந்தைப் பெற்றெடுத்து பாலூட்டி முடியும் வரை மூன்று வருடத்துடைய, குறைந்த பட்சம் இரண்டு வருடத்துடைய நோன்பு அவளுக்கு விடுபட்டுப் போய் விடும். அதன் பிறகு அவள் தொண்ணூரு நாட்கள் – குறைந்த பட்சம் அறுபது நாட்கள் நோன்பு நோற்க வேண்டி வரும். இதுவே அவளுக்கு சுமை என்றாலும் அந்த சந்தர்பத்தில் அவள் அடுத்த கர்ப்பம் தரித்து விட்டால் மீண்டும் இரண்டு மூன்று மாத நோன்புகள் கணக்கில் வந்து நின்று விடும். அவள் காலம் முழுதும் நோன்பு நோற்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். இஸ்லாத்தில் உள்ள எந்த ஒரு வணக்கமும் மனிதர்களை இப்படி தொடர் சிரமத்திற்கு உள்ளாக்குவது போன்று கடமையாக்கப்படவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த வெளிப்படையான விஷயம்.

தொடர் நோயாளிகளைப் போன்று தொடர் கர்ப்பம் பாலூட்டல் போன்ற கடமைகளால் சிரமப்படும் பெண்கள் நோன்பிற்கு பகரமாக ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவளித்து விடலாம் என்பதே நமக்கு சரியாகப் படுகிறது. சிரமத்தை உணராத பெண்கள் – சிரமத்தை பொருட்படுத்தாத பெண்கள் நோன்பு நோற்பதைப் பற்றி ஆட்சேபனையில்லை.

2:185 வது வசனத்தில் வரும் ‘இறைவன் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறான் அவன் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தவில்லை’ என்ற சொற்சொடரை ஒன்றுக்கு பல முறை சிந்தித்தால் நம்முடைய கருத்து சரியானதுதான் என்பது தெளிவாகும்.

குழந்தைக்கு பாலூட்டக் கூடிய தாயிடம் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் ‘நீ நோன்பு நோற்கும் சக்தி இல்லாதவள்தான் அதனால் ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவு கொடுத்து விடு’ என்று கூறியுள்ளார்கள். (தாரகுத்னி – தப்ரி விரிவுரை)

எனவே கர்ப்பிணி – பாலூட்டும் பெண்கள் நோன்பை களா செய்து தான் ஆக வேண்டும் என்று வலியுறுத்த நம்மிடம் ஆதாரமில்லை (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)

முடியாதவர்களுக்குப் பரிகாரம் என்ன?

சில சட்டங்களில் இஸ்லாம் சிலருக்கு சலுகையளிக்கின்றது. சலுகையையும் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமானவர்கள் பரிகாரம் செய்யலாம் என்ற சட்டத்தையும் இஸ்லாம் முன் வைக்கின்றது.

மேற்கண்ட விளக்கங்களுக்கான ஆதார குர்ஆன் வசனத்தை இப்போது பார்ப்போம்.

எண்ணப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால், எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்து (நோன்பிருப்பதை சிரமமாகக் கருதினால் நோன்பை விட்டு விட்டு) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. (நோன்பு வைக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக – ஃபித்யாவாக – ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – (இருப்பினும்) நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும். (அல் குர்ஆன் 2:184).

1) நோன்பு கடமையாகும்

2) சில காரணங்களால் அந்த சந்தர்பங்களில் நோன்பிருக்க முடியாதவர்கள் அதை பின்னர் களா செய்ய வேண்டும்

3) நோன்பு வைக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். (ஒரு நோன்புக்கு பரிகாரமாக ஒரு எழைக்கு உணவு)

4) பரிகாரம் செய்பவர்கள் விரும்பினால் அதிகமாகவும் செய்யலாம்.

5) என்னத்தான் பரிகாரத்திற்கு இறைவன் வழிகாட்டினாலும் அவன் நோன்பு வைப்பதையே விரும்புகிறான்.

இந்த ஐந்து சட்டங்களும் இந்த வசனத்தில் பொதிந்துள்ளன.

நோன்பு வைக்க முடியாத முதியவர்கள், தொடர் நோயாளிகள் தினமும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்பதை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். ‘உணவு’ என்றவுடன் உணவு சமைத்து ஏழையை அழைத்து வந்து உண்ணவைக்க வேண்டும் என்று நாம் விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இவர்கள் எந்த ஏழையை அழைக்கின்றார்களோ அந்த ஏழைகளும் நோன்பு வைத்தவர்களாக இருக்கும் வாய்ப்புள்ளது. எனவே உணவு என்பதை சமைக்காத உணவுப் பொருள் (உதாரணமாக அரிசி, காய்கரி வகைகள், மாமிச வகைகள்) மற்றும் அதற்கான பொருளாதாரம் என்றுதான் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லது இவர்களைப் போன்று நோன்பு வைக்க முடியாத நிலையில் உள்ள வசதி வாய்ப்பற்ற ஏழைகளுக்கு உணவளிக்கலாம்.

இறைவன், அவன் மார்க்கத்தை விளங்கிப் பின்பற்றி அவன் நேசத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்தில் நம்மையும் ஆக்கி வைப்பானாக.

http://www.iduthanislam.com

Read Full Post »

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

நோன்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்களை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

*2, 3 மணிக்கு ‘ஸஹர்’ செய்துவிட்டு அப்படியே உறங்குவது! இதன் மூலம் ஸஹரைப் பிற்படுத்துதல் என்ற சுன்னா விடுபடுவதுடன், சிலவேளை சுபஹுத் தொழுகை கூட தவறிவிடும் நிலை ஏற்படுகின்றது.
*சிலர் சுபஹுக்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன்னர் ‘ஸஹர்’ செய்தாலும், அதான் கூறும் வரை கொஞ்சம் சாய்ந்து கொள்வோம் என சாய்ந்தால், காலை 8, 9 மணிக்குத்தான் விழிக்கின்றனர். இதனால், ‘சுபஹ்’ தவறிவிடும் தவறு நேரிடுகின்றது! எனவே ஸஹரை, ‘சுபஹ்’ நெருங்கும் நேரம் வரை தாமதிப்போமாக!
*உண்ணல், பருகலில் எல்லை மீறி அளவு கடந்து ஈடுபடுதல். சிலர் நோன்பு காலத்தில் ஏனைய காலங்களைவிட அதிகமாகவே உண்கின்றனர்.அதிகம் உண்ணுவது அல்லாஹ் விரும்பாத செயலாகும்.
*‘லுஹர்’, ‘அஸர்’ போன்ற தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதில் சடைவு காட்டல், உறக்கம் அல்லது சோம்பல் போன்ற காரணங்களால் இது நிகழலாம்! இதைத் தவிர்க்க வேண்டும்.
*புறம் பேசுதல், அடுத்தவர் குறை பேசுதல், வீண் விளையாட்டுக்கள், கேளிக்கைகள், அடுத் தவரைக் குழப்புவதற்காகப் பொய் உரைத்தல் போன்ற தவறான நடத்தைகளை விட்டும் விலகா திருப்பது நோன்பின் பலனை அழித்தவிடும்.
*‘ரமழான்’ எனும் புனித மாதத்தின் கண்ணியமான நேரங்களை வீண் விளையாட்டுக்களில் கழித்தல். குறிப்பாக ‘ரமழான்’ இரவுகளில் விளையாட்டுக்காக விழித்திருத்தல், பாதையோரங்களில் விளையாடுதல், இதன் மூலம் பிறருக்குத் தொல்லை கொடுத்தல் நோன்பின் கூலிகளை வீணாக்கிவிடும்.
*‘துஆ’, ‘திக்ர்’, ‘குர்ஆன்’ ஓதுதல், ‘நபிலான, சுன்னத்’தான தொழுகைகளைக் கடைபிடித்தல் என்பவற்றில் பொடுபோக்குக் காட்டுதல் ஒரு நோன்பாளியிடம் இருக்கக் கூடாது.
*‘கியாமுல் லைல்’ தொழுகையில் பொடு போக்குக் காடடுவது ரமழானில் கிடைக்கவிருக்கும் பாக்கியங்களை விட்டும் தூரமாக்கிவிடும்.
*‘ரமழான்’ இறுதிப் பத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வணக்க வழிபாடுகளில் ஈடு படவேண்டும் என்றிருக்க, அதை பெருநாள் ஏற்பாட்டில் கழித்து பாழாக்கிவிடல்.
‘ரமழான்’ மாதத்தில் ஆரம்பத்தில் அதிக தொழுகையாளிகளையும், இபாதத்தாளிகளையும் காணலாம். ஆனால், நாள் செல்லச் செல்ல சோம்பல் அதிகரித்து இபாதத்தாளிகளின் எண்ணிக்கை குறைவதைக் காணலாம்! எனவே, இறுதிப்பத்து கூடுதல் முக்கியத்துவம் கொடுக் கப்பட வேண்டியது என்பதைக் கவனத்தில் கொண்டு செயற்படுவோமாக!
சிலர் இரவு பூராக இபாதத்தில் ஈடுபட்டுவிட்டு ‘சுபஹ்’ த்தொழுகையை தவறவிட்டு விடுகின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
*‘ரமழானி’ல் தர்மம் செய்வது ஊக்குவிக்கப்பட்டுள்ளது. எனினும், வசதியுள்ள பலரும் இதில் கஞ்சத்தனம் செய்கின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
*‘ஸஹரு’டைய நேரம் ‘துஆ’வுக்கும், பாவ மன்னிப்புக்கும் ஏற்றதாக இருக்கும்போது, ‘இப் தாரு’டைய நேரம் ‘துஆ’வுக்குரியதாக இருக்கும் போது, இவ்விரு நேரங்களையும் உண்பதற் கும், பருகுவதற்குமுரிய நேரமாக மட்டும் கருதி ‘துஆ’, ‘இஸ்திஃபார்’ விடயத்தில் அலட்சியமாக இருத்தல்.
*பள்ளிக்குச் செல்லும் பெண்கள் அலங்கார ஆடைகளுடனும், வாசனைத் திரவியங்கள் பூசிக் கொண்டும் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் பெண்கள் மனம் பூசிக்கொண்டு பள்ளிக்கு வருவதை தடுத்துள்ளார்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
*‘ஸகாதுல் பித்ரை’ மிகவும் முற்படுத்துதல், ‘பித்ரா’வின் பெயரில் பிச்சைக்கார சமூகத்தை உருவாக்குதல், வீடுதேடி வருபவர்களுக்கு சில்லறைகளை மாற்றி வைத்து வழங்கிவிட்டு ‘ஸகாத்’ கொடுத்து விட்டதாக எண்ணிக் கொள்ளல் தண்டணைக்குரிய குற்றமாகும்.
*எமது சமூகத்தவர்களில் பலர் புகைத்தல் எனும் தீய பழக்கத்திற்குள்ளாகியுள்ளனர். புகைத்தலை விட்டும் விலக ரமழானே சிறந்த வாய்ப்பாகும். *சுமார் 14 மணி நேரம் புகைத்தலை விட்டும் விலகியிருக்கும் எமது சகோதரர்கள் நோன்பு திறந்ததும் பகலில் குடிக்காத சிகரட்டுக்களையும் சேர்த்தே குடித்து விடுகின்றனர். இப்பழக்கத்தைக் கைவிட நோன்பைச் சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி அதை அப்படியே விட்டு விட அனைவரும் உறுதி கொள்ள வேண்டும். புகைத்தல் ஹராமானது என்பது இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் ஏகோபித்த முடிவு என்பதைக் கவனத்தில் கொள்வோமாக!
இவ்வாறான எமது குறைபாடுகளைக்களைந்து இந்த ‘ரமழானை’த் தூய முறையில் கழிக்க முனைவோமாக!

உண்மை உதயம் மாதஇதழ் (2007)
thanks to islamkalvi.com

Read Full Post »

RamzanMubarak

kattankudinet.wordpress.com

Read Full Post »

Older Posts »