Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

வெற்றி விழாப் பற்றி சில துணுக்குகள்….

*ஊர் வலத்தை முன்னிட்டு கடைகள் முழுதாக அடைக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு வழமையாக ஞாயிற்றுக் கிழமை என்பதால் பூட்டப்பட்டிருந்தது.

* வேனுக்கு மேல் ஏற்றி வெள்ளச் சேட், வெள்ளச் சாரன் அணிந்து அழைத்து வரப்பட்டார்.

* கடற்கரையில் இன்று 5000 ஆதரவாளர்களுக்கு மதிய சாப்பாடும் ஏற்பாடாகியிருந்தது. இதற்காக 35 மாடுகள் அறுக்கப்பட்டன.
* மார்கட் வீதியின் ஊடாகச் சென்ற ஊர்வலம் ரஊப் மெளலவியின் பள்ளியில் சற்று நேரம் இடை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது கூட்டம் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
* தண்ணிடாங்கி வீதிக்கு அருகில் நடந்த கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

* காலை பத்து மணிக்கு மேல் வெற்றி ஊர்வலம் ஆரம்பித்தது.
கூட்டத்தின் இடையை மக்கள்….

* இப்போது ஈச்சம் மரம் காய்க்கத் தொடங்கியிருப்பதாகவும்.
* சரியான பெரிய பழமாக இருப்பதாக மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

சற்று முன் கிடைத்த தகவலின்படி இப்றாஹீம் மெளலவியின் மகனின் மரணம் கந்தூரிக்காக கொடி கட்டுவதற்காக மரத்தில் ஏறிய போது ஏற்பட்ட விபத்தே தவிர அது ஊர்வலத்திற்காகக் கொடி கட்ட ஏறிய போது ஏற்பட்ட விபத்தல்ல என்பதனை அறியத் தருகின்றோம்.
அஸர் தொழுகையின் பின் ஜனாஸா நல்லடக்கம் இடம்பெற்றது.
கடந்த சா.த.பரீட்சையில் ஐந்து A மற்றும் 04 B எடுத்த மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏலவே இப்றாஹீம் நத்வியின் ஒரு மகன் மூளைக் காய்ச்சலால் மரணித்ததையும் இந்த இடத்தில் நினைவு கூறுகின்றோம்.

— இலங்கையின் குறிப்பிடத்தக்க முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்களில் ஏபிஎம். இத்ரீஸ் குறிப்பிடத்தக்கவர்.
சில ஆண்டுகளுக்கு முன் பெருவெளியில் சஞ்சிகையில் வெளிவந்த நேர்காணலை இப்போது அவரது இணையத்தில் தொடராக பதிவேற்றம் செய்கிறார்கள். காலப் பொருத்தம் கருதி அரசியல் தொடர்பான இக்கேள்வியை நாம் இங்கு பதிவேற்றம் செய்கின்றோம், காத்தான்குடி நெட்–

இன்றைய முஸ்லிம் அரசியல் நிலை பற்றி உங்களின் பார்வை என்ன?

இலங்கை முஸ்லிம் அரசியல் அண்மைக்காலத்தில் நலிவடைந்தநிலையில் இருப்பதால்தான் பலரும் சொல்கிறார்கள். அதில் உண்மை இருக்கிறது. தென்கிழக்குப் பல்கலைக்கழக எழுச்சிக்குப் பின்னரும் சுனாமிக்குப் பின்னரும் இலங்கை முஸ்லிம் அரசியல் சூழலை நாம் பார்க்கின்ற போது அதன் செல்நெறி மிகவும் நலிவடைந்ததாக, திட்டமிட்டு சூறையாடப்படுவதாகத்தான் நான் உணர்கிறேன். மற்றொரு வகையில் நோக்குகின்ற போது முஸ்லிம் அரசியல் தலைமைகள் சுனாமிக்குப் பின்னரும், மூதூர் பலவந்த ஆக்கிரமிப்பு வெளியேற்றத்திற்குப் பின்னரம் சமூகத்தொண்டு நிறுவனங்களை அல்லது சீர்திருத்த நிறுவனங்களை நோக்கி இறங்கிவந்ததாகத்தான் நான் பார்க்கிறேன். இதை முஸ்லிம் அரசியலை அல்லது கட்சி அரசியலின் பின்னடைவாகக் கொள்கின்ற அதே நேரம் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் எழுச்சியாகக் கொள்ள முடியுமா? என்பது கேள்விக் குரிய விடயம்.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் மக்களின் கைகளுக்குச் சென்றிருக்கிறது என்று சிலர் அவதானிக்கிறார்கள். அதாவது முன்பு ஒற்றைத் தலைமையாக நீக்கமற நிறைந்திருந்த நிலைமாறி அத்தலைமை நிறைவேற்றத் தவறிய, நிரப்பாமல் விட்ட வெற்றிடங்களையும் பணிகளையும் மக்கள் தமது உள்ளுர்தலைமைகள், ஏஜென்டுகளைக் கொண்டு நிறைவேற்ற ஆரம்பத்திருக்கிறார்கள்.

எனினும் முஸ்லிம் கொள்கைவாத அரசியல் இன்னும் சரியாகக் கட்டப்படாத பலவீனமான சூழலில்தான் நாம் இருக்கிறோம். கட்சி அரசியலைத்தான் உண்மையான அரசியல் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறோம். கொள்கைவாத அரசியல் உருவானால்தான் பௌத்த பெருந்தேசியவாத பன்சலையை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியோடு நாம் பேரம்பேசவோ அல்லது சமமாக உட்கார்ந்து எமது விடயங்களை கதைக்கவும் முடியும். அதற்கான அடிக்கட்டுமான வேலைகளை பிற்படுத்தாமல் தொடங்கவேண்டி இருப்பதாக நான் கருதுகிறேன்.

இங்கு முஸ்லிம் கட்சிவாத அரசியல் என்னவென்றால் எங்கள் ராத்தாவின் வீட்டுக்கு முன்னால் ரோட்டுப் போட்டுத்தரனும். அப்படி என்றால் நாங்கள் உங்களுக்கு வோட்டுப்போடுவோம் என்பது. கொள்கைவாத அரசியல் என்பது யாருக்கிட்ட கேட்டு நீங்க பிரிச்சிங்க? பிரிக்கிறதுக்கான அதிகாரத்தைத் தந்தது யார்? இது எங்கள் பாரம்பரிய தாயகம். இதில் இரண்டுபேரும் சேர்ந்துதான் பிரிக்கிறதா? சேர்ந்து வாழ்றதா? என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இந்த இறைமையைப் பேசுவதற்கான இட்டுமையைத் தருவது. இந்தக் கொள்கைவாத அரசியலை காங்கிரஸ் இதுவரைக்கும் செய்யவில்லை. குறி்ப்பாக காங்கிரஸுக்கென்று தொடர்ச்சியான ஒரு கொள்கை விளக்கப் பத்திரிகையோ, துண்டுப்பிரசுரமோ அல்லது ஒலிநாடாவோ பள்ளிவாசலில் ஒரு குத்பா பிரசங்கமோ கூட இல்லை.

மறைந்த தலைவர் அவர்களும் வெகுஜனப் போராட்டங்களாக சிவில் சமூகத்தை உசார்படுத்தக்கூடிய இஸ்லாமிய பண்பாட்டு அம்சங்களைக்கூட அகவயப்பட்ட ஒன்றாகத்தான் மாற்றியமைத்தார். உதாரணமாக நோன்புபிடிக்கச் சொன்னார். இதை வீட்டுக்குள் நோம்பு பிடித்துக் கொண்டிருக்கின்ற உன்னாவிரதத்திற்கு சமமான அம்சமாகத்தான் குறுக்கிப் பார்த்தார். இவற்றை வெகுஜனப் போராட்டமாக கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை எங்களுடைய பண்பாட்டிலிருந்தே நாங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். சிவில் சமூகத்தை உசார் படுத்தலாம். நாடலாவிய ரீதியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஒரு கட்டளை போட்டால் குத்பாவுக்குப் பிறகு ஒரு ஊர்வலத்தை ஒழுங்குபடுத்திச் செய்யலாம். ஆனால் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை ஓட்டுக்காக எங்கள் பிராந்தியங்களுக்கு வந்துபோகின்ற நிலை இருக்கிறதே தவிர ஒரு கொள்கைவாத அரசியலுக்கான உழைப்பு எந்த மட்டத்திலும் இல்லாத நிலைதான் இருக்கிறது.

இதனால்தான் சுனாமிக்குப்பிறகும் தென்கிழக்கு பல்கலைக்கழக எழுச்சிக்குப் பிறகும் முஸ்லிம் அரசியல் வாதிகள் புஸ்வானமாகப் போய்விட்டதாகத்தான் நான் கருதுகிறேன். முந்தி கருணாவுக்கு கப்பம் வாங்கிக் கொடுத்த இடையீட்டாளர்கள் மாதிரி அவர்கள் இப்போது ஏஜென்டு வேலை செய்கிறார்கள். இதற்காக அவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ற சொல்லை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

idrees.lk

காத்தான்குடி யாஹூ குழுமம் அகவை இரண்டில் கால் பதித்து இருக்கும் நேரத்தில்
எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கடல் கடந்து வாழும் அனைத்து உறவுகளையும்
ஊருடன் இணைத்து வைத்ததில் அதன் பங்களிப்பு மிகக் காத்திரமானது.
புதுப் பொலிவுடன் தொடங்கப்பட்டிருக்கும் kattankudi.info மேலும் வளரவும் எமது பிராத்தனைகள்.

இந்த இடத்தில் சில விடயங்களைக் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்.
காத்தான்குடி யாஹு குழுமம் தனக்கென சில மனப்பதிவுகளைக் கொண்டிருக்கின்றது.
அவற்றை பொது நிலைப்படுத்திப் பொருத்திப் பார்க்கிறது.
சில வேளை இணைய முயற்சிகள் குறைவாகவே நடை பெற்றுக் கொண்டிருப்பதால் அவை மேலெழும்பியவையாக இருக்கலாம்.
முதலில்,அகவை இரண்டு என்று தலைப்பிட்டு காத்தான்குடி யாஹு குழுமம் சார்பாக எழுதப்பட்டிருந்த
மடலில் தமது இணைய லோகோவைக் கூட வெட்கமில்லாமல் சிலர் பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு கேள்வியைத் தான் இங்கு முன் நிறுத்த விரும்புகின்றோம்.

காத்தான் குடி வரவேற்பு முகப்பு சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியுடன் அமைக்கப்பட்டது.
அதற்காக அவர் உரிமை கோரி அந்த நிலத்தைச் சொந்தம் கொண்டாட முடியுமா என்ன?
காத்தான் குடி யாஹு குழுமத்தை நாம் அறிந்த வரையில் தெரிந்த வரையில் பழகிய வகையில் பல்கலைக்கழகம் சென்று
paper qualification உள்ள சிலரும் இணைந்து தான் நடத்துகிறார்கள்.
பின் ஏன் இப்படி முட்டாள்தனமாக பதிவுகளை இடுகிறார்கள் என்று தெரியவில்லை.

காத்தான் குடி என்றாலே இப்போது அடையாள சின்னமாக நினைவுக்கு வருவது வரவேற்பு பதாதைதான்.
இதைத் தான் அவர்கள் லோகோ என்றால் உங்களிடம் இருக்கும் இன்ஜினியர்மாறிடமாவது கொஞ்சம் கேக்கக் கூடாதா…?
ஊரின் பொதுவாக் இருக்கும் லோகோவைத் தூக்கி தளத்தில் வைத்து விட்டு அதைப் பயன்படுத்தாதீர்கள் என்று ஒப்பாரி வைத்தால் ….?

வடிவமைத்த இன்ஜினியர் சொன்னால் கூட கொஞ்சம் யோசிக்கலாம்.

இன்றைய இணைய வளர்ச்சி என்பது எங்கொ இருக்கிறது.
அவற்றை இன்னும் சரியாக நாம் பயன்படுத்தவே தொடங்கவில்லை.
இணையத்தில் எமது இயக்கம் என்பது .000000000000000000001 என்ற கணக்கினை விடக் குறைவானது.
ஒரு தளத்தில் சமூகத் தேவை என்பது பன்முகத்தன்மையானது. ஒரு தனி நபரின் செயற்பாடுகளோ அல்லது குழுவின் இயக்கமோ மொத்த சமூகத்தின் தேவையையும் பூர்த்தி செய்வதாகாது.
அதே தளத்தில் பல நோக்கங்களுக்காக பலர் இயங்குவது என்பது யதார்த்தமானது.
தாம் இயங்குவது ஒன்று தான் சமூகத்தின் முழுத் தேவையையும் நிவர்த்திக்கும் என்பது அதிகாரக் கற்பனை.
நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.
எடுத்துக் காட்டாக சகோதரர் ஹிஸ்புல்லாஹ் நினைக்கிறார் தான் மாத்திரம் போதும்
காத்தான் குடி அரசியலை முன் எடுத்துச் செல்லவும் முன் நிறுத்தவும்.
தன் மகளுக்கு ஆண் என்ற நிலையில் தனதன்பு மாத்திரம் போதுமானது என்பது தந்தையின் நினைப்பு.
எட்டு வயதில் இது பொருந்தலாம், ஆனால் பதினெட்டு வயதில்?
இதில் உருவாகும் பிழையான வடிவங்களைத் திருத்தவே நாம் முற்படவேண்டும்.
அதிகாரம் கிடைக்கின்ற போதும் சரி அதனை எடுத்துக் கொள்கின்ற போதும் சரி
மனிதனின் நினைப்பு என்பது இதுவாகவே இருக்கிறது.
ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றுப் பார்வையும் கண்ணோட்டமும் உண்டு.
நீங்கள் நடத்தும் இணையத்தளமான info வைப் பற்றிய எமது பார்வை என்பது ஊரில் நடக்கும் வெள்ளிக் கிழமை ஜும்மாக்களை ஒலி ஏற்றம் செய்வது சரி.
ஏனைய இணையத்தளங்களில் வரும் கட்டுரைகளை நீங்கள் ஏன் மறு பதிவேற்றம் செய்கின்றீர்கள்…….???
-இதற்குள் நீங்கள் எங்களது கட்டுரைகளை பிறர் வெளியிடுகிறார்கள் என்று சொல்வதை ஒரு புறம் வைத்து விடுவோம்-.
தேனி இணையம் அதற்கென்று ஒரு தளம் வைத்திருக்கின்றது.
தினகரன் நாளாந்த பத்திரிகை அதற்கென்று ஒரு தளம் வைத்திருக்கின்றது.
ஏன் வார உரைகல் கூட அதற்கென்று ஒரு தளம் வைத்திருக்கின்றது.
புதிய நாளை கூட அதற்கென்று ஒரு தளம் வைத்திருக்கின்றது.
இதில் வருவதையெல்லாம் தொகுக்கவா நீங்கள் இணையம் நடாத்துகிறீர்கள் ?
எல்லாவற்றுக்கும் ஒரு நியாயம் இருக்கிறது.
ஒரு மாற்றுப் பார்வை இருக்கிறது.
நாம் மாத்திரம் தான் சரி என்பது தான் மிகப் பிழை என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.
பல் வகைமை, பன்மைத்துவம் என்பதன் அர்த்தம் அதன் நோக்கங்களையும் தேவைகளையும் அறிந்து கொள்வதில் அல்லது உணர்ந்து கொள்வதில் அல்ல, அவற்றைப் புரிந்து கொள்வதில் தான் இருக்கின்றது.

ISLAMIC WALLPAPERS

இஸ்லாம் தொடர்பான நிழற்படங்களைக் காண்பது இணையத்தில் மிகவும் கடினமான ஒன்றாக
இருக்கின்றது.

இந்த வகையில் வோல் பேப்பர்ஸ் மிக முக்கியமானவை.
எமது இலத்திரனியல் உபயோக உலகில் இஸ்லாமியத் தன்மை சார்ந்த
இவற்றின் முக்கியம் கூடிவருகிறது.
அந்த வகையில் இந்தத் தளம் எமது கையடக்கத் தொலைபேசிகளிலும்
கணனிகளிலும் அல்லது எமக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பை பரிமாறிக் கொள்வதில்
இஸ்லாமிய அடையாளங்களைப் பேணுவதில் துணை செய்கிறது.

islam-wallpapers

தமிழ் பேசும் சூழலில் கல்விக்கான இணையங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கான இணையம் மிகவும் அரிது. இரண்டு நாட்களுக்கு முன்பாக மின்னஞ்சலில் tamilvu எனும் ஒரு இணையத்தை அன்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.

சின்னஞ் சிறார்களுக்கு கல்வியூட்டல் நடவடிக்கைகளுக்காக என்ற இலக்குடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாம் மூன்றாம் வருடம் வரை கல்வி கற்கும் குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

www.tamilvu.org

கீழுள்ள இணைப்பை பயன்படுத்துவதன் மூலமாக இலங்கையின் 07வது நாடாளுமன்றத் தேர்தல்
தொடர்பான முழுமையான விபரங்களை எமது இணைய அன்பர்கள் அறிந்து கொள்ள முடியும்.

http://blog.dzoneonline.com/

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 196 பேரை வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்வதற்கென மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் முதற் தடவையாக 22 மாவட்டங்களிலும் நேற்று சுமுகமான வாக்களிப்பு இடம் பெற்றது.

50ற்கும் 55 வீதத்திற்குமிடையில் வாக்களிப்பு இடம் பெற்றது.

அனுராதபுரம் மாவட்டத்தில் 45 வீத வாக்களிப்பும்,
வன்னி மாவட்டத்தில் 33 வீத வாக்களிப்பும்,
யாழ். மாவட்டத்தில் 19 வீத வாக்களிப்பும்
புத்தளம் மாவட்டத்தில் 55 வீதமும்,
நுவரெலியா மாவட்டத்தில் 45 வீதமும்,
மன்னார் மாவட்டத்தில் 55 வீதமும்
பதுளை மாவட்டத்தில் 50 வீதமும்
திருகோணமலை மாவட்டத்தில் 50 வீதமும் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இம்முறை தேர்தலில்

36 அரசியல் கட்சிகளும்
301 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டதுடன்
இவற்றின் சார்பில் 7620 வேட்பாளர்கள் களத்தில் குதித்திருந்தனர்.
ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் 11,875 வாக்களிப்பு நிலையங்கள்.

thinakaran

அறிவித்தல்

அஸ்ஸலாம் அலைக்கும்.
தற்போது ஊரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கின்றது என்பதனை அறியத் தருகின்றோம்.
– காத்தான் குடி நெட் –

சேர்ர அரசியல்,
கட்சி அரசியல்,
நமது அரசியல்

அரசியல் பற்றிய அறிவு எந்தளவுக்குத் தான் பொது மக்கள் பரப்பிக்குள் ஊடுருவிப் போயிருக்கிறது. கட்சி அரசியல் இஸ்லாமிய அரசியல் கிடையாது என்பதை எப்படித் தெளிவாக சொல்ல வேண்டும் ? என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு வழி இருக்கிறது. ஆனால் அதைக் கைக் கொள்வதில் எமது மெளலவிமார்களுக்கும் தயக்கம், அரசியல்வாதியும் தன் அதிகாரத்தினால் அதைத் தடுத்து நிறுத்தவும் முயல்கிறான்.
அண்மையில் நூறானியாப் பள்ளிவாயலில் பிர்தெளஸ் நளீமி நிகழ்த்திய குத்பா பிரசங்கத்திற்கு எதிராக சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அனுப்பிய கடிதம்.
குறைந்த பட்சம் நாம் அதனை எப்படிப் பார்க்கிறோம் என்றால் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் மொக்கையாக அனுப்பப்பட்டிருந்தமை. சகோதரர் ஹிஸ்புல்லாஹ் தமது அரசியல் பிரச்சாரங்களில் பொய் சொல்கிறார் என்று நாம் சம்மேளனத்திற்கு கடிதம் அனுப்பினால் அது தொடர்பில் எப்படியான நிலைப்பாடுகள் எடுக்கப்பட வேண்டும் ?
குற்றம் சுமத்தும் போது அவற்றிற்கான ஆதாரங்களைத் தான் முதலில் குற்றம் சுமத்தும் தரப்பில் இருந்து கேட்க வேண்டும். இஸ்லாமிய சட்ட மரபும் அதுவாகத் தான் இருக்கிறது.
இஸ்லாமிய சட்டவியல் ஒழுங்கில் உள்ள முக்கியமான ஒரு விதி ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் சுத்தவாளி என்பதாகும்.
நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. முடிந்து போன ஒரு விடயம் குறித்து இனிப் பேசுவதன் பயன் என்ன ?
இலங்கைக்குள் ஒரு முஸ்லிம்கெளுக்கென கொள்கை அரசியலை முன்னெடுக்க எமது ஊரில் மரம் வைத்தவர்கள் நாம். துரதிஷ்டமாக இன்று இலங்கைக்குள் மிக மோசமான இஸ்லாமிய அரசியலை முன்னெடுக்கும் சமூகமாக நாம் இருக்கின்றோம்.

சேர்ர அரசியல்

என்ன தான் சொன்னாலும் ஊருக்கு சேர் இல்லாட்டி எதுவும் நடக்காது என்பது எமது மக்களின் ஐதீகமாக இருக்கிறது. மரபான ஐதீகங்களின் மீதான கேள்வியும் அவற்றை உடைத்து மாற்றங்களின் மீது மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதும் மிகக் கடினமானதாகும்.
சேர் இன்றளவில் செல்வாக்குடன் ஊருக்குள் இருப்பதற்கு துணை செய்கின்ற விடயங்கள் நிறைய இருக்கின்றன.
– தொழில் எடுத்துக் கொடுத்தமை
– ஆதரவாளர்களின் தரத்திற்கு ஏற்ப கொன்றக்ட் கொடுத்தமை
இந்த இரண்டு விடயங்களையும் நாம் மிக முக்கியமாக நாம் பார்க்கிறோம்.
சேருக்கான ஆதரவைத் திரட்டுவதில் இவர்களின் பங்களிப்புக்குக்கள் மிகக் காத்திரமானதாக இருக்கிறது.
இதில் மிகத் தெளிவாகவே தெரிகின்ற விடயம். அவரவர் சுயம் சார்ந்து தமது விருப்புக்கு ஏற்ற ஒரு விடயத்திற்காக அதனைப் பொதுப்படுத்த முனைகிறார்கள்.
தமக்கு கொடுக்கப்பட்ட சலுகைக்கு விசுவாசத்தைக் காட்ட முழு ஊரையும் ஒரு அணியில் திரட்ட முயல்கிறார்கள் என்பது தான் இவர்கள் செய்யும் மடமை.

இதுவரை காலமும் இவ்வழி முறை கைகொடுத்தது. ஆனால் இனி வரும் காலங்களில் அவை எந்தளவு தூரம் நிலைக்கும் உதவும் என்பது கேள்விக் குறி தான்.

கட்சி அரசியல்

இது முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் தோற்றத்தோடு மாத்திரம் நாம் சுருக்கவில்லை, அதனோடு மாத்திரம் சுருக்கிப் பார்ப்பதும் தவறான விடயமுமாகும்.

காலங்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளராக ஒருவர் இருப்பார்; வெளித் தெரியும் காரணமாக நாம் இப்படி வேணுமானால் சொல்லலாம் – வியாபாரிகளுக்கு சாதமாக இருப்பது.
இது போன்று வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம் அது காலம் காலமாக அந்தக் குடும்பத்தை தொடர்ந்தும் கட்சி அரசியலில் நிலைப்படுத்தியிருக்கும். இவர்களது ஆதரவு வெளிப்படையானதாகவும் இருக்கும் ஊரளவில் தெரிந்ததாகவும் இருக்கும்.
இதில் மிகவும் வலுவானதாக நாம் சொல்வது தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசியல்.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுக்குப் பின் காங்கிரஸின் தலைவராக யார் வந்திருந்தாலும் என்ன தான் முடிவுகளை எடுத்தாலும் தொடர்ந்தும் தாமாகவே சில நியாயங்களைக் கற்பித்துக் கொள்வார்கள்.

இதில் சிந்தனை என்பதற்கே எந்த இடமும் கிடையாது. தமக்கு சிந்திக்கும் திறன் இருக்கின்றது என்பதனை இவர்கள் உண்மையில் மறந்தே போய் இருப்பார்கள்.
இவர்களுக்கு நாம் தான் சொல்ல வேண்டும் ; உங்களுக்கும் மூளை இருக்கிறது நீங்களும் சுயமாக சிந்திக்கலாம் ; முடிவு எடுக்கலாம்.

கொள்கைவாத அரசியல்

இலங்கைக்குள் இது எந்தளவு தூரம் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பது பெரும் கேள்வி. நாம் இதனுடாக எதனைச் சொல்கிறோம் என்பதற்கு நபி ஸல் அவர்களின் ஒரு ஹதீஸை முன்வைக்கின்றோம். ரஸூலுல்லாஹ் ஸல் அவர்கள் சொன்னார்கள் : உங்களில் மூன்று பேர் இருந்தால் அதில் ஒருவரைத் தலைவராக்கிக் கொள்ளுங்கள்.
நாம் உலகளாவிய முஸ்லிம் சமூகம் (உம்மத் ).
இவ்வுலகில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார். உலகில் 150 மில்லியன் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இலங்கையில் 02 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறோம். எங்களுக்கெல்லாம் யார் தலைவர் ?.
மிக வினயமாக நாம் சிந்திக்க வேண்டிய கால கட்டம். தியாகங்கள் இன்றி எமது வரலாறு வெற்றியானதாக அமைய மாட்டாது. நான், எனது மனைவி, எனது குழந்தைகள் என்ற சிந்தனைக்கு அப்பால் நாம் , எனது சமூகம், எனது ஊர், நான் சர்வதேசிய உம்மத் என்ற சிந்தனையில் வளர வேண்டும். அவற்றை வளர்க்க வேண்டும்.
இந்த இடத்தில் நபி ஸல் அவர்களின் எச்சரிக்கையை நாம் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

‘நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
– பாகம் 1, அத்தியாயம் 3, எண் 100 -.

LAWS OF INHERITANCE by mufti yoosuff

விண்ணப்ப முடிவுத் திகதி 2010-04-01.

கடித உறையில் மிகத் தெளிவாக தொழில் வழிகாட்டல் அலுவலர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம் என்பது எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.
இவ்வறிவித்தலானது 2010-02-26 வர்த்தமானியில் வெளிவந்தது என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

விபரங்கள் காண எமது இணைப்பை அழுத்துங்கள்.
முதல் இணைப்பில் நாம் விண்ணப்பபடிவத்தை இணைத்துள்ளோம்.

App.CGOkky<

வர்த்தமானியை விபரங்களுக்காக இணைத்திருக்கின்றோம்.

Gazette kkywrdpr

“சினிமா குறித்து பல்கலைக்கலகங்களில் எப்போதாவது பேசப்படலாம். ஆனால் அதற்குரிய கல்வி அந்தஸ்து தரப்படவில்லை. அறிவியல் மற்றும் ஆராய்ச்சிகள் நிகழும் இடங்களில் இக்கலை ஏற்புடையதாய் இல்லை. நம் இளைய தலைமுறை ஏதாவது ஒரு கலையின் அழகியல் குறித்து நேரடியாக அனுபவப்பட்டிருக்கிறார்கள் என்றால் அது சினிமாதான். ஆனால் பள்ளிப் பாடத்தில் சினிமா பற்றி எதுவுமே கிடையாது. ஆனால் சினிமா மக்கள் கலையாக உள்ளது. காரணம் மக்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதல்ல. துரதிஸ்டவசமாக மக்களை அது பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான். மக்களின் மனப்பாங்கை கருத்துக்களை சினிமா உருவாக்குகின்றது. சினிமா குறித்து ரசனை மக்களிடம் இல்லை. அது அவர்களுக்கு வழங்கப்படவில்லை. சினிமா பற்றிய ரசனை, அறிவு அவர்களுக்கு நகர்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா என்னும் மாபெரும் சக்தியின் முன்பாக அவர்கள் செயலிழந்து நிற்கிறார்கள்.

சினிமா கடந்த ஐம்பது ஆண்டுகளில் முக்கியமான சக்திவாய்ந்த கலையாக உலகம் முழுவதும் வளர்ந்துள்ளது. ஆனால் பண்பாட்டின் அங்கமாய் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. என் இனிய நண்பர்களே! இசை, இலக்கியம், ஓவியம் பற்றி ஒன்றுமே அறியாதவரை கற்றறிந்தவராக ஏற்றுக்கொள்வீர்களா? இரு பெரிய பட்டங்கள் பெற்ற உங்களுக்கு சினிமா பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனாலும் கற்றறிந்த மேதையாக உங்களை எல்லோரும் கருதுகிறார்கள். அது தவறு. 1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்கள் முதன் முதலில் ஒளிதரும் பிம்பங்களை திரையில் காண்பித்த போது பிறந்தது ஒரு கலை மட்டுமல்ல அப்போது மனித மூளையில் உணர்வதற்கும் புரிந்துகொண்வதற்கும் ஒரு புதிய அமைப்புத் தோன்றியது என்பதுதான் உண்மையாகும். அதன் மூலம் மானுட வளர்ச்சிக்கான புதிய பாதை போடப்பட்டது. நல்ல இசை உணர்வுக்கு அடிப்படைச் சூழ்நிலையும் இசை உணர்வுக்கான மூலமும் இசையறிவும் தேவைப்படுகின்றன. அதே நேரத்தில் இசையும் காதுகளை அதை ரசிப்பதற்கேற்றவாறு வளப்படுத்துகிறது, மாற்றுகிறது என்ற காரல் மார்க்ஸின் அற்புதுமான கூற்று சினிமாவுக்கும் பொருந்தும். கடந்த ஐம்பது ஆண்டுகளில் சினிமாவின் வளர்ச்சி அதை நிரூபித்துள்ளது.”

இது சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் சினிமா பொன்விழாவை பாடசாலைகளில் பல்கலைக்கலகங்களில் கொண்டாட வேண்டுமென விரும்பிய Bela Balazs என்ற ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த சினிமாக் கோட்பாட்டாளர் ஒரு வரலாற்றுப் பேராசிரியருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியாகும். வளரும் தலைமுறையினருக்கு சினிமாவை ஏன் கற்பிக்க வேண்டும் என்பதற்கு இது வலிமையான ஆதாரமாகும்.

ஏன் சினிமாவை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இன்று நாம் குழந்தைகளுக்கு எப்படியாவது ஆங்கிலத்தைக் கற்பித்து விட வேண்டுமென்று படாதபாடுபடுகிறோம் அல்லவா? அது ஏன்? இன்றைய நிலையில் தாய் மொழிமட்டும் ஒரு குழந்தைக்குப் போதாது. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருந்தால் தான் குழந்தையால் இந்த யுகத்தின் சவாலை எதிர் கொள்ள முடியும் என்று நாம் நம்புகின்றோம். தாய் மொழி என்பது அன்றாட வாழ்வில் நாம் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள உதவுகின்றது. ஆங்கிலம் அந்நிய மொழி என்றாலும் அது படித்தவர்களுக்கு இரண்டாம் தாய்மொழியாகி விட்டது. ஆங்கிலம் இன்றி குழந்தை உயர்கல்வியை தெடர முடியாது. அறிவு சார்ந்த பல துறைகளில் நிபுனத்துவம் பெற முடியாது. ஆங்கிலத்தில் தான் எல்லாத் துறைகள் சம்பந்தமான நூல்களும் கூடுதலாக வெளிவருகின்றன. ஊர், மாவட்டம், நாடுகள் என்ற எல்லைகளைத் தாண்டி செயற்படவும் ஆங்கிலம் அத்தியவசியமாகின்றது. அவ்வாறே கணிதமும் நமது அன்றாட வாழ்வுக்கு நடைமுறைக்கு தேவைப்படுகின்றது. கடைக்காரனுக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையை கணக்கிடுவதிலிருந்து பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வது வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் கணிதம் எல்லாத் துறைகளிலும் தீர்க்கமாக நிறைந்திருக்கின்றது. அவ்வாரே விஞ்ஞானமும் நம்மைச் சுற்றியுள்ள உண்மைகளை விந்தைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றது.

ஆனால் பண்பாடு (Culture) குறித்து குழந்தைகளுக்கு நாம் கற்பிக்கப்போகிறோமா? அவ்வாறு கற்பிப்பதற்கு என்ன வழிமுறைகளை செய்கின்றோம். உணவு, உடை, வாழ்வு முறை, பழக்கவழக்கங்கள் புறக்காரணிகளால் இவற்றில் ஏற்படும் தாக்கங்கள், மாற்றங்கள் குறித்த ஆய்வுதான் பண்பாடு ஆகும். பண்பாடு குறித்து ஒருவர் பயிலும் போது அதில் வரலாறு, அரசியல், நாடகம், இசை, சினமா, தொழிநுட்பம் எனப் பல விடயங்களை அறியமுடிகின்றது. குழந்தைகளுக்கு சினிமாவா? அப்படியென்றால், பிஞ்சு உள்ளத்தில் மோசமான காட்சிகள் எல்லாம் பதிவாகிவிடுமே என்று நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம்.

நான் சினிமா பற்றி குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று சொல்வது சினிமா என்ற கலையின் தோற்றம் வளர்ச்சி, அது உருவாக்கிய மாபெரும் கலைஞர்கள், 21ம் நூற்றாண்டின் அதிவேக தொழிநுட்ப வளர்ச்சியில் சினிமா எடுத்துள்ள பரிமானங்கள், டெலிவிஷன் செயற்கைக் கோள்கள் என்பவற்றின் வரலாற்றையும் அவற்றைக் காண்டுபிடித்த விஞ்ஞானிகள் அவற்றின் உபயோகம் போன்ற பல விஷயங்கள் குழந்தைகளின் வயது நிலைகளுக்கேற்ப விளக்கலாம்.

சினிமா எல்லோருடைய வாழ்வையும் விதிவலக்கின்றி ஆக்கிரமித்துள்ளது. சினிமா பார்த்தால் சீரழிந்து போவீர்கள் என்ற கோஷமெல்லாம் சீக்கிறமே படிந்து போய்விட்டன. சினிமா, இசை, ஓவியம், இலக்கியம், நாடகம் என அனைத்தையும் உட்கொண்ட மாபெரும் கலையாகும். அது வெறும் மகிழ்விப்புக் கலை மட்டுமல்ல. ஒரு பண்பாட்டு பதிவுகையாகவும் ஆவணமாகவும் கொள்ளத்தக்கனவாக ஒரு நூற்றாண்டையும் தாண்டி வளர்ந்து செல்கின்றது. வேறு எந்தக் கலையாலும் சாதிக்க முடியாத அளவுக்கு மக்களின் வாழ்வை ஆட்கொண்டு விட்டது.

ஆனால் பொதுவாக தொழில் நுட்பத்தை (முற்றிலும் தொழில் நுட்பம் சார்ந்த சினிமாவை), விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை நாம் தீமைகளின் பட்டியலிலே சேர்ந்து வந்திருக்கின்றோம். இந்த எதிர் மறைப் பார்வை எம்மைப் பின்னோக்கித் தள்ளுவதில் தான் வெற்றி கண்டுள்ளதே தவிர எம்மை அதன் பாதிப்பிலிருந்து விடுவிக்கவில்லை என்பதை மறந்து விடக் கூடாது. எதிரிகளின் செயற்படுத்தும் அந்தக் கமராவை நாம் செயற்படுத்தாமல் அந்தக் கலையை மாற்றியமைக்க முடியாது. சினிமா முற்றிலும் தொழில் நுட்பம் சார்ந்த கலை. அக்கலை ஆரம்பத்தில் நமது பக்கத்தில் தான் இருந்தது. ராஜசீயவக்ரமய (அரச சாகஸம்) என்ற இலங்கையின் முதல் படத்தை எடுத்தவர் நூர்பாய் என்பவர் தான். சிறுபான்மைச் சமூகத்தவர்கள் தான் ஆரம்பத்தில் இலங்கை சினிமாவுக்கு பங்களித்துள்ளார்கள். எல்பின்ஸன், ஒலிம்பியா எல்லாம் எம்மவர் நடாத்திய பாரசீக நாடகக் கம்பனிகளின் கொட்டகைகளின் பெயர்களாகும்.

ரஷ்ய புரட்சியாளரான லெனின் தனது தீர்க்க தரிசனப் பார்வை “எல்லாக் கலைகளையும் விட சினிமா என்பது மிகவும் முக்கித்துவம் வாய்ந்த கலையாகும்” என்றார். அவர் கூறிய அந்த நூற்றாண்டு கடந்து இன்னும் சினிமா மற்றொல்லாக் கலைகளையும் விட விஞ்சியதாகவே இருப்பது சினிமா சக்தியை உணர்ந்தால் போதுமா? நமது புறத்தை வென்றெடுக்க அரசியல் சினிமா தீங்காகப்படுமானால் அகத்தை வென்றெடுக்க குழந்தை சினிமா தேவையாகும்.

குழந்தைகள் மனித உடலைத் தான்டிய சக்தியுடன் சாகசத்தில் ஈடுபடுவதையே குழந்தைகள் சினிமா என்று கருதுவதும் தவறு. குழந்தைகள் குறித்த திரைப்படங்கள் குழந்தைகள் பார்க்கும் படி எடுக்கப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. பல திரைப் படங்கள் குழந்தைகளுக்கு அபாயகரமானதாகவும் அழிவுகளுமானதாகவும் இருக்கும் கரணிகளாக பெற்றோர்களையே சித்தரிக்கின்றன, பெற்றோர்கள் தர்மம், வன்முறை நீக்கம் செய்து கொள்ளாதவரை உண்மையான சமூகத்தில் நாம் எதிர்பார்க்க முடியாது.

விஸ்வாமித்ரன் என்ற சினிமா ஆய்வாளர் கூறுகின்றார். ஒவ்வொரு குழந்தை திரைப்படமும் முதலில் பெற்றோருக்கானது, வயது முதிர்ந்தவர்களுக்கானது. அவர்களது பார்வையை விசாலப்படுத்துவதற்கானது. அவர்கள் அடைய வேண்டிய புரிதலை அறிவுரைப்பதற்கானது. திரையில் பல்வேறு அகலப்படல்களோடு மூச்சுத்தினறத் தவித்துக் கொண்டிருக்கும் அதே சிறுவர்கள் தான் நிஜத்தில் அவர்களின் இல்லங்களில் வசிக்கும் சாகசம் செய்யத் தெரியாத சிறுவர்கள் என்பதை உணரச் செய்வது அந்தச் சிறுவர்கள் நிகழ் பொம்மைகளைப் பார்க்காமல் சகமனிதனால் பாவிக்கச் சொல்லிக் கற்றுத் தருவது. இத்தனை படிநிலைகளைக் கடந்திருந்தால் தான் குழந்தை சினிமா என்பது சிறுவரை சென்றடையும் சாத்தியம் பெறும் அதுவரை பெரியவர்களுக்கு மட்டுமேயான காட்சிப் பாட நூல்தான் அது.

தனிமனித மாற்றமே சமுகமாற்றத்தின் விதை என்பதை இறைத்தூதரும், அல் குர்ஆனும், சுன்னாவும், வலியுறுத்துகின்றன.
ஏபிஎம்.இத்ரீஸ்

கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக பேராசியர் அ.மார்க்ஸ் எழுத் தாளர், ஆய்வாளர், முன்னாள் பௌதீகவியல் பேராசிரியர் -சென்னை மாநிலக் கல்லூரி. மாநில அமைப்பாளர் – மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு.இலங்கையில் இன்றைய சூழலில் நபிகளை
இலங்கை முஸ்லிம்களுக்கும் மாற்றுமத சகோதரர்களுக்கும் அறிமுகமும் புரிந்துணர்வு கொள்ளவும் செய்கின்றன மிகப் பெரும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள் . நேற்றைக்கு முந்திய தினம் காத்தான்குடியில் கலந்துரையாடலில் ஈடுபட்ட பேராசிரியர் நேற்று அட்டாளைச்சேனையில் அதே போன்ற ஒரு நிகழ்விலும் பங்கு கொள்டார்ரகள் .
தமிழ் எழுத்துலக சூழலில் நபியவர்கள் பற்றி பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் அளவுக்கு யாரும் மிக நவீனமாக நபியை முன் நிறுத்தவில்லை .
நபியை நேசிக்க வேண்டும் அவர்கள் மீது ஆயிரமாயிரம் ஸலவாத் சொல்லியும் அல்லது கந்தூரி கொடுத்தாயினும் என்று சொல்கின்ற அலவி மெளலானாக்களோ அல்ல .
நபியை இன்னும் திக்ர் மஜ்லிஸ்களுக்குள்ளும் கந்தூரி நார்சாவாகவும் சுருட்டி வைத்திருப்பவர்கள் இவர்கள் தான் .

நேத்ரா டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நபியவர்களின் ஸீரா நிகழ்ச்சி அலவி மெளலானாவின் தொலை பேசி அழைப்பின் காரணமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டது .
இந்த நிகழ்வானது நபியின் சீராவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிகப் பெரும் அநீதியாகக் கருத வேண்டியது . இந்நிகழ்வில் பங்கு கொண்டவர்களில் நளீமியாவின் சிரேஷ்ட விரிவுரையாளரான ஏபிஎம். இத்ரீஸ் மாத்திரமே முஸ்லிம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நவீன உலகின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் சக்தி சீராவுக்கு மாத்திரமே இருக்கிறது .அதன் மீது நிகழ்த்தப்படுகின்ற மறுவாசிப்பானது அனைத்துக்குமான் தீர்வாக அமைய முடியும் என்பது தான் மாற்றுமத சிந்தனையாளர்கள் இன்று வந்தடைந்திருக்குன்ற நிலையாகும். மிகக் கவலையானது சாணக்கியம் மிக்க அரசியல் தலைவர் எமது நபிகளார் என்று சொல்லிக் கொள்ளும் நம் சமூகம் அவர் மீதான மறுவாசிப்பை ஏன் தடுத்து நிறுத்துகிறது என்பது தான் புரியவில்லை .

நபியை நேசித்தல் என்பதன் அர்த்தம் அவர்கள் மீது ஸலவாத் சொல்வதனோடு சுருங்கிய ஒரு விசயமல்ல என்பதை அலவி மெளலானா போன்ற அரசியல் அபூ நவாஸ்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள் .
இலங்கையின் ஸாஹிராக் கல்லூரியில் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆற்றிய உரையின் தலைப்பு –
நபிகள்: சமூக அரசியல் ஆளுமை என்பதாகும் .இஸ்லாத்தை ஏற்றிராத மாற்றுமத அறிஞர் ஒருவர் இன்றைய சூழலில் நபிகள் எப்படி பார்க்கப்பட வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கும் மனநிலை, கண்ணோட்டப் புள்ளியை அலவி மெளலானா போன்றவர்கள் எப்போது வந்தடையப் போகிறார்கள்.
இஸ்லாம் கூறும் சமூக மாற்றம் எப்போது தான் வரும் …? இத்தகைய தலைவலிகள் நிறைந்த தலைமைகள் ஆக்கிரமித்திருக்கும் நிலமையில் …?.
நபியை நேசித்தல் என்பதன் அர்த்தம் விசாலித்தது . அல்குர்ஆனை தனது பண்பாடுகளாகக் கொண்டிருந்த நபியவர்களை இன்னும் நாம் மிகச் சரியாக எமது அரசியல் , சமூகத் தளங்களில் பயன்படுத்தத் தொடங்கவில்லை .
இந்தப் பின் போக்குத்தனம் மாறவேண்டும் . பதின் நான்கு நூற்றாண்டுகளாக வாழும் கொள்கைக்கு நடைமுறை பாவனைத் தன்மையைக் கொடுத்தவர்கள் எமது நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் .
என்றோ அழிந்து போன கொள்கைக்காக இன்னும் கார்ல் மார்க்ஸும் லெனினும் கொண்டாடப்படுகிறார்கள்.
உயிர் வாழும் கொள்கையைத் தந்து விட்டுப் போன நபி பற்றி நாம் வெறும் வார்த்தைப் புகழ்கள் மட்டும் துதி பாடிப் பாடி இருப்பதன் அர்த்தமென்ன …?
அல்குர்ஆனையை இன்னும் எமது சூழலுக்கு மிகச் சரியாக வாசிப்புச் செய்யவில்லை , இதில் சீராவை மறுவாசிப்புச் செய்வதற்கு மிக நீண்ட அனுபவமும் பக்குவமும் அதை விட மிக முக்கியம் தன் சுயநலம் தாண்டிய சமூகம் சார்ந்த உணர்வும் தேவைப்படுகின்றது.

மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கள்ளியங்காடு எனப்படும் முஸ்லிம் கொலனியில் தமிழ் மக்கள் அத்துமீறிக் குடியேற்றப்பட்டுள்ளதையும், அங்கு அமைந்திருந்த மஸ்ஜிதுல் பிர்தௌஸ் பள்ளிவாசலைப் புனரமைப்புச் செய்ய முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதையும் அப்பள்ளிவாசலின் முன்னாள் தலைவரான ஜனாப் துவான் ஆரிப் சராவுதீன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட காணி ஆணையாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

மேற்படி பள்ளிவாசல் எல்லைக்குள் அத்துமீறிக் குடியிருப்பவர்களையும், அங்கு கட்டிடங்கள் அமைக்கப்படுவதையும் உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறும், அதற்கான தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறும் அவர் மாவட்ட அரசாங்க அதிபரையும், காணி ஆணையாளரையும் கோரியுள்ளார்.

தொடர்ந்து படிக்க …
vaarauraikal