225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 196 பேரை வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்வதற்கென மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் முதற் தடவையாக 22 மாவட்டங்களிலும் நேற்று சுமுகமான வாக்களிப்பு இடம் பெற்றது.
50ற்கும் 55 வீதத்திற்குமிடையில் வாக்களிப்பு இடம் பெற்றது.
அனுராதபுரம் மாவட்டத்தில் 45 வீத வாக்களிப்பும்,
வன்னி மாவட்டத்தில் 33 வீத வாக்களிப்பும்,
யாழ். மாவட்டத்தில் 19 வீத வாக்களிப்பும்
புத்தளம் மாவட்டத்தில் 55 வீதமும்,
நுவரெலியா மாவட்டத்தில் 45 வீதமும்,
மன்னார் மாவட்டத்தில் 55 வீதமும்
பதுளை மாவட்டத்தில் 50 வீதமும்
திருகோணமலை மாவட்டத்தில் 50 வீதமும் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இம்முறை தேர்தலில்
36 அரசியல் கட்சிகளும்
301 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டதுடன்
இவற்றின் சார்பில் 7620 வேட்பாளர்கள் களத்தில் குதித்திருந்தனர்.
ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
நாடளாவிய ரீதியில் 11,875 வாக்களிப்பு நிலையங்கள்.
– thinakaran –
பின்னூட்டமொன்றை இடுக