Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

ரமழான் மாதத்தின் நடுப்பத்து தினங்களிலும் நபி (ஸல்) அவர் கள் பள்ளிவாசலிலே தங்கியிருப்பார்கள். இந்த வருடம் நடுப்பத்து தினங்கள் முடிவடைந்த பின்னரும் பத்து நாட்கள் தங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஓர் இரகசியத்தை பாத் திமா (றழி) கூறுகின்றார்; ஜிப்ரீல் ஒவ்வொரு வரு டமும் எனக்குக் குர்ஆனை ஒருமுறை ஓத நான் அவருக்கு ஒருமுறை ஓதிக் காட்டுவேன். இந்த வருடம் அவர் என்னுடன் இரண்டு முறை ஓதியுள் ளார்கள். எனது நேரம் அண்மித்து விட்டது என் பதை என்னால் உணர முடிகின்றது.

ஷவ்வால் மாதம் முடிந்ததுடன் ஹஜ் கிரியைக்காக இம்முறை நபி (ஸல்) அவர்களே தலைமை தாங்கு வார்கள் என்ற செய்தி மதீனா முழு வதும் அறிவிக்கப்பட்டது. மக்கள் மதீனாவை நோக்கி அணி திரண்ட னர்.

மீள்பார்வை

நபியவர்களின் வாழ்வின் இறுதிக் கணங்களின் தொகுப்பு .

‘இஸ்லாமிய சமுதாயம் அமை வது எப்படி?’ என்பது சகோதரி மர்யம் ஜமீலா எழுதிய ஒரு நூல். அதனை 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாம் முறையாக மீட்டி வாசித்தேன். அவர் குறிப்பிட்டுள்ள ஒரு கருத்து என் உள்ளத்தில் தைத்தது.

இஸ்லாமிய மறுமலர்ச்சி முஸ்லிம்களின் ஆதரிவின்றி ஏற்பட முடியாது எனவும் முஸ்லிம் பொது மக்கள் ஈமானின் உயர்ந்த பெறுமா னத்தை விளங்கி வாழ கல்விக் கூடங்களும், கலாசாலைகளுமே பொறுப்பேற்க வேண்டுமெனவும் குறித்துக் காட்டும் அவர், கல்வி எவ்வாறு அமைய வேண்டும் என்ப தைப் பின்வருமாறு குறிப்பிடுகின் றார்.

நமது பாடசாலைகள் அனைத்திலும் அல்குர்ஆன் போதிக்கப்பட வேண்டும். ஆனால், பல பாடங்களோடு மற்றொரு பாடமாகவல்ல. அல்குர்ஆனே பிரதான பாடமாக இருத்தல் அவசியம். மற்றப் பாடங் கள் அனைத்துமே குர்ஆனின் திவ் விய கருத்துக்கு சற்றும் முரண்படா திருத்தல் வேண்டும். அதாவது அல்குர்ஆன் சூரியனைப் போல வும் மற்றப் பாடங்கள் அதனைச் சுற்றிச் சுழன்று வருகின்ற கிரகங்க ளைப் போலவும் இருக்கும். ஏனைய பாடங்கள் யாவையும் குர்ஆனின் விளக்கங்களைத் தழுவியே கற் பிக்க வேண்டும். மதக் கல்வி, மதச் சார்பற்ற கல்வி என்ற பேதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும். (பக்கம்: 27-28)

இஃது இஸ்லாமிய ஆட்சி ஒன்று உருவாக்க வேண்டிய கல்வி முறை யின் ஒருவடிவமாக முன்வைக்கப் பட்டுள்ளது. எனினும் இஸ்லா மிய ஆட்சி நிலவாத முஸ்லிம் நாடுகளும், முஸ்லிம்கள் சிறுபான் மையாக வாழும் நாடுகளும் பரீட் சார்த்தமாகவேனும் இந்த வழி முறையை நடைமுறைப்படுத்திப் பார்க்க முடியும்.
வாசகர் வாசிப்புக்காக பரிந்துரைக்கும் கட்டுரை .

http://meelparvai.net/

இந்தச் சின்ன வயதிலேயே ஹிஸ்புல்லாஹ்வுக்கு அல்லாஹ் இப்படியான பதவிகளை அவனுடைய அருளால் வழங்கி உதவியும் செய்து வருகிறான் . பட்டம் , பதவி , பொருளாதாரம் , கல்வி இப்படி எத்தனையோ அந்தஸ்துகளை அல்லாஹ் அவன் நாடியவர்களுக்குத் தான் கொடுப்பான் என்பது தானே நமது அடிப்படை நம்பிக்கை . ஒருவனுக்கு கிடைத்த நிஹ்மத்தை அவன் பெற்றுக் கொண்டு அதைத் துஸ்பிரயோகம் செய்து அல்லது அவனுக்குக் கிடைத்த பட்டம் பதவிகளை வைத்துக் கொண்டு சமூகத்திற்கு பயன் பெறச் செய்யாமல் தனது சுயநலத்திற்குப் பயன்படுத்தினால்தான் நாம் அவன் மீது கோபப்பட முடியும் , ஆத்திரப்பட முடியும் . மாறாத கிடைத்த பட்டம் , பதவிகள் , அதிகாரம் , அந்தஸ்த்துகளையும் தனது மக்களுக்காகவும் மண்ணிற்காகவும் முழுமையாக பயன்பெறச் செய்யும் போது அப்படியான ஒருவரை முடிந்தளவு தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டுமே தவிர மட்டந்தட்டி , மழுங்கடித்து வேடிக்கை பார்ப்பது எவ்வளவு கேவலமான செயல் .

சகோதரர் ஹிஸ்புல்லாஹ் இளம் வயதிலேயே தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து இந்த
சமூகத்திற்காக பணியாற்றத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை இந்த நிமிடம் வரை அவருக்கெதிராக நீங்களும் உங்கள் நண்பர்களும் செயற்பட்டு வருகின்றீர்கள் . அதற்கு என்ன காரணம் என இன்று வரை எங்களால் அறிய முடியவில்லை . ஆரம்ப காலத்தில் உங்கள் தலைமையில் இயங்கிய ISA என்ற அமைப்பின் மூலம் வாரத்திற்கொரு பிரசுரம் வெளியிடுவீர்கள் . அந்தப் பிரசுங்கள் பிரசுரம் சிந்தனை 01 , சிந்தனை 02 , சிந்தனை 03 என தொடராக ஒவ்வொரு ஜும்ஆ தினத்தனற்றும் வெளிவந்து கொண்டிருந்தது . அதை ஜும்ஆ பள்ளிகளின் வாயில்கலே நீங்களும் உங்கள் சகாக்களும் நின்று கொண்டு விநியோகித்தீர்கள் . ஒவ்வொரு பிரசுரமும் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வை வசை பாடும் பிரசுரமாகவேயிருந்தது . அதை பார்த்துப் பார்த்து , படித்துப் படித்து , மக்களுக்கும் புளிப்புத் தட்டி மரத்துப் போய் விட்டது . ஆனால் ஹிஸ்புல்லாஹ்வின் செல்வாக்கையோ மக்களின் ஆதரவையோ ஒரு துளி கூட மாற்ற முடியாமல் போய்விட்டது .

அதன்பின் உங்கள் பிரசுரம் பரிணாம வளர்ச்சி கண்டு புதிய நாளை என்று ஒரு பத்திரிகையை வெளியிடத் தொடங்கினீர்கள் .

சரி , உங்களது அரசியல் நடவடிக்கைகளுக்கு வருவோம் . கடந்த நகர சபைத் தேர்தல் வரை நீங்களும் உங்கள் சகாக்களும் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கே உங்கள் வாக்குகளை அளித்து வந்தீர்கள் . குறிப்பாக சகோதர பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கே உங்கள் பொன்னான வாக்குகள் போய்ச் சேரும் . கடந்த நகர சபைத் தேர்தலில் தான் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான உங்களது பனிப் போர் பகிரங்கப் போராக மாறியது . உங்களது அரசியல் அமைப்பான PMGG மூலம் நகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெளியாகிய 09 உறுப்பினர்களிலே ஒரே ஒரு உறுப்பினரை மட்டும் பெற்றுக் கொண்டு இப்போது நாங்களும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு சரி நிகர் தான் என்ற பெருமிதத்தோடு அவரை மீண்டும் தொடராக வன்னையாக எதிர்க்கவும் விமர்சிக்கவும் தொடங்கினீர்கள் .

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஸ்தாபகராகிய அன்புக்குரிய அப்துர்ரஹ்மான் அவர்களே !
நமது காத்தான்குடியின் கடந்தகால , சமகால அரசியல் நிலவரங்களையும் அபிவிருத்திப் பணிகளையும் பற்றி ஒரு சில நிமிட நேரம் உங்களுடன் மனம் திறந்து பேசுகிறோம் .

கடந்தகால 1970 ஆண்டிற்குப் பிற்பட்ட காலத்திலிருந்து இதனை ஆராய்வோம் . 1970ம் ஆண்டு முதல் 1977 ஆண்டு வரையான ஏழு ஆண்டுகள் நமது காத்தான்குடி ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாமல் அரசியல் அனாதையாக இருந்த காலகட்டம் … அக்கால கட்டத்தில் மட்டக்களப்பு தொகுதியாக அதிலும் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்து வந்தது . வழமையாக ஒரு தமிழரும் ஒரு முஸ்லிமும் தெரிவு செய்யப்பட்டு வந்த காலம் . முஸ்லிம்களுக்குள் ஏற்பட்ட பலமான போட்டியின் காரணமாக வாக்குகள் பிரிக்கப்பட்டு சிதறுண்டு போனதால் இரண்டு பாராளுமன்ற ஆசனங்களும் ( 1970 முதல் 1977 வரையான காலத்தில் ) தமிழர்களின் கைக்குப் போய்விட்டது .ஒருவர் திரு . செ .இராசதுரை மற்றவர் திரு.ராஜன் செல்வ நாயகம். இருவரும் மட்டக்களப்புத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக அஷ்ஷஹீத் அஹமது லெப்பை ஹாஜியாரின் தலைமையில் இயங்கிய உள்ளூர் தலைவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து தங்களால் முடிந்தளவு இவ்வூரீன் நலங்களை கவனித்து வந்தார்கள் . அதன்பின் நடைபெற்ற 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் காத்தான்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹூம் டாக்டர் பரீட் மீரா லெப்பை அவர்கள் பிரதியமைச்சராகவும் இருந்து தங்களால் முடிந்த சேவைச் செய்து வந்தார்கள் . இக்காலகட்டங்கள் இந்த இலங்கை நாடும் இலங்கை நாட்டின் எல்லா மாகாணங்களும் மாவட்டங்களும் அமைதியாக நிம்மதியாக இருந்த காலகட்டம் .
அதன்பின் 1983 ஜூலை கலவரத்தின் பின்புதான் முழு இலங்கையிலும் குறிப்பாக வட , கிழக்கில் இனரீதியான போராட்டங்களும் வன்முறைகளும் கண்ணிவெடிகளும் குண்டு வெடிப்புகளும் துப்பாக்கிச் சத்தங்களும் தொடர்ந்த நிலையில் 1985 ஏப்ரலில் முஸ்லிம் தமிழ்க் கலவரமாக மாறி மட்டக்களப்பு மாவட்டம் பூராவும் பரவி அதிலும் காத்தான்குடி மண் தான் அதிகமான பேரிழப்பைச் சந்தித்தது . இலங்கையிலேயே மிகப்பெரிய வங்கிக் கொள்ளையும் இவ்வூரில் தான் பயங்கரவாதிகள் நடத்தினார்கள் .
கோடிக்கணக்கான ரூபா பெருமதியான நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டு பல வர்த்தக நிலையங்கள் உடைத்தெறித்தும் கொள்ளையிடப்பட்டும் தமிழ்ப் பிரதேசத்திலிருந்த நமது வர்த்தக நிலையங்களெல்லாம் கொள்ளையிடபட்டு இரவோடு இரவாக உடுத்த உடையுடன் உயிர் தப்பி ஓடிவந்த காட்சிகள் நமதூர் தனவந்தர்களின் கடைகளுக்கும் வீடுகளுக்கும் சொத்துகளுக்கும் கப்பம் கேட்ட கடிதங்கள் , அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள் . இப்படி பயங்கர ஆயுதம் தரித்த ஆயுதபாணிகளான பல தமிழ் பயங்கரவாத இயக்கங்கள் இந்த ஊரைச் சூறையாடி துவம்சம் செய்து வந்தவேளையில் தான் 1989 ம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்தது இந்தத் தேர்தலிலே போட்டியிட்டு பாராளுமன்றம் செல்ல யாருமே முன்வரவில்லை . காரணம் விடுதலைப் புலிகளாலும் ஏனைய ஆயுதக்குழுக்களாலும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை .எச்சரிக்கை என்னவென்றால் யாராவது இலங்கையின் அரசின் தேர்தலிலே பங்கெடுத்தால் , வேட்பாளராகப் போட்டியிட்டால் ‘ மரண தண்டனை “ தேடிச் தேடிச் சுட்டுக்கொல்வோம் என்ற எச்சரிக்கைதான் .

அந்த நேரத்தில் தான் இந்த மண்ணில் பிறந்த ஒரு சிறுபிள்ளை யாருமே நினைத்துப் பார்க்க , வாய்திறந்து பேச நடு நடுங்கிய காலகட்டத்தில் வீறிட்டு எழுந்து வந்தான் … நமது மண்னை , நமது உரிமையை , நமது உடமையை , நமது தன்மானத்தை காக்க அல்லாஹ்வின் உதவியால் எதற்கும் அஞ்சாமல் நான் வருகிறேன் என அஞ்சாத சிங்கமாய் நெஞ்சை நிமிர்த்தி வெளிப்படுகிறான் “ ஹிஸ்புல்லாஹ் “ என்ற வீர இளைஞன் . இந்த ஊர்மக்களெல்லாம் ஒரு கணம் வியந்து பார்க்கிறார்கள் . மறுகணம் நோன்பு நோற்று , அல்லாஹ்விடம் துஆக் கேட்டு , ஆசீர்வதித்து தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்த அனுப்புகிறார்கள் . புலிகளின் மரண தண்டனை விதித்த மரண ஓலை ஒரு கையில் தேர்தலுக்கான வேட்மனு மறு கையில் , அல்லாஹ்வின் துணையோடு தேர்தலிலே போட்டியிட்டு இந்த ஊர் மக்களின் 100 % ஆதரவோடு ( சும்மா ஆதரவில்லை ) நோன்பிருந்து , துஆக் கேட்டு , நெஞ்சம் நிறைந்த பூரிப்போடும் , வாஞ்சையோடும் வாக்களித்து சிறு வயதிலே எந்த அச்சமில்லாத அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சியவனான ஒரு பாராளுமன்றப் பிரதி நிதியாகி இந்த மண்ணில் இருப்புக்கும் , இந்த மண்ணில் வாழும் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கும் தன்னாலான முழு சக்தியையும் பயன்படுத்தி சேவையாற்றி வரும் போதுதான் 1990களில் ஏற்பட்ட எமது மண்ணின் அதியுச்ச பயங்கரவாத ஆயுத வெறியர்களின் இன அழிப்புப் போராட்டமும் இந்த மண்ணை விட்டே நம்மைத் துரத்தும் பயங்கரமான நடவடிக்கையும் ஆரம்பமாகின .
அந்த வேளையிலும் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் நெஞ்சுறுதியோடும் , விவேகத்தோடும் , இந்த மண்ணையும் இந்த மண்ணைச் சுற்றிய அயல் முஸ்லிம் கிராமங்களின் இருப்பையும் , பாதுகாப்பையும் உறுதிப்படுத்திப் பாதுகாக்க அதிகாரத்தில் இருந்த அரசினதும் அமைச்சர்களினதும் பாதுகாப்புப் படைகளினதும் பாதுகாப்பையும் , சகல விதமான நிவாரணங்களையும் , உதவிகளையும் தனது பதவிகளையும் செல்வாக்கையும் பயன்படுத்திப் பெற்றுக் கொடுத்து , இம்மண்ணின் பாதுகாப்பையும் , இருப்பையும் உறுதிப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை இம்மண்ணில் பிறந்த அத்தனை மக்களும் மறந்துவிட மாட்டார்கள் .

தொடரும் …..

இத்துண்டுப் பிரசுரம் கடந்த வெள்ளிக் கிழமைக்கு முந்திய வெள்ளிக் கிழமை ( 12/02/2010 ) முதலாம் குறிச்சி ஜும்மாஆப் பள்ளிவாயலில் வைத்து விநியோகிக்கப்பட்டது .

சமீப காலமாக பொதுமக்ள் மத்தியில் பரவிவரும் காதலர் தினம் பற்றி அறிஞர் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்களிடம் கீழ்க்கண்டவாறு வினவப்பட்டது:

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக…

சமீப காலமாக காதலர் தினம் கொண்டாடி மகிழ்வது பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக மாணவிகள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகின்றது. காலணி முதல் தலையணி வரை முற்றிலும் சிகப்பு நிறத்தால் ஆன ஆடைகளை அணிந்து, இந்நிகழ்ச்சியை ஒரு பண்டிகையாக கொண்டாடும் கிருத்துவர்கள், தங்களுக்கிடையே சிகப்பு நிற மலர் கொத்துக்களையும் பறிமாறிக் கொள்கின்றனர். இது போன்ற நிகழ்ச்சிகளை முஸ்லிம்கள் கொண்டாடுவது, அல்லது இது போன்ற நிகழச்சிகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்வது பற்றி முஸ்லிம்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை…!

அறிஞர் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்கள் அளித்த விளக்கம்:

உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக…

காதலர் தினம் என்ற நிகழ்ச்சியை கொண்டாடுவதற்கோ அல்லது அதுபோண்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கோ கீழக்கண்ட காரணங்களால் இஸ்லாத்தில் ஒருபோதும் அனுமதியில்லை.
1. காதலர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ஒரு (பித்அத்) புதினமாகும்.

2. காதலர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்காத தவறான வழிகளில் ஒருவாகும் காதல் மற்றும் தீய பழக்கங்க ஊக்குவிக்கின்றது.

3.இதுபோன்ற நிகழச்சிகள் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மனதில் தவறான எண்ணங்களை உருவாக்குவதோடு, நபிவழிக்கு முற்றிலும் முரணாணதாகும்.

காதலர் தினம் போன்ற நாட்களில் உணவோ, உடையோ அல்லது குடிபானங்களோ எதுவாக இருந்தாலும் இஸ்லாம் அனுமதித்த முறைக்கு மாற்றமாக இருக்குமாயின் அதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து முற்றிலும் விலகி இருப்பதே உண்மையான முஃமினுக்கு உகந்ததாகும்.

நெறிமுறையின்றி எல்லாவற்றையும் பின்பற்றுவோம் என்ற நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு மத்தியில், நெறியுடன் வாழும் முறைகளை மற்றுமே பின்பற்றுவோம் என்ற கொள்கையை உறுதியோடு செயல்படுத்தும் இஸ்லாமிய மார்க்கத்தை சார்ந்தவராக இருப்பதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் பெருமிதம் கொள்ள வேண்டும். தெரிந்தோ அல்லது தெறியாமலோ இருக்கின்ற இதுபோன்ற (பித்அத்) புதினமான காரியங்களில் ஈடுபடுவதில் இருந்தும் நம்மை காப்பாற்றி, நேர்வழி காட்ட போதுமானவன் வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனே.

வெளியீடு : அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம்
Thanks to : Islamic Call & Guidence Centre – Al Khobar,Saudi Arabia Tel. +96638655557

காதல் எனும் சீர்கேட்டில் இன்றைக்கு அதிகம் மூழ்கிப் போயிருப்பது மாணவர்களே!
இளைஞர்களை இந்த காதல் எனம் சீர்கேட்டில் இருந்து காப்பாற்றுவதற்காக நமது
இணையதளத்தில் காதலர் தினம் பற்றி வெளியிடப்படுள்ளது ”உயிர் கொல்லி காதலுக்கு
கொண்டாட ஒரு தினமா?” கட்டுரையை வைத்து பின்வரும் நோட்டிசை தயாரித்து வெளியிட்டு
வருகின்றனர்.
*பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம்*
பிரப்வரி 14 : காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு
கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும்
முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில்
புற்று நோய்போல் பரவி வருகின்றது. மக்களின் உணர்வு களை தூண்டி அதை பணமாக்க
துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று
இந்தியாவில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டது
கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக
உருவானது தான் இந்த வேலன்டைன்ஸ் தினம் (Valentine day) பிப்ரவரி 14 ஆம் தேதி
கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயமாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர்
தினமாக அறிவித்தது.
எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும்
இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.
இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை (காமக்களியாட்டத்தை) ஊக்கப் படுத்தும் வண்ணம்
தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி சமுதாயத்தை சீரழித்து கொண்டு
இருக்கின்றன. மீடியாக்கள் காதல் என்ற பெயரில் காமக் களியாட்டங்களில் ஈடுபடுவதை
சாதாரணமான விஷயமாக்கிவிட்டது.
கேள் ஃபிரண்ட் இல்லாதவர்களை கோமாளிகள் போல் சித்தரித்து, கேள் ஃபிரண்ட் இல்லாத
நல்ல ஒழுக்கம் உள்ள இளைஞர்களை ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ
வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு காதலை கவுரமான விஷயமாக மாற்றி விட்டது.
உங்கள் காதலிக்கு, காதலனுக்கு SMS அனுப்புங்கள் அதை டிவியில் போடுகின்றோம் விலை
வெறும் ரூ.3, ரூ.6 தான் என இளஞர்களின் உணர்வுகளை காசாக்கி கொண்டிருக்கின்றனர்
மீடியாக்கள். இதை அறியாத அப்பாவி இளைஞர்களும் இளம் பெண்களும், இந்த காதல் எனும்
சமூக சீர்கேட்டில் மூழ்கி வருகின்றனர்.
காதலிப்போர் கவனத்திற்க்கு :
காதல் என்பது ஒரு மாயை, இளம்வயதியில் வரும் உணர்வுகளின் வெளிப்பாடு, இதை நாம்
கவனமாக கட்டுப்பாடுடன் வைத்து கற்பை காத்து கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில்
கொஞ்சம் கவனம் தவறினாலும் கற்பை இழந்து சமுதாயத்தில் இழிபிறவிகளாக நடமாட
வேண்டியது தான்.
பெரும்பாலான காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை, திருமணத்தில் முடிந்த
பெரும்பாலான காதல் பிரச்சனையில் தான் முடிந்துள்ளது. காதலிக்கும் போது நம்முடைய
நற்குணங்கள், மட்டுமே வெளிப்படும், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள்,
ஆனால் திருமணத்திற்க்கு பிறகு நிஜவாழ்க்கைக்கு வந்த பிறகு குடும்பத் தின்
கஷ்டம்தான் கண் முன்னே இருக்குமே தவிர கற்பனை காதல் அல்ல,
ஆசை வார்தைகளை மட்டுமே கண்ட காதல் வாழ்க்கை முடிந்து ஒருவரை ஒருவர்
திட்டிக்கொள்ளும் வார்த்தை தான் மிஞ்சி இருக்கும். ஏன் இவளை திருமணம் செய்தோம்
நம் தாய் தந்தையர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாம் என எண்ணம்
வரும் பின்பு வாழ்க்கை கசந்துவிடும், பெற்றோர்களின் ஆதரவு இல்லாததால் , தன்னை
காதலித்து திருமணம் செய்து கொண்டவன் என்ன தவறு செய்தாலும் பெரியவர்களிடம்
முறையிட முடியாமல் போய்விடும், (காதலன் ) கணவன் செய்யும் எல்லா கொடுமைகளையும்
சகித்துகொண்டும் வாழ வேண்டிய அவல நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். இன்று
காதலுக்கு துணை நிற்க்கின்றேன் என்று சொல்லும் நண்பர்கள் எல்லாம் நாளை காணமல்
போய்விடுவார்கள், வாழ்வில் கஷ்டம் மட்டுமே மிஞ்சி இருக்கும்.
சினிமாக்கள் தான் உங்களுக்கு தவறான வழிகாட்டுகின்றன, சினிமாவில் பார்ப்பது போல்
இல்லை காதல், காதல் எங்கு போய் முடியும் என்றால், ஒன்று கற்பை இழந்து இழி
பிறவிகளாக சமுதாயத்தில் நடமாடுவது, அல்லது காதலனை திருமணம் செய்தாலும் அவன்
செய்யும் அனைத்து கொடுமைகளையும் சகித்து கொண்டு உதவ ஆளில்லா மல் கஷ்ட்டப்பட்டு
கொண்டே வாழ்வது.
காதல் செய்வதால் ஏற்படும் இழப்புகள் :
இளம் பெண்களே! பெரும்பாலும் காதலிக்கும் இளைஞர்கள் தங்களுடைய உணர்வுகளுக்கு
தீனிபோடவே பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி காதல் என்னும் மாய வலை யில் விழ வைத்து
தங்கள் இச்சைகளை தீர்த்துகொள்கின்றனர். இது அறியாத அப்பாவி இளம் பெண்கள்
ஆண்களின் ஆசை வார்த்தையில் மயங்கி தங்களுடைய கற்பை தொலைத்து மானம் இழந்து,
மரியாதை இழந்து பெற்றோர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திகொடுத்து சமுதாயத்தின் இழி
சொல்லுக்கும் பழி சொல்லுக்கும் ஆழாகின்றனர். நீங்கள் காதலிப்பதாலோ, காதல் என்ற
போர்வையில் ஆண்களுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதினாலோ ஆண்களுக்கு எந்த
நஷ்ட்டமும் இல்லை, அனைத்து நஷ்டமும், கஷ்டமும் பெண்களுக்குதான்.
காதல் காதல் என்று உங்களுடன் சேர்ந்து எல்லா தவறுகளும் செய்துவிட்டு அவனால்
சமுதாயத்தில் நன்றாக வாழமுடிகின்றது, ஆனால் பெண்களாகிய உங்கள் நிலையை எண்ணி
பாருங்கள், திருமணம் கடினமாகின்றது, பிறகு நமக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு இந்த
விஷயம் தெரிந்தால் நம்மை மதிப்பார்களா? சிந்தித்து பாருங்கள் இளம் பெண்களே!
ஆண்கள் தன் இச்சையை தீர்த்துகொள்ள உங்களை ஏமாற்றுகின்றான், நம்பாதீர்கள்,
பெற்றோர் சொல்லும் அறிவுறையை கேட்டு நல்ல ஒழுக்கமுள்ள, ஆற்றல் உள்ள பெண்களாக
சமுதாயத்தில் கண்ணியத்துடன் வலம் வாருங்கள், உங்களை பெற்று வளர்த்த
பெற்றோர்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை மதித்து
நடக்கும் படி சமுதாயத்தில் மதிப்புள்ள மங்கையாக வாழுங்கள். உணர்வுகளை
கட்டுபடுத்தி கட்டுபாட்டுடன் இருந்தால் கண்ணியமாக வாழலாம்
படிக்கும் இளைஞர்களே!
காதலிக்காக ஒதுக்கும் நேரத்தை நம் படிப்பிற்க்காக ஒதுக்கினால் அரியர் இல்லாமல்
(பெயில் ஆகாமல்) தெர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் அமரலாம். நம்மை
கஷ்ட்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை காப்பாற்றலாம், தன் பிள்ளை தன்னை
வயதான காலத்தில் காப்பாற்றுவான் என கணவுகளுடன் உங்களை படிக்கவைக்கும்
பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் காதல் என்ற பெயரில் உங்கள் நேரத்தையும்
வாழ்கையையும் வீணடிப்பது.
இளைஞர்களே!
உங்களுடைய பொருளாதாரத்தை வீணாக்கும் கருவியாகத்தான் காதலிகள் இருக்கின்றனர்.
காதலியின் சின்ன சிரிப்பிற்க்காக உங்கள் பெற்றோர்கள் கஷ்ட்டப்பட்டு
சம்பாதிக்கும் பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டுமா? சிந்தித்து பாருங்கள்.
சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண்
தன்னை விரும்ப வில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு
பெண்ணை விரும்பி அந்த பெண் உங்களை புறக்கணித்தால் நீங்கள் மிகுந்த மன
உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும்,
வாழ்வில் சந்தோஷம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு , கல்வி
அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே!
இது உங்களுக்கு தேவையா? எனவே காதலிக்க வேண்டும் என கனவில் கூட நினைக்காதீர்கள்.
வாழ்கை இழந்து மன நோயாளியாகிவிடுவோம்.
காதலும் (காம களிய்யாட்டங்களும்) விபச்சாரம்தான்
காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிக்க
இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம்
. காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்திலும்
பிள்ளைகளிடத்திலும் இருந்திருந்தால் இந்த தீமைகளில் இருந்து விலகி இருக்க
முடியும்.
இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன்
அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும்
விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு
இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது”
(நூல்: புகாரி 6243)
தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும்
விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக்
களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணம்
முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம்
முடித்துக் கொள்ள வேண்டும்இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.
மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த
காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால்
மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை
டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை
பார்க்கின்றனர்.விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க
யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து
கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.
பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள்
வாங்கிக் கொடுப்பதாகும்.செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக்
கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக்
கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.செல்போன்களில் நடமாடும்
பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு
சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த
ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள்
அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன்
சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று,
பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத்
தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப்
பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன. வாலிப வயது ஆண், பெண் இருபாலரும்
செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.
இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர்
குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம்
பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல்
சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.
இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிருக்க இதையெல்லம் மிஞ்சும்
அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.தன்னை
பெற்றத் தாய் வளர்த்த தந்தை தன்னை நேசிக்கவில்லை என எந்த ஒரு இளைஞனும் தற்கொலை
செய்து கொண்டுள்ளானா? ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை
நிறை கேள்விபட்டிருப்போம். மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள்
அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை
பெற்றோர்களுக்கு ஏற்படுமா? விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி
தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.
ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை
பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? தன் காதலியை காதலித்தவனை
ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை
கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.
இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி
கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு
தெரியும்.
இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும்
இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும்
கொண்டாடப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை
இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய
அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால்
தான்.
இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா?’
என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சுகொடுத்துடுவேன்” என்று
தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள்
காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அவ்வளவு ஏன்?,
ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும்
காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.
அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது
என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்!
டிசம்பர் 1 ஆம் தேதிக்கு காரணமே பிப்ரவரி 14 ஆம் தேதி தான்
எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோயை ஒழிக்க டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக
அனுசரிக்கப்படுகின்றது. எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் காமக்
களியாட்டங்களை (காதலை) அங்கீகரிக்கும் இந்த காதலர் (கற்பு கொள்ளையர் ) தினமும்
உலக எயிட்ஸ் தினமும் ஒன்றே. எயிட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவ இது போன்ற
காம களியாட்டங்களை அறங்கேற்றும் விழாகள் முதல் நிலை காரணிகளாய் இருக்கின்றன.
எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு எயிட்ஸ் நோய் வர காரணமாய்
இருக்கும் இந்த காதலுக்கு (காம களியாட்டத்திற்க்கு) எதிராகவும் விழிப்புணர்வு
பிரச்சாரம் செய்ய வேண்டும்.
சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்
என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14-ஐ புறக்கணித்தால் உயிர்
பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே
கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

bbc.co.uk

இலங்கை, இறுதிப்போர்.

February 7, 2010 – 12:01 am
ஒருபோர் என்பது உண்மையில் நம்பிக்கைகளுக்கும் யதார்த்தத்துக்கும் நடுவே நடக்கும் மோதல்தான் என்று சிலசமயம் சொல்லத்தோன்றுகிறது. இந்த எண்ணம் எனக்கு 1962 ஆம் ஆண்டில் நடந்த சீன இந்தியப் போர் குறித்து பிரிகேடியர் ஜான் தல்வி [Brigadier John Dalvi] எழுதிய ‘ஹிமாலயன் பிளண்டர்’ [ Himalayan Blunder] என்ற நூலை இருபதுவருடங்கள் முன்பு விழிபிதுங்க வாசித்தபோது உருவாகியது.

jeyamohan.in

monday, February 8, 2010

தேர்தல் தெருக்கூத்துக்கள் யாவும் முடிந்துவிட்டது மீண்டும் அடுத்த தேர்தலுக்கான சமிஞ்சைகள் வெளிவரத்தொடங்கிவிட்டது தமிழ்கட்சிகளின் தலைவர்கள் தமது வெற்றிக்காக வியுகங்களை நெறிபடுத்த தொடங்கிவிட்டார்கள் யாரும் தமிழ்ர்களின் ஐக்கியத்தைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை கூட்டமைப்பும், ஈபிடிபியும் தனித்துபோட்டியிடப் போவதாக அறிவித்துள்ளர்கள் ஏனைய தமிழ்கட்சிகளின் நிலைப்பாடுகளை இன்னும் சில நாட்களில் எதிர்பார்க்கலாம்

30 ஆண்டுகால கோர யுத்தத்தின் பிடியிலிருந்து நாடு முழுமையாக மீட்கப்பட்டிருக்கும் இவ்வேளயில், மக்கள் வாக்குப் பலத்தைப் பிரயோகிக்கும் மற்றுமொரு சந்தர்ப்பம் தற்போது கிடைத்திருக்கிறது. பல ஜனாதிபதிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த போதிலும் அவர்களால் பயங்கரவாதத்திற்கெதிராக ஆக்கபூர்வமாக எதையும் செய்ய முடியாதிருந்தது. புலிகளுக்கெதிராக யுத்தம் செய்த போதிலும் சர்வதேச அழுத்தம் காரணமாக அவற்றை இடைநிறுத்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டன.
thenee

மகிந்த ராஜபக்ஷ (117 Votes)
சரத் பொன்சேகா (548 Votes)
கருத்து கூற முடியாது (48 Votes)

virakesari.lk

சரத் பொன்சேகாவின் ‘நம்பிக்கைக்குரிய மாற்றங்கள்’ என்ற கோட்பாட்டை பின்பற்றி னால் நம்பமுடியாத அளவுக்கு பாதகமான நிகழ்வுகள் பல இந்த நாட்டில் நிகழும் என்று சுற்றாடல், இயற்கை வள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.மக்கள் இவற்றை நம்பினால் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தான் நாட்டின் கடைசி ஜனநாயகத் தேர்தலாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஜாதிக ஹெல உறுமயவின் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பில் இடம்பெற்றது.

thinakaran.lk

வெறுமனே தேர்தல் பற்றிப் பேசிப் பேசியே இந்த நாட்கள் அர்த்தங்கள் ஏதுமின்றி கழிந்து கொண்டிருக்கின்றன. எம் காலத்தின் பெரும் நம்பிக்கையாக நாம் கொள்ளும் எமது குழந்தைகளேனும்
ஒழுங்காக வளர உதவுவோம்.
ஜெயமோகனின் இணையத்தில் இருந்து ஒரு பாசமுள்ள படித்த இளம் தந்தையின் கேள்வியும் அதற்காக ஜெ சொன்ன
பதிலையும் இங்கு பிரசுரிக்கிறோம். – எமது வார்த்தை –

அன்புள்ள ஜெ,

மிகப் பெரிய வாசிப்பு பின்புலம் சிந்தனைப் பரப்பும் உள்ள உங்களிடம் இளம் தகப்பனாகக் கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்.
தங்கள் குழந்தைகளுக்கு அவையத்து முந்தியிருப்பச் செய்யும் நன்றியை நீங்களும் ஆற்றுகிறீர்களா ? எனில், அவர்கள் முந்தியிருக்க வேண்டும் என்று நீங்கள் நம்பும், விரும்பும் ’அவை’ எது ?
அவர்கள் வளர்ந்து தற்சார்புள்ள மனிதர்களான பின் அவர்களிடமிருந்து உங்கள் எதிர்பார்ப்பு என்ன ?
பல்லாயிரம் தந்தையர் மனதில் இக்கேள்விகள் இருக்கக்கூடும். தாங்கள் பதிலளிக்க இயலுமாயின் மிக மகிழ்வேன்.

நன்றி.
அன்புடன்,
மதி

அன்புள்ள மதி,

பொதுவாக இம்மாதிரி விஷயங்களில் இலட்சியவாதக் கருத்துக்களை விட நடைமுறைசார்ந்த கருத்துக்களையே நான் வைத்துக்கொள்ள விரும்புவேன். ஆனால் நடைமுறைவெறி இருக்காது. வேண்டுமென்றால் ‘நடைமுறைஇலட்சியவாதம்’ என்று சொல்லலாம்.

நான் புரிந்துகொண்ட சில விஷயங்கள் உண்டு. அதில்
முதலாவது குழந்தைகளை நாம் ‘வளர்க்க’ முடியாது. அவை வளர்கின்றன. அவற்றுக்கு சூழல் அளிக்கும் பலநூறு பாதிப்புகளில் ஒன்று மட்டுமே நாம். கொஞ்சம் பெரிய, கொஞ்சம் தீவிரமான பாதிப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். அந்தப்பாதிப்புகளை வாங்கி வளரும் அவன் ஆளுமையின் விதை அவனுக்குள் பிறவியிலேயே உள்ளது.

ஆகவே குழந்தைகளை நாம் நம் விருப்பப்படி வளர்க்க முடியும் என்பது பெரிய மடமை. அவர்கள் நன்றாக வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி அதில் நம் பங்களிப்பு ஒரு சிறு பகுதிதான். அதற்கான பொறுப்பையோ பாராட்டையோ நாம் ஏற்றுக்கொள்வது அபத்தமானது.

ஆக, நாம் அவர்களை எங்கும் ‘முந்தியிருக்க’ச் செய்ய முடியாது. அவர்கள் முந்துவது அவர்களிடம், அவர்களை உருவாக்கும் பலநூறு சக்திகளிடம், அவர்கள் எதிர்கொள்ளும் பலநூறு விசைகளிடம் உள்ளது.

நாம் செய்யக்கூடுவது நாம் அளிக்கும் சூழல் சிறப்பாக இருப்பதாகக் கவனித்துக்கொள்ளலாம் என்பது மட்டுமே. அந்தப்பொறுப்பு மட்டுமே நமக்கு உள்ளது. அதில் நான் செய்வதென்ன என்று கேட்டால் என்னால் சில சொல்ல முடியும்.

ஒன்று, நான் அறிவியக்கத்தை நம்பக்கூடியவன். ஆகவே என்னுடைய நம்பிக்கைகளை அவர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். என்னுடைய வாசிப்பையும் சிந்தனைகளையும் அவர்களுக்கு அளிக்கிறேன். அவர்களை ஒருவகையில் என் மாணவர்களாகவே நினைக்கிறேன்.

இரண்டு, சாத்தியமான உற்சாகமான சூழலை வீட்டில் அவர்களுக்கு அளிக்கிறேன். மகிழ்ச்சியான பெற்றோர் அளவுக்கு குழந்தை விரும்பும் பிறிதில்லை. ஆகவே குடும்பத்தில் மனக்கசப்போ பூசலோ நிலவ விடுவதே இல்லை.

மூன்று, ஒவ்வொருநாளும் அவர்களிடம் நேரம்செலவழிக்கிறேன். அப்போது வேடிக்கையும் சிரிப்பும் பேசும் பகிர்தலுமாகவே நேரம் செல்லவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன் [நான் ஒரு நல்ல மிமிக்ரி நடிகன் என்பது என் பிள்ளைகள் மட்டுமே அறிந்த ரகசியம்]

நான்கு, அவர்களிடம் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறேன். அவர்களின் நினைப்பு, அவர்களின் தரப்பு என்று ஒன்றை கேட்க எப்போதும் உயன்றுகொண்டிருக்கிறேன். அவர்களிடம் தூரமோ விலக்கமோ நிகழக்கூடாது என எண்ணுகிறேன்.

அப்படியானால் அவையத்து முந்தியிருப்பச் செயல் என்று எதைச் சொன்னார் வள்ளுவர்? நான் விவேகம் சார்ந்து ஒரு தவறான விஷயம் குறளில் இருக்காது என நினைப்பவன். குறள் சொல்வது என்ன?

‘அவை’ என்று குறள் சொல்வது சமூக அரங்கை. ஒரு தந்தையின் கடமை ஏற்கனவே இருக்கும் ஒரு சமூக அரங்கில் தன் மகன் நிற்பதற்குத் தேவையான அனைத்தையும் அளிப்பது. கல்வி, சமூக அந்தஸ்து போன்றவை. நான் இன்றைய சமூக அமைப்பில், இன்றைய கல்வியமைப்பில் என் மகனுக்கு என்னால் சாத்தியமான சிறந்ததை அளிக்க வேண்டும். இதுவே நடைமுறை உண்மை. இதைத்தான் குறள் சொல்கிறது.

ஆனால் குழந்தைகளின் சவாலே வேறு. என் மகன் சம்பிரதாயமான கல்விக்குள் பொருந்த முடியாமல் மூச்சுத்திணறுகிறான். அதில் அவனால் முதலிடம் வர முடியாது. ஒரே பாடத்தை மீண்டும் மீண்டும் படித்து அபப்ழுக்கில்லாமல் பிரதி எடுப்பது அவனுக்குச் சலிப்பூட்டுகிறது. அவனுடைய வாசிப்பு பள்ளிப்பாடத்துக்கு வெளியே விரிகிறது. பள்ளிப்பாடத்தை மட்டுமே மீளமீளப் படிப்பவர்களுக்கானது இந்த அமைப்பு. இதில் அவனை ‘முந்தியிருக்க’ ச் செய்வதற்காக அவனிடம் நான் எதிர்பார்க்கக் கூடாது. அதற்காக அவன் மேல் நான் வன்முறையைச் செலுத்த முடியாது. அவனுடைய சவால்கள் அவனுக்கு மட்டுமே உரியவை, அதன் வெற்றி தோல்விகளும்.

குறளும் அதையே சொல்கிறது. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி அவர் எதிர்பார்த்ததைச் செய்வது என்றோ அவையில் முந்துவது என்றோ சொல்லவில்லை. அவன் தந்தைக்குப் பெருமை சேர்த்தல் என்றே சொல்கிறது. சேர்க்க முயல்தல் என்று கூடச் சொல்லலாம். என் அப்பாவை நான் மகிழ்வித்திருக்கவேண்டுமென்றால் நாகர்கோயிலில் ஒரு நல்ல ஆடிட்டராக ஆகியிருக்க வேண்டும். ஆனால் அபப்டி ஆகியிருந்தால் பாகுலேயன்பிள்ளை என்றபெயரை பல்லாயிரம் பேர் இன்று அறிந்திருக்கமாட்டார்கள்.

இந்தப் புரிதல் இல்லாமையாலேயே பலவகையான பதற்றங்கள் உருவாகின்றன. பொறியியலில் முதல்தர வெற்றியை அடைந்தபின் சினிமாவில் உதவி இயக்குநராக ஒரு பையன் வந்து வெயிலில் காய்ந்து அலைவதைக் கண்டு அந்த தந்தை என்ன பாடுபடுவார் என்று எனக்குப் புரிகிறது. அந்தப் பையனின் இடத்தில் கொஞ்சகாலம் முன்பு வரை இருந்தேன், இப்போது அந்த அப்பாவின் இடத்துக்கு மாறிவிட்டேன்.

ஆக, நமக்கு நம் சமூகம் அளித்திருக்கும் அவையில், கல்வியின் பொருளியலின் மேடையில், முந்தியிருக்கச் செய்வதும் முந்தவேண்டும் என்ற கட்டாயத்தை விதிக்காமலிருப்பதும்தான் நம் கடமைகள்.

ஜெ

கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கான மூன்றாவது தடவை அடிக்கல் நாட்டும் வைபவத்தைத் தொடர்ந்து காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டிருந்த அரசியல் பிரச்சார மேடையில் உரையாற்றிய கிழக்கு மாகாண அமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் புண்ணியமான கருமமொன்றைச் செய்ததன் பின்னர் பகிரங்கமாகப் பச்சைப் பொய்களையே பொதுமக்கள் மத்தியில் கூறியுள்ளார்.

read more on vaarauraikal