Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மார்ச், 2010

சேர்ர அரசியல்,
கட்சி அரசியல்,
நமது அரசியல்

அரசியல் பற்றிய அறிவு எந்தளவுக்குத் தான் பொது மக்கள் பரப்பிக்குள் ஊடுருவிப் போயிருக்கிறது. கட்சி அரசியல் இஸ்லாமிய அரசியல் கிடையாது என்பதை எப்படித் தெளிவாக சொல்ல வேண்டும் ? என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு வழி இருக்கிறது. ஆனால் அதைக் கைக் கொள்வதில் எமது மெளலவிமார்களுக்கும் தயக்கம், அரசியல்வாதியும் தன் அதிகாரத்தினால் அதைத் தடுத்து நிறுத்தவும் முயல்கிறான்.
அண்மையில் நூறானியாப் பள்ளிவாயலில் பிர்தெளஸ் நளீமி நிகழ்த்திய குத்பா பிரசங்கத்திற்கு எதிராக சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அனுப்பிய கடிதம்.
குறைந்த பட்சம் நாம் அதனை எப்படிப் பார்க்கிறோம் என்றால் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் மொக்கையாக அனுப்பப்பட்டிருந்தமை. சகோதரர் ஹிஸ்புல்லாஹ் தமது அரசியல் பிரச்சாரங்களில் பொய் சொல்கிறார் என்று நாம் சம்மேளனத்திற்கு கடிதம் அனுப்பினால் அது தொடர்பில் எப்படியான நிலைப்பாடுகள் எடுக்கப்பட வேண்டும் ?
குற்றம் சுமத்தும் போது அவற்றிற்கான ஆதாரங்களைத் தான் முதலில் குற்றம் சுமத்தும் தரப்பில் இருந்து கேட்க வேண்டும். இஸ்லாமிய சட்ட மரபும் அதுவாகத் தான் இருக்கிறது.
இஸ்லாமிய சட்டவியல் ஒழுங்கில் உள்ள முக்கியமான ஒரு விதி ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் சுத்தவாளி என்பதாகும்.
நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. முடிந்து போன ஒரு விடயம் குறித்து இனிப் பேசுவதன் பயன் என்ன ?
இலங்கைக்குள் ஒரு முஸ்லிம்கெளுக்கென கொள்கை அரசியலை முன்னெடுக்க எமது ஊரில் மரம் வைத்தவர்கள் நாம். துரதிஷ்டமாக இன்று இலங்கைக்குள் மிக மோசமான இஸ்லாமிய அரசியலை முன்னெடுக்கும் சமூகமாக நாம் இருக்கின்றோம்.

சேர்ர அரசியல்

என்ன தான் சொன்னாலும் ஊருக்கு சேர் இல்லாட்டி எதுவும் நடக்காது என்பது எமது மக்களின் ஐதீகமாக இருக்கிறது. மரபான ஐதீகங்களின் மீதான கேள்வியும் அவற்றை உடைத்து மாற்றங்களின் மீது மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதும் மிகக் கடினமானதாகும்.
சேர் இன்றளவில் செல்வாக்குடன் ஊருக்குள் இருப்பதற்கு துணை செய்கின்ற விடயங்கள் நிறைய இருக்கின்றன.
– தொழில் எடுத்துக் கொடுத்தமை
– ஆதரவாளர்களின் தரத்திற்கு ஏற்ப கொன்றக்ட் கொடுத்தமை
இந்த இரண்டு விடயங்களையும் நாம் மிக முக்கியமாக நாம் பார்க்கிறோம்.
சேருக்கான ஆதரவைத் திரட்டுவதில் இவர்களின் பங்களிப்புக்குக்கள் மிகக் காத்திரமானதாக இருக்கிறது.
இதில் மிகத் தெளிவாகவே தெரிகின்ற விடயம். அவரவர் சுயம் சார்ந்து தமது விருப்புக்கு ஏற்ற ஒரு விடயத்திற்காக அதனைப் பொதுப்படுத்த முனைகிறார்கள்.
தமக்கு கொடுக்கப்பட்ட சலுகைக்கு விசுவாசத்தைக் காட்ட முழு ஊரையும் ஒரு அணியில் திரட்ட முயல்கிறார்கள் என்பது தான் இவர்கள் செய்யும் மடமை.

இதுவரை காலமும் இவ்வழி முறை கைகொடுத்தது. ஆனால் இனி வரும் காலங்களில் அவை எந்தளவு தூரம் நிலைக்கும் உதவும் என்பது கேள்விக் குறி தான்.

கட்சி அரசியல்

இது முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் தோற்றத்தோடு மாத்திரம் நாம் சுருக்கவில்லை, அதனோடு மாத்திரம் சுருக்கிப் பார்ப்பதும் தவறான விடயமுமாகும்.

காலங்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளராக ஒருவர் இருப்பார்; வெளித் தெரியும் காரணமாக நாம் இப்படி வேணுமானால் சொல்லலாம் – வியாபாரிகளுக்கு சாதமாக இருப்பது.
இது போன்று வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம் அது காலம் காலமாக அந்தக் குடும்பத்தை தொடர்ந்தும் கட்சி அரசியலில் நிலைப்படுத்தியிருக்கும். இவர்களது ஆதரவு வெளிப்படையானதாகவும் இருக்கும் ஊரளவில் தெரிந்ததாகவும் இருக்கும்.
இதில் மிகவும் வலுவானதாக நாம் சொல்வது தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசியல்.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுக்குப் பின் காங்கிரஸின் தலைவராக யார் வந்திருந்தாலும் என்ன தான் முடிவுகளை எடுத்தாலும் தொடர்ந்தும் தாமாகவே சில நியாயங்களைக் கற்பித்துக் கொள்வார்கள்.

இதில் சிந்தனை என்பதற்கே எந்த இடமும் கிடையாது. தமக்கு சிந்திக்கும் திறன் இருக்கின்றது என்பதனை இவர்கள் உண்மையில் மறந்தே போய் இருப்பார்கள்.
இவர்களுக்கு நாம் தான் சொல்ல வேண்டும் ; உங்களுக்கும் மூளை இருக்கிறது நீங்களும் சுயமாக சிந்திக்கலாம் ; முடிவு எடுக்கலாம்.

கொள்கைவாத அரசியல்

இலங்கைக்குள் இது எந்தளவு தூரம் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பது பெரும் கேள்வி. நாம் இதனுடாக எதனைச் சொல்கிறோம் என்பதற்கு நபி ஸல் அவர்களின் ஒரு ஹதீஸை முன்வைக்கின்றோம். ரஸூலுல்லாஹ் ஸல் அவர்கள் சொன்னார்கள் : உங்களில் மூன்று பேர் இருந்தால் அதில் ஒருவரைத் தலைவராக்கிக் கொள்ளுங்கள்.
நாம் உலகளாவிய முஸ்லிம் சமூகம் (உம்மத் ).
இவ்வுலகில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார். உலகில் 150 மில்லியன் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இலங்கையில் 02 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறோம். எங்களுக்கெல்லாம் யார் தலைவர் ?.
மிக வினயமாக நாம் சிந்திக்க வேண்டிய கால கட்டம். தியாகங்கள் இன்றி எமது வரலாறு வெற்றியானதாக அமைய மாட்டாது. நான், எனது மனைவி, எனது குழந்தைகள் என்ற சிந்தனைக்கு அப்பால் நாம் , எனது சமூகம், எனது ஊர், நான் சர்வதேசிய உம்மத் என்ற சிந்தனையில் வளர வேண்டும். அவற்றை வளர்க்க வேண்டும்.
இந்த இடத்தில் நபி ஸல் அவர்களின் எச்சரிக்கையை நாம் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

‘நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
– பாகம் 1, அத்தியாயம் 3, எண் 100 -.

Read Full Post »

Read Full Post »

விண்ணப்ப முடிவுத் திகதி 2010-04-01.

கடித உறையில் மிகத் தெளிவாக தொழில் வழிகாட்டல் அலுவலர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம் என்பது எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.
இவ்வறிவித்தலானது 2010-02-26 வர்த்தமானியில் வெளிவந்தது என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

விபரங்கள் காண எமது இணைப்பை அழுத்துங்கள்.
முதல் இணைப்பில் நாம் விண்ணப்பபடிவத்தை இணைத்துள்ளோம்.

App.CGOkky<

வர்த்தமானியை விபரங்களுக்காக இணைத்திருக்கின்றோம்.

Gazette kkywrdpr

Read Full Post »

“சினிமா குறித்து பல்கலைக்கலகங்களில் எப்போதாவது பேசப்படலாம். ஆனால் அதற்குரிய கல்வி அந்தஸ்து தரப்படவில்லை. அறிவியல் மற்றும் ஆராய்ச்சிகள் நிகழும் இடங்களில் இக்கலை ஏற்புடையதாய் இல்லை. நம் இளைய தலைமுறை ஏதாவது ஒரு கலையின் அழகியல் குறித்து நேரடியாக அனுபவப்பட்டிருக்கிறார்கள் என்றால் அது சினிமாதான். ஆனால் பள்ளிப் பாடத்தில் சினிமா பற்றி எதுவுமே கிடையாது. ஆனால் சினிமா மக்கள் கலையாக உள்ளது. காரணம் மக்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதல்ல. துரதிஸ்டவசமாக மக்களை அது பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான். மக்களின் மனப்பாங்கை கருத்துக்களை சினிமா உருவாக்குகின்றது. சினிமா குறித்து ரசனை மக்களிடம் இல்லை. அது அவர்களுக்கு வழங்கப்படவில்லை. சினிமா பற்றிய ரசனை, அறிவு அவர்களுக்கு நகர்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா என்னும் மாபெரும் சக்தியின் முன்பாக அவர்கள் செயலிழந்து நிற்கிறார்கள்.

சினிமா கடந்த ஐம்பது ஆண்டுகளில் முக்கியமான சக்திவாய்ந்த கலையாக உலகம் முழுவதும் வளர்ந்துள்ளது. ஆனால் பண்பாட்டின் அங்கமாய் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. என் இனிய நண்பர்களே! இசை, இலக்கியம், ஓவியம் பற்றி ஒன்றுமே அறியாதவரை கற்றறிந்தவராக ஏற்றுக்கொள்வீர்களா? இரு பெரிய பட்டங்கள் பெற்ற உங்களுக்கு சினிமா பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனாலும் கற்றறிந்த மேதையாக உங்களை எல்லோரும் கருதுகிறார்கள். அது தவறு. 1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்கள் முதன் முதலில் ஒளிதரும் பிம்பங்களை திரையில் காண்பித்த போது பிறந்தது ஒரு கலை மட்டுமல்ல அப்போது மனித மூளையில் உணர்வதற்கும் புரிந்துகொண்வதற்கும் ஒரு புதிய அமைப்புத் தோன்றியது என்பதுதான் உண்மையாகும். அதன் மூலம் மானுட வளர்ச்சிக்கான புதிய பாதை போடப்பட்டது. நல்ல இசை உணர்வுக்கு அடிப்படைச் சூழ்நிலையும் இசை உணர்வுக்கான மூலமும் இசையறிவும் தேவைப்படுகின்றன. அதே நேரத்தில் இசையும் காதுகளை அதை ரசிப்பதற்கேற்றவாறு வளப்படுத்துகிறது, மாற்றுகிறது என்ற காரல் மார்க்ஸின் அற்புதுமான கூற்று சினிமாவுக்கும் பொருந்தும். கடந்த ஐம்பது ஆண்டுகளில் சினிமாவின் வளர்ச்சி அதை நிரூபித்துள்ளது.”

இது சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் சினிமா பொன்விழாவை பாடசாலைகளில் பல்கலைக்கலகங்களில் கொண்டாட வேண்டுமென விரும்பிய Bela Balazs என்ற ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த சினிமாக் கோட்பாட்டாளர் ஒரு வரலாற்றுப் பேராசிரியருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியாகும். வளரும் தலைமுறையினருக்கு சினிமாவை ஏன் கற்பிக்க வேண்டும் என்பதற்கு இது வலிமையான ஆதாரமாகும்.

ஏன் சினிமாவை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இன்று நாம் குழந்தைகளுக்கு எப்படியாவது ஆங்கிலத்தைக் கற்பித்து விட வேண்டுமென்று படாதபாடுபடுகிறோம் அல்லவா? அது ஏன்? இன்றைய நிலையில் தாய் மொழிமட்டும் ஒரு குழந்தைக்குப் போதாது. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருந்தால் தான் குழந்தையால் இந்த யுகத்தின் சவாலை எதிர் கொள்ள முடியும் என்று நாம் நம்புகின்றோம். தாய் மொழி என்பது அன்றாட வாழ்வில் நாம் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள உதவுகின்றது. ஆங்கிலம் அந்நிய மொழி என்றாலும் அது படித்தவர்களுக்கு இரண்டாம் தாய்மொழியாகி விட்டது. ஆங்கிலம் இன்றி குழந்தை உயர்கல்வியை தெடர முடியாது. அறிவு சார்ந்த பல துறைகளில் நிபுனத்துவம் பெற முடியாது. ஆங்கிலத்தில் தான் எல்லாத் துறைகள் சம்பந்தமான நூல்களும் கூடுதலாக வெளிவருகின்றன. ஊர், மாவட்டம், நாடுகள் என்ற எல்லைகளைத் தாண்டி செயற்படவும் ஆங்கிலம் அத்தியவசியமாகின்றது. அவ்வாறே கணிதமும் நமது அன்றாட வாழ்வுக்கு நடைமுறைக்கு தேவைப்படுகின்றது. கடைக்காரனுக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையை கணக்கிடுவதிலிருந்து பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வது வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் கணிதம் எல்லாத் துறைகளிலும் தீர்க்கமாக நிறைந்திருக்கின்றது. அவ்வாரே விஞ்ஞானமும் நம்மைச் சுற்றியுள்ள உண்மைகளை விந்தைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றது.

ஆனால் பண்பாடு (Culture) குறித்து குழந்தைகளுக்கு நாம் கற்பிக்கப்போகிறோமா? அவ்வாறு கற்பிப்பதற்கு என்ன வழிமுறைகளை செய்கின்றோம். உணவு, உடை, வாழ்வு முறை, பழக்கவழக்கங்கள் புறக்காரணிகளால் இவற்றில் ஏற்படும் தாக்கங்கள், மாற்றங்கள் குறித்த ஆய்வுதான் பண்பாடு ஆகும். பண்பாடு குறித்து ஒருவர் பயிலும் போது அதில் வரலாறு, அரசியல், நாடகம், இசை, சினமா, தொழிநுட்பம் எனப் பல விடயங்களை அறியமுடிகின்றது. குழந்தைகளுக்கு சினிமாவா? அப்படியென்றால், பிஞ்சு உள்ளத்தில் மோசமான காட்சிகள் எல்லாம் பதிவாகிவிடுமே என்று நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம்.

நான் சினிமா பற்றி குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று சொல்வது சினிமா என்ற கலையின் தோற்றம் வளர்ச்சி, அது உருவாக்கிய மாபெரும் கலைஞர்கள், 21ம் நூற்றாண்டின் அதிவேக தொழிநுட்ப வளர்ச்சியில் சினிமா எடுத்துள்ள பரிமானங்கள், டெலிவிஷன் செயற்கைக் கோள்கள் என்பவற்றின் வரலாற்றையும் அவற்றைக் காண்டுபிடித்த விஞ்ஞானிகள் அவற்றின் உபயோகம் போன்ற பல விஷயங்கள் குழந்தைகளின் வயது நிலைகளுக்கேற்ப விளக்கலாம்.

சினிமா எல்லோருடைய வாழ்வையும் விதிவலக்கின்றி ஆக்கிரமித்துள்ளது. சினிமா பார்த்தால் சீரழிந்து போவீர்கள் என்ற கோஷமெல்லாம் சீக்கிறமே படிந்து போய்விட்டன. சினிமா, இசை, ஓவியம், இலக்கியம், நாடகம் என அனைத்தையும் உட்கொண்ட மாபெரும் கலையாகும். அது வெறும் மகிழ்விப்புக் கலை மட்டுமல்ல. ஒரு பண்பாட்டு பதிவுகையாகவும் ஆவணமாகவும் கொள்ளத்தக்கனவாக ஒரு நூற்றாண்டையும் தாண்டி வளர்ந்து செல்கின்றது. வேறு எந்தக் கலையாலும் சாதிக்க முடியாத அளவுக்கு மக்களின் வாழ்வை ஆட்கொண்டு விட்டது.

ஆனால் பொதுவாக தொழில் நுட்பத்தை (முற்றிலும் தொழில் நுட்பம் சார்ந்த சினிமாவை), விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை நாம் தீமைகளின் பட்டியலிலே சேர்ந்து வந்திருக்கின்றோம். இந்த எதிர் மறைப் பார்வை எம்மைப் பின்னோக்கித் தள்ளுவதில் தான் வெற்றி கண்டுள்ளதே தவிர எம்மை அதன் பாதிப்பிலிருந்து விடுவிக்கவில்லை என்பதை மறந்து விடக் கூடாது. எதிரிகளின் செயற்படுத்தும் அந்தக் கமராவை நாம் செயற்படுத்தாமல் அந்தக் கலையை மாற்றியமைக்க முடியாது. சினிமா முற்றிலும் தொழில் நுட்பம் சார்ந்த கலை. அக்கலை ஆரம்பத்தில் நமது பக்கத்தில் தான் இருந்தது. ராஜசீயவக்ரமய (அரச சாகஸம்) என்ற இலங்கையின் முதல் படத்தை எடுத்தவர் நூர்பாய் என்பவர் தான். சிறுபான்மைச் சமூகத்தவர்கள் தான் ஆரம்பத்தில் இலங்கை சினிமாவுக்கு பங்களித்துள்ளார்கள். எல்பின்ஸன், ஒலிம்பியா எல்லாம் எம்மவர் நடாத்திய பாரசீக நாடகக் கம்பனிகளின் கொட்டகைகளின் பெயர்களாகும்.

ரஷ்ய புரட்சியாளரான லெனின் தனது தீர்க்க தரிசனப் பார்வை “எல்லாக் கலைகளையும் விட சினிமா என்பது மிகவும் முக்கித்துவம் வாய்ந்த கலையாகும்” என்றார். அவர் கூறிய அந்த நூற்றாண்டு கடந்து இன்னும் சினிமா மற்றொல்லாக் கலைகளையும் விட விஞ்சியதாகவே இருப்பது சினிமா சக்தியை உணர்ந்தால் போதுமா? நமது புறத்தை வென்றெடுக்க அரசியல் சினிமா தீங்காகப்படுமானால் அகத்தை வென்றெடுக்க குழந்தை சினிமா தேவையாகும்.

குழந்தைகள் மனித உடலைத் தான்டிய சக்தியுடன் சாகசத்தில் ஈடுபடுவதையே குழந்தைகள் சினிமா என்று கருதுவதும் தவறு. குழந்தைகள் குறித்த திரைப்படங்கள் குழந்தைகள் பார்க்கும் படி எடுக்கப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. பல திரைப் படங்கள் குழந்தைகளுக்கு அபாயகரமானதாகவும் அழிவுகளுமானதாகவும் இருக்கும் கரணிகளாக பெற்றோர்களையே சித்தரிக்கின்றன, பெற்றோர்கள் தர்மம், வன்முறை நீக்கம் செய்து கொள்ளாதவரை உண்மையான சமூகத்தில் நாம் எதிர்பார்க்க முடியாது.

விஸ்வாமித்ரன் என்ற சினிமா ஆய்வாளர் கூறுகின்றார். ஒவ்வொரு குழந்தை திரைப்படமும் முதலில் பெற்றோருக்கானது, வயது முதிர்ந்தவர்களுக்கானது. அவர்களது பார்வையை விசாலப்படுத்துவதற்கானது. அவர்கள் அடைய வேண்டிய புரிதலை அறிவுரைப்பதற்கானது. திரையில் பல்வேறு அகலப்படல்களோடு மூச்சுத்தினறத் தவித்துக் கொண்டிருக்கும் அதே சிறுவர்கள் தான் நிஜத்தில் அவர்களின் இல்லங்களில் வசிக்கும் சாகசம் செய்யத் தெரியாத சிறுவர்கள் என்பதை உணரச் செய்வது அந்தச் சிறுவர்கள் நிகழ் பொம்மைகளைப் பார்க்காமல் சகமனிதனால் பாவிக்கச் சொல்லிக் கற்றுத் தருவது. இத்தனை படிநிலைகளைக் கடந்திருந்தால் தான் குழந்தை சினிமா என்பது சிறுவரை சென்றடையும் சாத்தியம் பெறும் அதுவரை பெரியவர்களுக்கு மட்டுமேயான காட்சிப் பாட நூல்தான் அது.

தனிமனித மாற்றமே சமுகமாற்றத்தின் விதை என்பதை இறைத்தூதரும், அல் குர்ஆனும், சுன்னாவும், வலியுறுத்துகின்றன.
ஏபிஎம்.இத்ரீஸ்

Read Full Post »

கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக பேராசியர் அ.மார்க்ஸ் எழுத் தாளர், ஆய்வாளர், முன்னாள் பௌதீகவியல் பேராசிரியர் -சென்னை மாநிலக் கல்லூரி. மாநில அமைப்பாளர் – மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு.இலங்கையில் இன்றைய சூழலில் நபிகளை
இலங்கை முஸ்லிம்களுக்கும் மாற்றுமத சகோதரர்களுக்கும் அறிமுகமும் புரிந்துணர்வு கொள்ளவும் செய்கின்றன மிகப் பெரும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள் . நேற்றைக்கு முந்திய தினம் காத்தான்குடியில் கலந்துரையாடலில் ஈடுபட்ட பேராசிரியர் நேற்று அட்டாளைச்சேனையில் அதே போன்ற ஒரு நிகழ்விலும் பங்கு கொள்டார்ரகள் .
தமிழ் எழுத்துலக சூழலில் நபியவர்கள் பற்றி பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் அளவுக்கு யாரும் மிக நவீனமாக நபியை முன் நிறுத்தவில்லை .
நபியை நேசிக்க வேண்டும் அவர்கள் மீது ஆயிரமாயிரம் ஸலவாத் சொல்லியும் அல்லது கந்தூரி கொடுத்தாயினும் என்று சொல்கின்ற அலவி மெளலானாக்களோ அல்ல .
நபியை இன்னும் திக்ர் மஜ்லிஸ்களுக்குள்ளும் கந்தூரி நார்சாவாகவும் சுருட்டி வைத்திருப்பவர்கள் இவர்கள் தான் .

நேத்ரா டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நபியவர்களின் ஸீரா நிகழ்ச்சி அலவி மெளலானாவின் தொலை பேசி அழைப்பின் காரணமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டது .
இந்த நிகழ்வானது நபியின் சீராவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிகப் பெரும் அநீதியாகக் கருத வேண்டியது . இந்நிகழ்வில் பங்கு கொண்டவர்களில் நளீமியாவின் சிரேஷ்ட விரிவுரையாளரான ஏபிஎம். இத்ரீஸ் மாத்திரமே முஸ்லிம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நவீன உலகின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் சக்தி சீராவுக்கு மாத்திரமே இருக்கிறது .அதன் மீது நிகழ்த்தப்படுகின்ற மறுவாசிப்பானது அனைத்துக்குமான் தீர்வாக அமைய முடியும் என்பது தான் மாற்றுமத சிந்தனையாளர்கள் இன்று வந்தடைந்திருக்குன்ற நிலையாகும். மிகக் கவலையானது சாணக்கியம் மிக்க அரசியல் தலைவர் எமது நபிகளார் என்று சொல்லிக் கொள்ளும் நம் சமூகம் அவர் மீதான மறுவாசிப்பை ஏன் தடுத்து நிறுத்துகிறது என்பது தான் புரியவில்லை .

நபியை நேசித்தல் என்பதன் அர்த்தம் அவர்கள் மீது ஸலவாத் சொல்வதனோடு சுருங்கிய ஒரு விசயமல்ல என்பதை அலவி மெளலானா போன்ற அரசியல் அபூ நவாஸ்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள் .
இலங்கையின் ஸாஹிராக் கல்லூரியில் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆற்றிய உரையின் தலைப்பு –
நபிகள்: சமூக அரசியல் ஆளுமை என்பதாகும் .இஸ்லாத்தை ஏற்றிராத மாற்றுமத அறிஞர் ஒருவர் இன்றைய சூழலில் நபிகள் எப்படி பார்க்கப்பட வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கும் மனநிலை, கண்ணோட்டப் புள்ளியை அலவி மெளலானா போன்றவர்கள் எப்போது வந்தடையப் போகிறார்கள்.
இஸ்லாம் கூறும் சமூக மாற்றம் எப்போது தான் வரும் …? இத்தகைய தலைவலிகள் நிறைந்த தலைமைகள் ஆக்கிரமித்திருக்கும் நிலமையில் …?.
நபியை நேசித்தல் என்பதன் அர்த்தம் விசாலித்தது . அல்குர்ஆனை தனது பண்பாடுகளாகக் கொண்டிருந்த நபியவர்களை இன்னும் நாம் மிகச் சரியாக எமது அரசியல் , சமூகத் தளங்களில் பயன்படுத்தத் தொடங்கவில்லை .
இந்தப் பின் போக்குத்தனம் மாறவேண்டும் . பதின் நான்கு நூற்றாண்டுகளாக வாழும் கொள்கைக்கு நடைமுறை பாவனைத் தன்மையைக் கொடுத்தவர்கள் எமது நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் .
என்றோ அழிந்து போன கொள்கைக்காக இன்னும் கார்ல் மார்க்ஸும் லெனினும் கொண்டாடப்படுகிறார்கள்.
உயிர் வாழும் கொள்கையைத் தந்து விட்டுப் போன நபி பற்றி நாம் வெறும் வார்த்தைப் புகழ்கள் மட்டும் துதி பாடிப் பாடி இருப்பதன் அர்த்தமென்ன …?
அல்குர்ஆனையை இன்னும் எமது சூழலுக்கு மிகச் சரியாக வாசிப்புச் செய்யவில்லை , இதில் சீராவை மறுவாசிப்புச் செய்வதற்கு மிக நீண்ட அனுபவமும் பக்குவமும் அதை விட மிக முக்கியம் தன் சுயநலம் தாண்டிய சமூகம் சார்ந்த உணர்வும் தேவைப்படுகின்றது.

Read Full Post »

மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கள்ளியங்காடு எனப்படும் முஸ்லிம் கொலனியில் தமிழ் மக்கள் அத்துமீறிக் குடியேற்றப்பட்டுள்ளதையும், அங்கு அமைந்திருந்த மஸ்ஜிதுல் பிர்தௌஸ் பள்ளிவாசலைப் புனரமைப்புச் செய்ய முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதையும் அப்பள்ளிவாசலின் முன்னாள் தலைவரான ஜனாப் துவான் ஆரிப் சராவுதீன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட காணி ஆணையாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

மேற்படி பள்ளிவாசல் எல்லைக்குள் அத்துமீறிக் குடியிருப்பவர்களையும், அங்கு கட்டிடங்கள் அமைக்கப்படுவதையும் உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறும், அதற்கான தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறும் அவர் மாவட்ட அரசாங்க அதிபரையும், காணி ஆணையாளரையும் கோரியுள்ளார்.

தொடர்ந்து படிக்க …
vaarauraikal

Read Full Post »

Read Full Post »

ரமழான் மாதத்தின் நடுப்பத்து தினங்களிலும் நபி (ஸல்) அவர் கள் பள்ளிவாசலிலே தங்கியிருப்பார்கள். இந்த வருடம் நடுப்பத்து தினங்கள் முடிவடைந்த பின்னரும் பத்து நாட்கள் தங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஓர் இரகசியத்தை பாத் திமா (றழி) கூறுகின்றார்; ஜிப்ரீல் ஒவ்வொரு வரு டமும் எனக்குக் குர்ஆனை ஒருமுறை ஓத நான் அவருக்கு ஒருமுறை ஓதிக் காட்டுவேன். இந்த வருடம் அவர் என்னுடன் இரண்டு முறை ஓதியுள் ளார்கள். எனது நேரம் அண்மித்து விட்டது என் பதை என்னால் உணர முடிகின்றது.

ஷவ்வால் மாதம் முடிந்ததுடன் ஹஜ் கிரியைக்காக இம்முறை நபி (ஸல்) அவர்களே தலைமை தாங்கு வார்கள் என்ற செய்தி மதீனா முழு வதும் அறிவிக்கப்பட்டது. மக்கள் மதீனாவை நோக்கி அணி திரண்ட னர்.

மீள்பார்வை

நபியவர்களின் வாழ்வின் இறுதிக் கணங்களின் தொகுப்பு .

Read Full Post »

‘இஸ்லாமிய சமுதாயம் அமை வது எப்படி?’ என்பது சகோதரி மர்யம் ஜமீலா எழுதிய ஒரு நூல். அதனை 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாம் முறையாக மீட்டி வாசித்தேன். அவர் குறிப்பிட்டுள்ள ஒரு கருத்து என் உள்ளத்தில் தைத்தது.

இஸ்லாமிய மறுமலர்ச்சி முஸ்லிம்களின் ஆதரிவின்றி ஏற்பட முடியாது எனவும் முஸ்லிம் பொது மக்கள் ஈமானின் உயர்ந்த பெறுமா னத்தை விளங்கி வாழ கல்விக் கூடங்களும், கலாசாலைகளுமே பொறுப்பேற்க வேண்டுமெனவும் குறித்துக் காட்டும் அவர், கல்வி எவ்வாறு அமைய வேண்டும் என்ப தைப் பின்வருமாறு குறிப்பிடுகின் றார்.

நமது பாடசாலைகள் அனைத்திலும் அல்குர்ஆன் போதிக்கப்பட வேண்டும். ஆனால், பல பாடங்களோடு மற்றொரு பாடமாகவல்ல. அல்குர்ஆனே பிரதான பாடமாக இருத்தல் அவசியம். மற்றப் பாடங் கள் அனைத்துமே குர்ஆனின் திவ் விய கருத்துக்கு சற்றும் முரண்படா திருத்தல் வேண்டும். அதாவது அல்குர்ஆன் சூரியனைப் போல வும் மற்றப் பாடங்கள் அதனைச் சுற்றிச் சுழன்று வருகின்ற கிரகங்க ளைப் போலவும் இருக்கும். ஏனைய பாடங்கள் யாவையும் குர்ஆனின் விளக்கங்களைத் தழுவியே கற் பிக்க வேண்டும். மதக் கல்வி, மதச் சார்பற்ற கல்வி என்ற பேதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும். (பக்கம்: 27-28)

இஃது இஸ்லாமிய ஆட்சி ஒன்று உருவாக்க வேண்டிய கல்வி முறை யின் ஒருவடிவமாக முன்வைக்கப் பட்டுள்ளது. எனினும் இஸ்லா மிய ஆட்சி நிலவாத முஸ்லிம் நாடுகளும், முஸ்லிம்கள் சிறுபான் மையாக வாழும் நாடுகளும் பரீட் சார்த்தமாகவேனும் இந்த வழி முறையை நடைமுறைப்படுத்திப் பார்க்க முடியும்.
வாசகர் வாசிப்புக்காக பரிந்துரைக்கும் கட்டுரை .

http://meelparvai.net/

Read Full Post »